திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே மின் கட்டண உயர்வு: முதல்வர் கருணாநிதி


சென்னை, ஆக.1: மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்டும் வகையில், தாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பைக் குறைத்தல், புதிய மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி மின் உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மின் கட்டண உயர்வைத் தவிர்த்திருக்க முடியும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளால் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை குறைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வேறு சில கட்சியினரும் வெளியிட்டுள்ளனர்.தமிழக அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்ட காரணத்தினால்தான், கடந்த 4 ஆண்டு காலமாக மின் கட்டண உயர்வினை தவிர்த்து வந்தது. முதல் நாள் இரவு அறிவித்து மறுநாள் காலையில் மின் உற்பத்தியைத் தொடங்கிவிட முடியாது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.அனைத்துத் தரப்பினரையும் இந்த மின் கட்டண உயர்வு பாதிக்கும் என்று சிலர்  தெரிவித்துள்ளனர். அது தவறான தகவல் ஆகும். தமிழகத்தில் வீடுகளில் மின்சாரம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சம் ஆகும்.இவர்களில் இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரம் ஆகும். இவர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதாவது, மூன்று சதவீதத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் வீடுகளில் ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் ஆகும்.குடிசைவாசிகளுக்கு மின் கட்டணம் கிடையாதுகுடிசைகளுக்கு மின் கட்டணம் பத்து ரூபாய் என்று செய்தி வந்துள்ளது. இது சரியல்ல. இந்தப் பத்து ரூபாய் கட்டணத்தையும் மின்வாரியத்துக்கு தமிழக அரசு தந்துவிடுகிறது. அதனால், அனைத்துக் குடிசைவாசிகளுக்கும் மின் கட்டணமே கிடையாது என்பதுதான் உண்மை. இத்தகைய குடிசைவாசிகள் தமிழகத்தில் 11 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆவர்.மின் பகிர்மான இழப்பை சரிகட்ட முயற்சிமின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பு தமிழகத்தில் 18.9 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் மின் பகிர்மானத்தில் குறைந்த அளவு மின் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த மின் இழப்பைக் கூட சரிக்கட்டுவதற்காக தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.உயர்வு ஏன்?கடந்த 4 ஆண்டுகளில் மின் கட்டணத்தையோ, பஸ் கட்டணத்தையோ தமிழக அரசு உயர்த்தவில்லை. மின்வாரியத்துக்கு மிக அதிக இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில். தமிழக அரசு அதற்கு மானியங்களை வழங்கி வருகிறது. தற்போதுள்ள நிலைமையை ஓரளவுக்கு சரிகட்டும் வகையிலேயே, தாங்கக் கூடியவர்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதிலே கூட ஒழுங்குமுறை ஆணையம் இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அவர்களிடம் 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு எந்தக் கட்டண உயர்வும் செய்யப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக்கொண்டேன்.தமிழ்நாட்டில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.85 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று தெரிவிக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

அரசு நினைத்தால் இவ்வாறு பல வழிகளில் மின் உற்பத்தியைப் பெருக்கியும் மின் சிக்கனத்தை ஏற்படுத்தியும் மின் கட்டணம் மேலும் குறைய வழி வகுக்கலாம். இரு திங்களுக்கு 600 அலகு என்று சொல்லாமல் திங்களுக்கு 300 அலகு என்று சொல்லிப் பார்த்தால்தான் இதன் கொடுமை புரியும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 2:52:00 AM
முதல்வர் குறிப்பிடக்கூடிய வகைப்பாட்டில் நடுத்தரவருவாய் மக்களே பெரிதும் அல்லல்படுகின்றனர். அடுத்தவர் சுமையை ஏற்றிவிட்டு அவர்களால் சுமையைத்தாங்க இயலும் எனச் சுமையேற்றிச்சொல்வது பொருந்தாது. சுமப்பவனுக்குத்தான் சுமையின் வேதனை தெரியும்.ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில பகுதிகளில் பகலில் தெரு விளக்குகள் எரிவதைக் காண முடிகிறது.இவற்றை ஒழுங்கு செய்து மின் சிக்கனம் மேற்கொள்ளலாம். அரசியல் கூட்டங்களில் பகற்பொழுதிலும் தேவையற்ற மின்னாற்றல் வீணாக்கப்படுகின்றது.கட்சிக் கூட்டங்களுக்கான மின்னாற்றலை மின்பிறப்பிகள் மூலம் பெறுவதற்கு இசைவு தந்து மின்சிக்கனம் ஏற்படுத்தலாம். அரசு நிகழ்ச்சிகளில் வீணடிக்கப்படும் மின்னாற்றல் மிகுதி. ஆளுங் கட்சியின் நலனுக்காகத்தான் இவ்வாறு வீணாக்கப்படுவதால் ஒரு பகுதிச் செலவை ஆளுங் கட்சியிடம் இருந்து பெறலாம். ஒவ்வொரு தொழிற் பேட்டைகளில் உள்ளவர்களும் இணைந்து மின்உற்பத்தி செய்துகொளவதற்குரிய இசைவை வழங்கலாம். ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டடங்களிலும் சூரிய ஒளி மூலம் மின்திறன் உற்பத்தி செய்வதற்குரிய வாய்ப்பு வசதியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கலாம். அரசு நினைத்தால் இவ்வாறு
By Ilakkuvanar Thiruvalluvan
8/2/2010 2:51:00 AM
Dear Tamil Nadu: DSI-Houston, Texas has developed a new OTEC technology to produce eclectic power cost effective from Bay of Bengal near Chennai or Tutucurin. DSI-OTEC can provide the electric power need of Tamil Nadu. 14 mega watt power plant cost 40 million USD with 25 years of non stop service with minimum maintenances and no fuel. Dirking water, air-conditioning also feasible by products. We, DSI can provide natural gas to Tamil Nadu also can produce power as electric by product. Dr. Karunanidhi or the Tamil Nadu Electric City board can contact us for details. DSI-OTEC is 100% clean energy round the year nonstop service.
By Nagan Srinivasan
8/2/2010 2:34:00 AM
Karuna may release a statement as follows, "It had been effected after seven years and it would not affect a large section of the population as claimed by opposition parties since Songiri will give Rs.5000/- to every voter to get 100% result and to face the power tariff hike, cable TV charges hike, Petrol, Diesel, Gas and various price hikes and the indirect bus fare hike. But these hikes have been effected only on those consumers who can afford to manage my family situation to some extent. If you live in some states, the expenses will be more and if you live in the prison the expenses will be very less"
By Annaththambi
8/2/2010 1:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக