inscriptions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
inscriptions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மே, 2011

Inscription found at thiruvannaamalai: திருவண்ணாமலையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
 
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த 4 மாதங்களாக தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளை கண்டெடுத்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் அருகே தரையில் கல்வெட்டு ஒன்று புதைந்திருந்ததை, தோண்டி எடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தனர்.அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனால், கி.பி., 1012-1044ல் உருவாக்கப்பட்டது என்றும், ராஜேந்திர சோழன் வெற்றிகள் அதில் குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்தது. ராஜேந்திர சோழன், ஈழ அரசனை வென்று, அவனது மணி மகுடத்தையும், ஈழ மன்னனின் தேவியரின் மணி மகுடத்தையும் பறித்து வந்ததுடன், முதல் பராந்தக சோழன், பாண்டியர் மீது படையெடுத்து வெற்றி கண்ட போது, சுந்தரபாண்டியனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த செய்தியையும், சிங்கள அரசனையும், இரட்டபாடி மன்னனையும், கோசல நாட்øயும், மலை நாடு(கேரளம்) மற்றும் கலிங்க நாட்டையும் வெற்றி பெற்ற செய்திகளும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது, என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

தோத்திர கல்வெட்டு திறப்பு



காஞ்சிபுரம், ஆக. 6: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சங்கராச்சாரிய  ஜயேந்திர  எழுதிய அம்மன் தோத்திரக் கல்வெட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மனை பிரார்த்திக்கும் விதமாக சரஸ்வதி சுவாமிகள் 5 தோத்திரங்களை உருவாக்கியுள்ளார். இந்த தோத்திரத்துடன் ஆதிசங்கரரை பூஜிக்கும் 2 ஸ்தோத்திரங்களையும் படைத்துள்ளார். இவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு காமாட்சி அம்மன் ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். அதற்கு முன் அவர் காமாட்சி அம்மன் ஆலயத்துக்குள் சென்று அம்மனை பூஜித்தார். ஆலயத்தில் பூர்ணகும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.
கருத்துக்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சிறு மாற்றத்திற்குக் கூட இசைவு தராமல் பழைமையைப் பேணுகிறார்கள். எனவேதான், தஞ்சாவூர் பெரிய கோயிலில் அதனை எழுப்பிய இராசஇராச சோழனின் திருவுருவப் படிமத்திற்கு இசைவு தரவில்லை. அதைப்போல் தமிழக அரசும் கோயில்களின் பழமைக்கு முரணாகக் கொலைக் குற்றாளிகள் உட்பட யாராக இருந்தாலும் புதிய கல்வெட்டைப் பதிக்க இசைவு தரக்கூடாது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோவிலின் தூய்மை (புனிதம்) காப்பாற்றப்படவேண்டும். இறையன்ப்ர்களின் மனததைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை அரசு ஊக்குவிக்கக் கூடாது. 
இறைநெறிமன்றம் சார்பில்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்