raja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
raja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 நவம்பர், 2010

தலையங்கம்: வரலாறு காணாத ஊழல்!

e
1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!
கருத்துகள்

தினமணி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. நேற்று இதுவல்ல நல்லாட்சி எனத் தமிழகத் தி.மு.க. ஆட்சி குறித்த கட்டுரை. இன்று மத்தியில் உள்ள தி.மு.க.அமைச்சருக்கு எதிரான கட்டுரை. ஊழலின் பிறப்பிடமான காங். உட்படப் பிற கட்சிகளின் தோல்களை உரித்துக் காட்டித் தன்நடுவுநிலையை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் காரணங்கள் வேறு என உணரப்படும்.இனிமேல் வாசகர்கள் எழுதும் நல்ல கருத்துகளைத் தி.மு.க.விற்கு எதிர் என நிறுத்தும் போக்கு காணப்படாது அல்லவா? 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 3:55:00 AM
காங்கிரஸ் அரசின் சா(த்)தனைகளில் இது ஒரு மணிமகுடம் நம் நாடு மிக மோசமான ஒரு அரசிடம் சிக்கி சிதிலடைத்து வருகிறது நமக்கு உடனடி தேவை ஒரு நல்லா ஆட்சியாளர் அரசியல்வியாதி இல்லா ஒரு ஆட்சி அதற்கனா தீர்வோ ராணுவ ஆட்சிமுறை நாமும் ஒரு முறை ராணுவ ஆட்சிமுறையை அனுபவித்துபார்போம் அதற்கு நம் இந்தியர்கள் அனைவரும் அணைத்து மதங்களும் இந்தியன்என்ற ஒரு அணியில் ஒன்றுபடுவோம் ஜெய் ஹிந்
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/3/2010 3:29:00 AM
வெள்ளைக்காரன் கூட நம்மள இந்த அளவுக்கு சுரண்டலையே அய்யா. வரம் கொடுத்த சாமி தலையிலேயே கை வைக்கிற மாதிரி, நம்ம ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த தறுதலைகள் நம்மள இந்த பாடு படுத்துதே. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த தரங்கெட்ட மனிதரை நினைத்து விட்டால்.
By மதுரைக்காரன்.
11/3/2010 1:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வியாழன், 10 ஜூன், 2010

தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



புது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசை வலியுறுத்த இந்திய அரசு தவறி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி., தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு, இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால், அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தியா, இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதுபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இது, தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் மற்றொரு துரோகம் என்றார் டி. ராஜா.
கருத்துக்கள்

இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவித்துக் கைம்மாறாக மேலும் சில ஒப்பந்தப் பரிசுகளை நல்கும் சந்திப்பு. அவ்வாறிருக்க தமிழர் நலன் எங்கே இடம் பெறும். நாம் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 29 ஏப்ரல், 2010

சசி தரூருக்கு ஒரு நீதி; ராசாவுக்கு ஒரு நீதியா? - ஜெயலலிதா கேள்வி



சென்னை, ஏப்.28-ஊழல் குற்றச்சாட்டுகளில் சசி தரூருக்கு ஒரு நீதி, அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதியா என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் குழுவின் கொச்சி உரிமை குறித்த கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் பெரும் சச்சரவுக்கு ஆளான மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசிதரூரின் நேர்மை குறித்த சந்தேகத்தையடுத்து, அவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. தரூரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், மிக உயர்ந்த ஜனநாயக மரபுப்படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்தார்.

தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் 60,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை தவறான இழப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், தனக்கும், தன் உறவினர்களுக்கும், கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்திய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் அத்துமீறலையும், அராஜகத்தையும் இந்த நாட்டிற்கும், இந்திய அரசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.

ஐ.பி.எல். பங்குகளை விற்பனை செய்வதில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தன்னுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

ஐ.பி.எல். பங்கு விற்பனை என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான தனியார் பிரச்சினை. மாறாக ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசாங்கத்தின், இந்திய மக்களின் சொத்து.

சசிதரூர் ஆற்றிய பணிக்கு, அவருடைய நண்பர் 70 கோடி ரூபாய் அளவுக்கு உரிமைதாரரிடமிருந்து பயனடைந்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ராசாவால் இந்த நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சித் தோழர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயனடைந்து இருப்பதாகவும் ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குடைய ஒருவர் தரூருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நேர்மை வாய்ந்த கட்சிகள் சுமத்தியுள்ளன. நாட்டின் முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் தரூர் அவமானப்படுத்தப்பட்டு, பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், ராசாவோ தொடர்ந்து மத்திய அமைச்சராக, அதுவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, எந்த இலாகாவுக்கு அமைச்சராக இருந்தாரோ, அதே இலாகாவுக்கான அமைச்சராகவே தொடர்ந்து இருக்கிறார்....!

இந்தச் சூழ்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடர்புடைய ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த அதிகாரி திரு. வினீத் அகர்வால் திடீர் என்று மாற்றப்பட்டுவிட்டார் என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதன் உள்நோக்கம் வெளிப்படையாக அனைவருக்கும் புரியக் கூடியது தான். மத்திய அரசு தி.மு.க.வின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் குற்றஞ்சாட்டியதன் காரணமாகத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணை அவசியமாயிற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தவறான முறைகளை பின்பற்றியதன் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் 26,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் அண்மையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

“நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு" என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படும் என்ற முறையை ராசா பின்பற்றியது “சினிமா டிக்கெட் விற்பனை” போன்று அமைந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பாரதப் பிரதமரின் அனுமதியை பெற்ற பிறகு தான் இந்த முரண்பாடுகள் நிறைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் எழுத்துப் பூர்வமான உத்தரவை ராசா வெளிப்படையாகவே மீறியிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விடுவது குறித்து அமைச்சரவை அதிகாரக் குழுவின் முடிவிற்கு விட்டுவிடலாம் என்ற அப்போதைய சட்ட அமைச்சர் திரு. எச்.ஆர். பரத்வாஜின் ஆலோசனையையும் புறக்கணித்து இருக்கிறார் ராசா.

நிர்ணயிக்கப்பட்ட தேதியை நியாயமின்றி, தன்னிச்சையாக முன்னுக்கு தள்ளி வைத்த தொலைத் தொடர்புத் துறையின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முடிவு “சட்டவிரோதமானது” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்புத் துறையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

வலுவான ஆதாரங்கள் இருந்தும், ராசா பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரணை செய்து கொண்டு இருந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டுவிட்டார்.

எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. ராசா மற்றும் அவரது சில கூட்டாளிகள், குறிப்பாக நோசிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் நிரா ராடியா, ராசாவுடன் தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி பல புதிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததையும் சி.பி.ஐ. அடையாளம் கண்டிருகண்டிருப்பதாகவும் ராசாவுக்கும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சி.பி.ஐ.-ஆல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிரா ராடியா மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்து, இதன் மூலம், தயாநிதி மாறனை தொலைத்தொடர்புத் துறையிலிருந்து விலக்கி வைக்க சில சக்திகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை ராசாவுக்கும், அவரது ஆசான் கருணாநிதிக்கும் மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், தி.மு.க. மத்திய அரசுக்கு அளித்து வரும் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும். இது தான் கருணாநிதியின் மிரட்டல்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைமை விசித்திரமாக இருக்கிறது. ஐ.பி.எல். விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை லலித் மோடி எழுப்பிய போது, இணை அமைச்சரை பலிகடா ஆக்கியது. கூட்டணி என்று வரும் போது, கூட்டணிக் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது அதிகாரத்தை தியாகம் செய்யக்கூடிய நிலைக்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப்படுகிறது.

இது வெறும் பொது வாழ்வில் நேர்மை குறித்த பிரச்சினை அல்ல. இந்த நாட்டிற்குச் சேர வேண்டிய சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்த பிரச்சினை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி வீடுகளை கட்டித் தருவதற்கு இந்தப் பணத்தை ஒதுக்கியிருக்கலாம்! இந்த நாடே விலை போவதற்கு முன்பு, இந்த தேச சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சசிதரூரை ராஜினாமா செய்ய வைப்பதில் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சிகளும், ஐ.பி.எல். ஊழல் குறித்து விழிப்புடன் செயல்பட்ட ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

மத்திய அமைச்சராக உள்ள ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

திரு. வினீத் அகர்வால் சி.பி.ஐ. விசாரணைக் குழுவின் தலைவராக திரும்ப பணியமர்த்தப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

சசிதரூர் மன்மோகன்சிங்காலும் சோனியாவாலும் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டு அமைச்சராக்கப்பட்டவர். எனவே, உரிமையுடன் விலகச் சொல்ல முடிகிறது.மலையாளிகள் செல்வாக்கு மிகுந்த மத்திய அரசில் மாற்று வாய்ப்பையும் விரைவில் அவருக்கு வழங்க இயலும். இராசா கலைஞரின் வீட்டுப்பிள்ளையாகவும் பகராளியாகவும் (பினாமி) உள்ளவர். இவரை மன்மோகன் சி்ங்கால் நீக்க இயலாது. கலைஞர் மாற்றினால்தான் உண்டு. எனினும் நாட்டு நலனிலும் அரசியலிலும் முனைப்பான ஆர்வம் காட்டி இவை போன்ற வினாக்கள் எழுப்பினால் பலன் உண்டு. இல்லையேல் வெற்றறிக்கைகளால் என்ன பயன் விளையப் போகிறது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 2:42:00 AM

வெள்ளி, 5 மார்ச், 2010

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தாதது ஏன்?



