சனி, 31 அக்டோபர், 2009

மோகன் மறைவு: முதல்வர் இரங்கல்



சென்னை, அக். 30: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பி. மோகனின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மோகனின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாபெரும் இழப்பு. என்னைப் பொருத்தவரையில் ஒரு சிறந்த நண்பரை இழந்துவிட்ட அந்த உணர்வோடு இந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கிறேன். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்றாலும்கூட, என்னிடத்தில் மிகுந்த மதிப்பும், அன்பும் கொண்டவர். ஆளுங்கட்சியாக திமுக இருக்கிற காரணத்தால், ஒவ்வொரு வாரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரின் தொகுதி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். தொகுதி மக்களுக்காக அரும்பாடுபட்டவர். தொழிலாள தோழர்களுக்காக துணை நின்றவர். அவர்களுக்காக பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பாக மதுரை மாவட்டத்துக்கு பெரும் இழப்பு. என்னுடைய இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கும், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மிக எளிமையாகவும் தொண்டுணர்வுடனும் வாழ்ந்த திரு மோகன் இறந்துவிட்டாரா? அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தினமணி இணைய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். துயரத்துடனும் வருத்தத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக