ஞாயிறு, 15 மே, 2016

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு




ம.ந.கூட்டணிமாநாடு,திருச்சி02 :manakuttanimaanadu02

மின் விளக்கைத் தாமசு எடிசனும்,

ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர்

– விசயகாந்து தாக்கு

பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விசயகாந்து, ”தமிழக முதல்வர் செயலலிதா, மக்களைத் தமது குழந்தைகள் என்கிறார். அப்படியென்றால் தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதானே!
மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் தாமசு ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தனக்குத்தானே கசகசவென பாராட்டுவிழாக்களை நடத்திக்கொள்வார். தமிழகச் சட்டமன்றத்தைத் தனக்கான பாராட்டு மன்றமாக மாற்றியவர் செயலலிதா.
திமுகவில் கே.என்.நேரு, பொன்முடி போன்றவர்களும், அதிமுகவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களும் குறுநில மன்னர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி வெற்றிபெற்று ஊழலை ஒழிக்கும். நேர்மையான நிரூவாகத்தை நடத்தும். குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும்  திண்காரை வீடுகளாக மாற்றப்படும். மனையுரிமை(பட்டா) கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு  மனையுரிமை வழங்குவோம். மூடப்பட்ட அரசுப் பள்ளிகளைத் திறப்போம். அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படும்.
 தாசுமாக்கு எனப்படும் அரசு மதுக் கடைகள் மூடப்படும். 100 நாள் வேலை 150 நாளாக அதிகரிக்கப்படும். அதில் வழங்கப்படும் ஊதியமும் அதிகரிக்கப்படும்.  வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
 நன்றி : வெப்துனியா

மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ




ம.ந.கூட்டணிமாநாடு ூmanakuuttanai_maanadu

”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்”

– வைகோ

  திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர். தமிழக மககள் நேர்மையான, தூய்மையான நல்லாட்சியை விரும்புகின்றனர். அதற்கு மக்கள் நலக்கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரத்தயாராகி விட்டனர். மக்கள் நினைக்கும் ஆட்சியை விஜயகாந்த் கொடுப்பார். இவ்வாறு வாசன் பேசினார்.
  மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசியதாவது: மொத்த வாக்காளர்களில், 29  அகவை வரையுள்ள 1.32 கோடி வாக்காளர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிக்க உள்ளனர். வெள்ளப் பாதிப்பின் போது துப்புரவுப் பணிகளில் மனிதக் கழிவுகளைக் கைகளில் அள்ளிதொண்டுசெய்தோம். 150 தொகுதிகளில் நாங்கள்  வெல்வோம் என்று இப்போது  பறைசாற்றுகிறேன். விசயகாந்து முதல்வர் ஆவார். கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெறும். அடுத்தது நமது ஆட்சிதான். மதுக்கடைகளை மூடுவோம். உலகில் பெரிய  உலகஏமாற்று(ஜெகஜால)க்காரர்கள் இருவர். ஒருவர்  செ. மற்றொருவர் கருணாநிதி.  தாசுமாக்குக்கு மது விற்பனை செய்யும் தி.மு.க., ஆதரவாளர்கள்,  செ.,வுக்கு 15 % கழிவு கொடுத்துள்ளனர். அதே போல், தி.மு.க.,வுக்கு  செ. ஆதரவு நிறுவனம் கொடுத்துள்ளது. இருவரும் கூட்டுக்களவாணிகள். ஆனால் வெளியில் எதிர்ப்பது போல் வேடம் போடுகின்றனர்.
  நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஒப்பந்தங்களும்  இணைய இணைப்பில் வெளிப்படையாக நடைபெறும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விசயகாந்து கோயிலில் சத்தியம் செய்து வந்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க., இரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும், 2 ஆயிரம் முதல்  வாக்குக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். பணம் கொடுப்பதைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது. இளைஞர்களை, மாணவர்களைக் கையெடுத்து கேட்கிறேன். பெற்றோரிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்கச் சொல்லுங்கள். பணத்துக்கு  வாக்கு அளிக்க வேண்டா என்று தடுத்து நிறுத்துங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்




தலைப்பு-மாற்றம்விரும்பும் மக்கள் :thalaippu_maatram virumbum makkal02

மாற்றத்தை விரும்பும் மக்கள்


  கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர்  என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில்  நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான்  மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல், கல்வியை வணிகப்பொருளாக்கிக்  கொள்ளையடிப்பதை ஊக்குவித்தல், நாவில் நடமாடவேண்டிய தமிழன்னைக்குச் சாவுமணி அடிப்பதுபோல் தமிழின் பயன்பாடு குறைவதைக் களைய நடவடிக்கை எடுக்காமை, ஊழலை உயர்த்திப்பிடித்தல் எனத் தங்கள் நெறிமுறைகளை மாற்றிக்கொள்ளாமல் தங்கள்செல்வநிலைகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்களுக்குள்ளேயே மாற்றுதேடிய மக்கள் இம்முறை புதிய மாற்றத்தை விழையத் தொடங்கியுள்ளனர்.
  தேர்தல் கணிப்பு எனப் பலவகையாகச் செய்திகள்வந்தாலும்  தங்களை அறியாமல் தவறான கணிப்புகளின் மூலம் உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளனர். முடிவெடுக்காத நிலையில் 80இற்கு மேற்பட்ட தொகுதிகள் உள்ளதாகக் கூறியுள்ளமை மக்கள்நலக்கூட்டணிக்குப் பெரும்பான்மையும்  உரியனவே!  அதனை வெளிப்படுத்த விருப்பமின்றி இவ்வாறு குழப்பமான சூழல் உள்ளதுபோல் கூறுகின்றனர். நமக்குத் தொடர்பில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், அவர்களது சுற்றத்தார் வட்டம் எனப் பலரிடமும்  பேசியதில் அவர்களிடம் அல்லது அவர்கள் உள்ள பகுதியினரிடம் எவ்வகைக் கருத்துக் கணிப்பும் நடைபெறவில்லை என்றனர்.  தாள்கொடுத்துக் கருத்தினைக் கேட்காமல், கடைக்காரர்கள், அங்கு வரும்வாடிக்கையாளர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், சிறு வேலை பார்ப்பவர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் எனப் பல தரப்பாரிடமும் பலரும் பேசிப்பார்த்ததில் பெரும்பான்மையர் இம்முறை மாற்று அணிக்கே வாக்களிக்க முடிவெடுப்பதாகக் கூறினர். அதிமுக, திமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்மட்டும் தங்கள் கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.  காங்.கூட்டணி குறித்துத் திமுகவினரிடம் கேட்டதற்கு “உறவாக இருந்தாலும் பகையாக இருந்தாலும் உறுதியாக இருப்போம்” என்றனர். என்றாலும் இவ்விரு கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் ஆதரவாளரகளாக இருப்பவர்கள், இந்த முறை கண்டிப்பாக வேறு கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்கின்றனர். இவர்களுள் பெரும்பான்மையர் கொள்கை, செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பா.ம.க.விற்கே முதலிடம் தருகின்றனர். என்றாலும் இவர்களில் பெரும்பான்மையர் பா.ம.க.விற்கு வாக்களிக்கத் தயங்கி ம.ந.கூட்டணிக்கே வாக்களி்ப்போம் என்கின்றனர். நகர்ப்புற   படித்த இளைஞர்களில் பெரும்பான்மையர் நா.த.கட்சிக்கு முதலிடம் தருகின்றனர்.  வைகோவின் உழைப்பிற்கேற்ற உயர்வைத்தரத் தவறிவிட்டோம் என்கின்றவர்களும் ம.ந.கூட்டணிக்கே வாக்கு என்கின்றனர்.  விசயகாந்தைப்பற்றிக் கேட்டால், நடிகை ஆளும் நாட்டில் நடிகர் ஆண்டநாட்டில் மீண்டும் நடிகர் ஆண்டால் என்ன என்கின்றனர். நா.த.கட்சிக்கு  வெற்றி வாய்ப்பு இல்லாவி்ட்டாலும் பெறுகின்ற வாக்கு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதாக இருக்கும் என்றும் படித்த இணைஞர்கள் நம்புகின்றனர். இருப்பினும் இம்முறை மாற்றம் என்பது புதிய அணியே என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
  தேர்தலுக்குப்பிறகு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழல் வந்தால் பிற தரப்பார் கூட்டணி ஆட்சி  அமைக்கலாம். எக்காலமும் முதன்மைக்கட்சிகளுக்கு ஆதரவு அல்லது முதன்மைக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் மறுதேர்தலுக்குவழி வகுக்க வேண்டும்.
  இது கருத்துக் கணிப்பல்ல. மக்கள் எண்ண ஓட்டங்களை அறிந்து வெளிப்படுத்தும் கண்ணாடி.
  பிற மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று கவலைப்படாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்! இந்த  ஆண்டு நம் கடமையை நாம் ஆற்றினால் இத் தேர்தலில் இலலாவிட்டாலும் அடுத்த தேர்தலில் கண்டிப்பாகப் பயனிருக்கும்.
  எனவே வாக்குரிமை  உள்ள அனைவரும்  நமக்கு உதவும் ஒருவரை – நாட்டை  மேம்படுத்தும் ஒருவரை – ஊழலுக்கு இடமில்லாத ஒருவரை – நம் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வாக்களிப்போம்!
நன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க!
என்பதை வாக்குநாளன்று நினைவில் கொண்டு நற்செயலாகிய வாக்களிப்பைத் தவறாமல்செய்வோம்!
திருவாரூர்ச் செல்வன்

Colombo's attempt to survey church lands for permanent militarisation foiled at Poonakari