சென்னை, மார்ச் 4: இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தாதது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் வியாழக்கிழமை பேசியதாவது:இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லை. அரசியல் தீர்வு வேண்டும் என்று இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை.அதேபோல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து பாதுகாப்பது குறித்து பல முறை பேசியுள்ளோம். ஆனால் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாதது ஏன்?இந்திய மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கச் செய்வதிலும் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டிய நேரமிது.134}வது இடத்தில் இந்தியா: இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சி, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான ஏழை எளிய, தலித், பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சியின் பலன் எதுவுமே கிடைக்காத நிலையில் இது எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க முடியும்?மத்திய அரசால் அமைக்கப்பட்ட சென்குப்தா குழு, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கூறியுள்ளது. நாட்டின் மொத்த தலித் மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே உயர் வருவாய் பிரிவில் உள்ளனர். 88 சதவீத தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்நிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.உலக நாடுகளில், மனித ஆற்றல் வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 134}வது இடத்தில் உள்ளது. ஆனால், இலங்கை நமக்கும் மேலே 102}வது இடத்தில் உள்ளது. பிரேசில் 75}வது இடத்திலும், சீனா 92}வது இடத்திலும் உள்ளன.சந்திராயன் விண்கலம் நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதுதான். ஆனால் அந்த பெருமை மட்டுமே போதுமா? மனித ஆற்றல் வளர்ச்சிக் குறியீட்டில் நாம் ஏன் 134}வது இடத்தில் உள்ளோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? இது நமது நாட்டுக்கு பெருமை தரக்கூடியதுதானா?நமது நாட்டு மக்களின் உண்மையான கோரிக்கைகளை புரிந்து கொள்வதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது. துன்பப்படும் மக்களின் பிரச்னைகளை இந்த அரசு அறிந்து கொள்ளவில்லை.நமது நாட்டு பிரச்னைகள் அனைத்துக்கும் நவீன தாராளமய கொள்கைகள் மூலம் தீர்வு கண்டுவிட முடியும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்புகிறது. பிரதமர் மன்மோகன் சிங் 1990}ம் ஆண்டுகளில் நிதியமைச்சராக இருந்தபோதுதான், இந்த கொள்கைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இன்றைய இந்தியாவின் பிரச்னைகள் அனைத்துக்கும் இந்த கொள்கைகள்தான் காரணம்.விலைவாசி:அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு, வறட்சியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள இந்த அரசு முயல்கிறது. ஆனால், ஒரு அரசு என்ற முறையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொண்டோம் என்பதைப் பற்றி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.உள்நாட்டுப் பாதுகாப்பு:உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு இடதுசாரி தீவிரவாதம்தான் காரணம் என்று இந்த அரசு மேலோட்டமாகப் பார்க்கிறது. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை அரசியல் ரீதியான போராட்டங்கள் மூலம்தான் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.ஆனால், மத்திய அரசு நக்ஸல் ஒழிப்பு என்ற பெயரில் ஆதிவாசி மக்களை துன்புறுத்துகிறது. ஆதிவாசி மக்களுக்காக கல்வி, மருத்துவ சேவை செய்வோரை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதிவாசி மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கிறது. அரசின் இந்த அணுகுமுறை மாற வேண்டும்.நாட்டில் உணவுப் பாதுகாப்பு, கல்வி பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு போன்றவற்றை அரசு உறுதிப்படுத்துவதன் மூலமே, உள்நாட்டுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்றார் ராஜா.
கருத்துக்கள்

இந்திய அரசு ஒரு புறம் வேட்டைக்காரன் போலவும் மறுபுறம் சிங்களத்தின் கைக்கூலி போலவும் செயல்பட்டிருக்கும பொழுது எவ்வாறு ஈழத்தில் அமைதி திரும்பவும் ஈழத் தமிழர்கள் உரிமை வாழ்வு வாழவும் இந்தியா குரல் கொடுக்கும்? எனினும் இவர போன்று ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் பேசி பிற மாநில மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 5 டிசம்பர், 2009

இல‌ங்‌கை பிர‌ச்​‌னை​யி‌ல் இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ‌கெ‌ô‌ள்​‌கை‌யை ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்​: டி. ர‌ôஜ‌ô



​ ‌செ‌ன்‌னை,​ டிச. 4:​ இல‌ங்‌கை பிர‌ச்​‌னை​யி‌ல் இ‌ந்​திய‌ô தனது ‌கெ‌ô‌ள்​‌கை‌யை ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் க‌ட்​சி​யி‌ன் ந‌ôட‌ô​ளு​ம‌ன்ற உறு‌ப்​பி​ன‌ர் டி. ர‌ôஜ‌ô கூறி​ன‌ô‌ர்.÷ந‌ô​ட‌ô​ளு​ம‌ன்ற இரு அ‌வை​க​ளி​லு‌ம் ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ‌மை இல‌ங்​‌கை‌த் தமி​ழ‌ர் பிர‌ச்‌னை குறி‌த்த விவ‌ô​த‌ம் ந‌டை​‌பெ‌ற்​றது. ம‌ôநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்ற விவ‌ô​த‌த்​தி‌ல் டி. ர‌ôஜ‌ô ‌பேசி​யது:​÷த​மி​ழ‌ர் பிர‌ச்​‌னை​க​ளு‌க்கு அர​சி​ய‌ல் தீ‌ர்வு க‌ôண​‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இல‌ங்‌கை அர‌சை வலி​யு​று‌த்​து​வது இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் கட‌மை.÷இ​ ல‌ங்​‌கை​யி‌ல் ‌செ‌ô‌ந்த ம‌க்​க​ளு‌க்கு எதி​ர‌ô​க‌வே அ‌ந்​ந‌ô‌ட்டு அரசு ‌கெ‌ôடூ​ர​ம‌ôன ‌பே‌ô‌ரை நட‌த்​தி​யு‌ள்​ளது. இ‌தை ஐ‌க்​கிய மு‌ற்​‌பே‌ô‌க்கு கூ‌ட்​ட​ணி​யி‌ல் அ‌ங்​க‌ம் வகி‌க்​கு‌ம் சில க‌ட்​சி​க​ளு‌ம் ‌தெரி​வி‌த்​து‌ள்​ளன.÷இ​ல‌ங்​‌கை​யி‌ல் சிறு​ப‌ô‌ன்​‌மை​யி​ன​ர‌ôக வ‌ôழு‌ம் தமி​ழ‌ர்​க‌ள் மீது நட‌த்​த‌ப்​ப‌ட்ட இ‌ந்த ‌பே‌ôரி‌ல்,​ உலக வர​ல‌ô‌ற்​றி‌ல் நட‌ந்​தி​ர‌ôத வ‌கை​யி‌ல் ஏர‌ô​ள​ம‌ôன அ‌ப்​ப‌ôவி குழ‌ந்​‌தை​க​ளு‌ம் ‌பெ‌ண்​க​ளு‌ம் ‌கெ‌ô‌ல்​ல‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌ர்.÷இ‌ந்த ‌பே‌ôரு‌க்கு இ‌ந்​திய அர​சு‌ம் உத​வி​யு‌ள்​ளது. இர‌ண்டு ‌பே‌ô‌ர் க‌ப்​ப‌ல்​க‌ளை இல‌ங்​‌கை‌க்கு ‌கெ‌ôடு‌த்து உத​வி​ய​‌தே‌ôடு,​ இல‌ங்​‌கை‌க்கு வழ‌ங்​கு‌ம் நிதி​யு​த​வி‌யை ச‌ர்​வ​‌தேச நிதி​ய‌ம் நிறு‌த்​தி​ன‌ô‌ல்,​ இ‌ந்​திய‌ô உதவி ‌செ‌ய்​யு‌ம் எ‌ன்று பிர​த​ம‌ர் உறுதி அளி‌த்​து‌ள்​ள‌ô‌ர். இ‌ந்த இர‌ண்டு தக​வ‌ல்​க​‌ளை​யு‌ம் அ‌ந்​ந‌ô‌ட்டு அரசு,​ ந‌ôட‌ô​ளு​ம‌ன்ற கூ‌ட்​ட‌த்​தி‌ல் ‌தெரி​வி‌த்​தது.÷அ‌ப்​ ப‌ôவி ம‌க்​க‌ள் மீது நட‌த்​த‌ப்​ப‌ட்ட ‌பே‌ôரு‌க்கு இ‌ந்​திய‌ô உதவ ‌வே‌ண்​டிய அவ​சி​ய‌ம் எ‌ன்ன?​ இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ‌வெளி​ந‌ô‌ட்டு ‌கெ‌ô‌ள்‌கை எ‌ன்ன எ‌ன்​ப‌தை ‌தெளி​வ‌ôக விள‌க்க ‌வே‌ண்​டு‌ம்.÷ம​ னித உரி‌மை மீற‌ல்​க‌ளே இல‌ங்​‌கை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​று‌ள்​ளது. ‌பே‌ôரு‌க்​கு‌ப் பி‌ன் இ‌ளை​ஞ‌ர்,​ இள‌ம் ‌பெ‌ண்​க‌ள் திடீ​‌ரென ம‌ôய​ம‌ôகி வரு​கி‌ன்​ற​ன‌ர். இல‌ங்​‌கை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​று‌க் ‌கெ‌ô‌ண்​டி​ரு‌க்​கு‌ம் உ‌ண்‌மை ச‌ம்​ப​வ‌ங்​க‌ளை இ‌ந்​திய அரசு புரி‌ந்​து​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம். இ‌ந்த சம​ய‌த்​தி​ல‌ô​வது இல‌ங்​‌கை‌ப் பிர‌ச்​‌னை​யி‌ல் தனது ‌கெ‌ô‌ள்​‌கை‌யை இ‌ந்​திய‌ô ம‌ô‌ற்​றி‌க்​‌கெ‌ô‌ள்ள ‌வே‌ண்​டு‌ம்.