Colombo's attempt to survey church lands for permanent militarisation foiled at Poonakari

[TamilNet, Friday, 13 May 2016, 08:29 GMT]
Three days after the last attempt to survey the lands belonging to 6 families and a Saiva temple at Paraman-kirray in the strategically situated Poonakari, the occupying navy of genocidal Sri Lanka attempted on Thursday to survey lands belonging to St. Jude's Church at Pa'l'lik-kudaa in Poonakari without prior notice. However, the Parish Priest of the church and more than 100 villagers blocked the survey department officials, who were brought to the spot with SL Navy escort, news sources in Poonakari said. In addition to the protest, the public spontaneously mobilised making a written signature campaign against the militarisation. The SL military intelligence operatives and SL Navy sailors were taking photos of the journalists who were covering the protest and recording video of the protestors in a threatening manner, news sources further said.

Protest against military land grab of church lands in Poonakari


The lands belonging to the church already remain occupied by the SL Navy for the past 6 years. Now, the SL Navy is trying to permanently seize the lands.

Local Tamil politicians from the Tamil National Alliance and Tamil National People's Front have also extended their support to the protesting villagers.

The occupying Sinhala military of genocidal Sri Lanka has planned to grab 3,087 acres of private and permit lands in the strategically situated Poonakari in addition to already established military cantonments in Poonakari.

Poonakari is situated to the northwest of Ki'linochchi at the entrance to Jaffna Peninsula, Jaffna Lagoon and its location facing the Palk Bay and the opposite coast.

Poonakari, KKS & Palaali
[Satellite Image Courtesy: NASA, Visible Earth. Details & Legend: TamilNet]


Around 6,000 Tamil families, dependent on agriculture and fishing, live in the heavily garrisoned Poonakari division where more than 30,000 Sinhala soldiers are stationed.

The SL military has also brought Sinhalese businessmen from South to Kavuthaari-munai to build hotels while blocking the Eezham Tamils from entering the area.

The Eezham Tamil legacy of Poo-nakari (meaning the town of flowers) and the region around it is of much antiquity going back to the times of proto-history and Tamil Brahmi inscriptions.

The strategic location of Poonakari have made all the European colonial powers –the Portuguese, Dutch and the English to maintain a station there.

But unlike the Sinhala colonial military of today, the European colonial powers didn’t commit a demographic genocide, as they didn’t have the human resource for it.

Two brigades (means 20,000 soldiers) plus 11 divisions (11,000 soldiers) of the genocidal Sinhala military are now stationed in Poonakari and villages around it, such as Pa’l’lik-kudaa, Pallava-raayan-kaddu, Mud-kompan, Ponnaa-ve’li, Arasa-puram, Muzhangkaa-vil, Madduvil-naadu and 4th mile-post, according to the figures collected two years ago in 2013.
SL occupation of Poonakari


The fertile lands of Poonakari, which is known for the quality of rice and rich coconut and cashew plantations, have also been snatched away from Eezham Tamils.

Colombo has deployed former LTTE members as ‘Civil Security Division’ slave workers in the farms run by the SL military.

Protest against military land grab of church lands in Poonakari
Protest against military land grab of church lands in Poonakari
Protest against military land grab of church lands in Poonakari


Chronology:

SL Police refuses to vacate from lands belonging to uprooted Tamils

SL Police refuses to vacate from lands belonging to uprooted Tamils in Batticaloa

[TamilNet, Thursday, 12 May 2016, 18:03 GMT]
Colombo's police continue to be stationed in lands belonging to 42 families in Paala-munai village and a large section of Ma'ndoor-1 and 2 South GS area in Poaratheevup-pattu (Vellaa-ve'li) administrative division of Batticaloa district. The uprooted people are unable to resettle in 90% of Paalamunai village, civil sources in Batticaloa said. The area is located 40 km south of Batticaloa city near the border of Ampaa'rai district. Ma'ndoor is known for its popular Murukan temple.

Initially, SL military and Special Task Force commandos seized the lands to put up a camp in 1991. Tamil families were uprooted from their houses and property.

The SL police is now occupying the lands after the STF and SL military have vacated from the area.

However, the police is refusing to vacate from the lands while Eezham Tamils uprooted from the area are still living as internally displaced people.

The uprooted people have not received any humanitarian assistance two years after their initial displacement, the sources further said.

The SL police from Ma'ndoor, receiving instructions from Colombo, have also suppressed details on the progress of the investigations on the killing of 43-year-old Eezham Tamil Social Service Officer (SSO) Mathisayan Sachchithanantham on 26 May 2015. The killing shocked the civil and social activists in the entire Batticaloa.

Related Articles:
01.07.15   SL Police alleged of ‘protecting’ killers of Batticaloa soci..
10.06.15   Batticaloa ignored in financial allocations for resettlement..
13.10.03   Human skulls, bones unearthed in Thiraikerni