÷இ​ல‌ங்‌கை,​ ப‌ôகி‌ஸ்​த‌ô‌ன்,​ ‌நேப‌ô​ள‌ம் உ‌ள்​ளி‌ட்ட அ‌ண்‌டை ந‌ôடு​க​ளி‌ன் ப‌ôது​க‌ô‌ப்பு உறுதி ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட‌ô‌ல்​த‌ô‌ன்,​ இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் ப‌ôது​க‌ô‌ப்​பு‌ம் உறுதி ‌செ‌ய்​ய‌ப்​ப​டு‌ம்.÷எ​ன‌வே,​ இல‌ங்‌கை அரசு அர​சி​ய‌ல் தீ‌ர்வு மூல‌ம் அ‌ங்​கு‌ள்ள தமி​ழ‌ர்​க‌ள் பிர‌ச்​‌னை​க‌ளை தீ‌ர்‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று இ‌ந்​திய‌ô வலி​யு​று‌த்​த​‌வே‌ண்​டு‌ம். இது இ‌ந்​தி​ய‌ô​வி‌ன் கட‌மை.÷க‌ச்​ ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌ம் திரு‌த்​த‌ப்​பட ‌வே‌ண்​டு‌ம்:​​ இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள்,​ இல‌ங்‌கை கட‌ற்​ப​‌டை​யி​ன​ர‌ô‌ல் ‌தெ‌ôட‌ர்‌ந்து த‌ô‌க்​க‌ப்​ப​டு​கி‌ன்​ற​ன‌ர். இ‌ந்​தி​ய‌ô​வு‌க்​கு‌ம் இல‌ங்​‌கை‌க்​கு‌ம் இ‌டை‌யே 1974 ம‌ற்​று‌ம் 1976}‌ம் ஆ‌ண்​டு​க​ளி‌ல் ‌பே‌ôட‌ப்​ப‌ட்ட க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ன் படி,​ இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள் ஓ‌ய்​‌வெ​டு‌க்​க​வு‌ம்,​ வ‌லை​க‌ளை உலர ‌வை‌க்​க​வு‌ம் க‌ச்​ச‌த் தீவு‌க்கு ‌செ‌ல்​ல​ல‌ô‌ம் எ‌ன்று ‌தெரி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. ஆன‌ô‌ல்,​ க‌ச்​ச‌த் தீ‌வை சு‌ற்​றி​யு‌ள்ள கட‌ல் பகு​தி​யி‌ல் மீ‌ன் பிடி‌க்க இ‌ந்​திய மீன​வ‌ர்​க​ளு‌க்கு உரி‌மை உ‌ள்​ளத‌ô?​ எ‌ன்​பது ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ல் ‌தெளி​வு​ப​டு‌த்​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை.÷மீ​ன​வ‌ர்​க‌ளை க‌ô‌ப்​ப‌ô‌ற்ற முய‌ற்சி எடு‌க்​க‌ô​ம‌ல்,​ இல‌ங்‌கை கட‌ல் பகு​தி‌க்கு ‌செ‌ல்​ல​‌வே‌ண்​ட‌ô‌ம் எ‌ன்று இ‌ந்​திய அரசு அறி​வு​று‌த்தி வரு​கி​றது.÷ந‌ô ​ட‌ô​ளு​ம‌ன்​ற‌த்​தி‌ல் ஆ‌லே‌ô​ச‌னை ‌பெ‌ற்ற பிற​கு​த‌ô‌ன் க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌ம் ‌பே‌ôட‌ப்​ப‌ட்​டத‌ô எ‌ன்​ப‌தை அரசு ‌தெளி​வு​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம். ப‌ôர‌ம்​ப​ரிய உரி​‌மை‌யை இ‌ந்​திய மீன​வ‌ர்​க‌ள் ‌தெ‌ôட‌ர்‌ந்து ‌பெறு‌ம் வ‌கை​யி‌ல்,​ இல‌ங்​‌கை​யு​ட​ன‌ôன க‌ச்​ச‌த் தீவு ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ல் இ‌ந்​திய அரசு திரு‌த்​த‌ம் ‌கெ‌ô‌ண்டு வர​‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​ற‌ô‌ர் ர‌ôஜ‌ô.
கருத்துக்கள்

அணிசாரா நாடுகளின் தலைமைபோல் நடித்துக் கொண்டு கொலைகார அரசாக உள்ள மத்திய அரசிற்கு நல்ல அறிவுரைகளைத் திரு இராசா தெரிவித்துள்ளார். தன் ஆதிக்க நலன் கருதித் தெரிந்தே இக் கொடுமைகளைச் செய்து வரும் மத்திய அரசு தன்னை மாற்றிக் கொள்ளாது. எனவே., மக்கள மத்தியில் தோலுரித்துக் காட்டி இதனை அகற்ற உண்மையாகப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 8 நவம்பர், 2009

பிஎஸ்என்எல் அழைப்புக்கு 2 ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புக்கு 10 பைசா! ஆ.ராசா தகவல்



உதகை, நவ. 7: அடுத்த 2 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுமென மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார். அகில இந்திய அளவிலான கிராமிய அஞ்சல் காப்பீட்டின் குறுங்காப்பீடு இயக்கத்தை, கோத்தகிரி அருகேயுள்ள சோலூர்மட்டம் கிராமத்தில் சனிக்கிழமை அமைச்சர் ராசா தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பழமைவாய்ந்த இரு துறைகள் உள்ளன. இவற்றில் ரயில்வே துறை வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டி வருகிறது. அதற்கடுத்த நிலையிலுள்ள அஞ்சல் துறைக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டாலும் பொதுநலன் கருதியே செயலாற்றி வருகிறது. நாட்டில் 1 லட்சத்து 55,000 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. தகவல் தொழில்நுட்பம் தற்போதுள்ள அளவுக்கு வளராத காலத்தில் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கு இருந்த ஒரே வாய்ப்பு அஞ்சல் துறை மட்டுமேயாகும். இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. அந்த உணர்வு கிராமப்புறங்களில் இன்னமும் உள்ளது. அஞ்சல் துறையின் மூலம் கிராமப் புறங்களிலுள்ள மக்களின் வசதிக்காக கிராமிய அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுங்காப்பீடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் இருந்து காப்பீடு செய்து கொள்ளலாம். சேமிக்கும் பழக்கம் நகர்ப்புறங்களில் அதிகளவில் உள்ளது. கிராமப்புறங்களில் அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் போதிய வசதிகள் இல்லை. இத்திட்டத்தின்கீழ் அஞ்சல் துறை ஊழியர்களே காப்பீடு செய்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் வந்து கட்டணங்களை பெற்றுக்கொள்வர். எல்ஐசி போன்றவற்றில் காப்பீடு செய்யும்போது மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழே தேவையில்லை. அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை விட அஞ்சல் துறை இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு அதிகளவில் உதவும். தொலைத் தொடர்பை பொருத்தவரையில் தற்போது உலக சாதனையாக மாதத்துக்கு 15 மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் பல புதிய நிறுவனங்களும் இத்துறையில் வரவுள்ளதால் தொழிலில் போட்டி ஏற்படுவதோடு கட்டண விகிதங்களும் குறையும். பிஎஸ்என்எல் அழைப்புகளில் இந்த மாதத்திலிருந்து நிமிடக் கணக்குக்கு பதிலாக நொடிக் கணக்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குள் உள்ளூர் அழைப்புக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் கட்டணம் அமலாகும் என்றார் அவர்.
கருத்துக்கள்

பாராட்டுகள்! சுந்தரம் சொல்வதும் உண்மைதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2009 4:32:00 AM

Antha 60000 kodi iruntha, India makkal ellorume free'a pesalame da..raasa..

By Sundaram
11/8/2009 12:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 5 நவம்பர், 2009

முல்லைப் பெரியாறு பிரச்னை:
ஆ. ராசாவுக்கு வைகோ கேள்வி



சென்னை, நவ. 4: ""முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 2006-ல் கேரளம் விண்ணப்பித்தபோது அதை, அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளுபடி செய்யாதது ஏன்?'' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 2006-ம் ஆண்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுக்கும் நிலை வந்திருக்காது. கேரளத்தின் மனு குறித்து ஆ. ராசா முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்காமல் இருந்தால் அது பச்சைத் துரோகம். ஆனால் அவர் தெரிவிக்கவே செய்திருப்பார். கேரளத்தின் மனுவை தள்ளுபடி செய்யாமல் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது மட்டுமின்றி வரப்போகும் தீமையையும் தடுக்காமல் இருந்து விட்டனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற வஞ்சகத் திட்டத்தோடு புதிய அணை கட்ட கேரளம் முயன்று வருகிறது. புதிய அணை கட்ட வேண்டுமானால் புலிகள் காப்பகம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 10 கி.மீட்டருக்கு சாலை அமைக்க வேண்டும். மூன்று பாலங்கள் கட்ட வேண்டும். அதற்காக 1.20 லட்சம் டன் பாறைகள் உடைக்கப்பட வேண்டும். 1020 கிலோ கரிமருந்து பயன்படுத்த வேண்டும். இதனால் அப்பகுதியில் வன உயிரினங்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட திட்டமிடுகின்றனர். அதற்காக பாறைகள் உடைக்கும் போது முல்லைப் பெரியாறு அணை தானாக உடைந்துவிடும். முல்லைப் பெரியாறு உரிமை காக்கவும், கேரளத்துக்கு துணைபோகும் மத்திய அரசையும், கடமை தவறிய தமிழக அரசையும் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி தேனியில் மதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். நவம்பர் 14-ம் தேதி மதுரை மேலமாசி வீதி -வடக்குமாசி வீதி சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்வி! ஆனால், காலங் கடந்து விட்டது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:18:00 AM

ஐயாவுக்கு அன்றைக்கு ஒன்னும் வேலை இல்லை போல

By Sirupakkam-Rajaraman
11/5/2009 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 3 நவம்பர், 2009

பாஜக ஆட்சியில் நடந்த ஊழலை திமுக அமைச்சர்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஜெயலலிதா கேள்வி



சென்னை, நவ.2: பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் 1.6 லட்சம் கோடி ஊழல் நடந்தபோது திமுக அமைச்சர்கள் அதை ஏன் எதிர்க்கவில்லை என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதும் அல்லது மறுப்பதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையைப் பொறுத்தது. ஆனால், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் என்ற காரணத்தைக் காட்டி தன்னுடைய கொலை வழக்கிலிருந்து விடுபட முடியாது. ஆனால், இது போன்ற காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா. நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்த போது, முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ராசா உட்பட இதர தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை? குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை? மௌனமாக இருந்ததன் விளைவாக, நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்தை இவர்கள் புரிந்ததாக ஆகாதா? 2003 டிசம்பர் வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாகத்தான் ராசா சார்ந்த தி.மு.க. இருந்து வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து, அதாவது மே 2004-லிருந்து, முதலில் தயாநிதி மாறன், பின்னர் ராசா என தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் தான் தொலைத் தொடர்புத் துறையை வைத்திருந்தனர். 5 ஆண்டு காலம் இந்தப் பதவியை வகித்த இந்த இருவரும் ஏன் இந்தப் பிரச்சினையை ஐந்து வருட காலத்தில் எழுப்பவில்லை?இந்த ஊழலை இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருப்பதன் மூலம், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றத்திற்கு இவர்கள் ஆளாக மாட்டார்களா?. இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தாவிட்டால் தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா? இவ்வாறு ஜெயலலிதா தனது அறி்க்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்விகள். எனவே, இவ்வாறெல்லாம் ஊழலைப்பற்றிக் கேள்வி எழுப்புவதாலேயே செயா ஊழலற்ற தூய்மையாளராக ஆகிவிட முடியாது. (ஆகா என்ன அருமையான நாடு! அறிக்கைகள் மூலமே நாட்டை வழி நடத்தும் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் உடைய அருமையான நாடு எதுவும் உலகில் வேறு உண்டா?) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 2:49:00 AM

Yes DMK is corrupt. Now BJP is proved corrupt. JJ is a maha corrupt. She had just escaped from the TANSI case because of corruption in judiciary. The judicial who helped her now facing the charges of land grabbing, encroaching on government land etc. One thief should not escape citing the other thief who escaped? Same thing applies to her as well. What a dirty politicians?

By Chola
11/3/2009 12:08:00 AM

சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில் அமைச்சர் ஆ.ராசா நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார் மக்கள் கேள்வி கேட்கணும். murugiah dubai

By murugiah
11/2/2009 11:17:00 PM

correct question madam

By sivasubramanian.s
11/2/2009 9:40:00 PM

"Kathir dubai" pondra aatkalal thaan thamizhagam innum seerazhikirathu. Onraiye puliyam kombaai pidippathai vittu vittu pahutharivu paesi paesi makkalai muttal aakkum party ethu endru yosikka vendum. Karuna srilankan makkalukkaga 12 crore othukki irukkirar. etharkaga? paavathai kazhuva alla.. paavathai maraikka. antha paavathai avanal eppozhuthum kazhuva mudiyathu. Vittal ilankai thamizharkalukkm ilavasa t.v. kuduppan... oru roobaikku oru kilo arisi kuduppan.. athai sappittu vittu sappittu vittu thoongungal..

By unnai pol oruvan
11/2/2009 9:22:00 PM

uNmai. Anyone can point out any major scams in her last tenure? 92-96 was a learning curve for her. Anyone can challenge that Karuana hasn't done any scam? He is not caught yet. That's it. He is the cunning saakkadai panni (tamil) of tamilnadu. If you live in tamilnadu you can see the difference in administration between Jaya and Karuna. There is no safety in this city. Even lawyers and judges beaten by police - by the order of who?

By unnai pol oruvan
11/2/2009 9:15:00 PM

We are commenting on JJ and forgetting about karuna&co's corruption. At the moment, DMK is the biggest corrupted party in India. I think we need to talk about spectrum here.

By Indian
11/2/2009 7:58:00 PM

தாயே இதெல்லாம் நீங்கள் கேட்க கூடாது நீங்கள் செய்த ஊழலுக்கு எப்படி எல்லாம் நீதியை ஏமாற்ற முடியுமோ அதை எல்லாம் செய்து தப்பித்து கொண்டு வருகிறீர்.நீங்கள் போய் இதை பேச கூடாது நீங்கள் எப்படி எஸ்டேட் எஸ்டேட் ஆக வாங்கி போட்டீர்கள் என்று என்றைகாவது சொன்னதுண்டா இல்லையே அதனால் நீங்கள் பேசக்கூடாது.மக்களாகிய நாங்கள் தான் கேட்கணும்.

By kathir dubai
11/2/2009 7:48:00 PM

Don't forget what u r done when you was cm oolal Maha Rani

By ad
11/2/2009 7:27:00 PM

Amma Nee than India win oolal Maha Rani Maranthiteengal

By arasu
11/2/2009 7:24:00 PM

சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில்?

By pichai
11/2/2009 4:52:00 PM

The statement of Ms.Jeyalalitha is acceptable one.

By M.Natrayan, Guziliamparai
11/2/2009 4:41:00 PM

There are some DMK people here, they always support karu&co's corruption. They just don't care about country. People should change instead of just blindly following this corrupt leaders.

By chandni
11/2/2009 4:00:00 PM

Tamil naatin kulavilakka putum amma ungal pothani. please better sell out your corruption property Koda estate first.

By kumar J
11/2/2009 3:41:00 PM

MS JJ madam your comment absolutely correct. we will welcome your comment. by Indian

By Karan
11/2/2009 3:30:00 PM

Mr. Raja, please accept this irrugality and give your correct explanations if any.

By esspee
11/2/2009 3:07:00 PM

ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் Mothathil evargal ellorum thamiz makkalai kolai saiyum mega kolaiyaligal....enenral kanimozi poi rajapatche vidam parisu porul vangalam?????

By Thamizan
11/2/2009 1:23:00 PM

OK JJ THANKS FOR YOUR KIND INFORMATION AND WE TAKE ACTION MK

By mehroze
11/2/2009 12:59:00 PM

this is old statement vijayakanth already told like this statement so waste ur statement and u time.

By Mohamed Kayal
11/2/2009 11:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *