maraimalai adigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
maraimalai adigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூலை, 2011

Maraimalai adigal birthday function: மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா

பெரம்பலூர்: பெரம்பலூரில் உலக தமிழ் கழகம் சார்பில் மறைமலை அடிகளாரின் 135வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் புலவர் செம்பியன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாவலர் ஆடல் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பூங்குன்றன் மறைமலை அடிகளின் உருவபடத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இதில், மகிழ்வேந்தன், அரங்கசெங்கொடி, இணை செயலாளர் செல்வம், அமுதன் உட்பட பலர் பேசினர். கவிஞர் அகவி தனித்தமிழும், மறைமலை அடிகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவை முன்னிட்டு தூய தமிழ் பெயர்களைக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக முகிலன் வரவேற்றார். பொருளாளர் காப்பியன் நன்றி கூறினார்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 9, 2010, 14:19[IST]

Vote this article
Up (33)
Down (0)


ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை ரியாத் நகரில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) சார்பாக மறைமலையடிகளாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாலை 5 மணிக்கு மோர் வழங்குதலுடன் தொடங்கப்பட்ட விழாவில் தனியர்களுக்காக (Bachelors) கில்லி, கோலிகுண்டு, நொண்டி, கோக்கோ போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இளம் வயதினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பின்பு திருமதி. தில்லைக்கரசி சிவகுமார் மறைமலையடிகள் பற்றிய சில குறிப்புகளை தொகுத்து வழங்கினார். அதனை அடுத்து புலவர் அரங்கராசன் அவர்களின் சிறப்புரையும், திரு நாக.இளங்கோவன் அவர்களின் செம்மொழி மாநாட்டுத் தூய்ப்பும் (அனுபவம்) நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுவை நாடகம், தமிழிசைப் பாடல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், திருமதி. ரம்யா காமராஜ் அவர்கள் வசெந்தம் கடந்து வந்த பாதை குறித்த ஒரு மீள்பார்வையை வெளியிட்டார்.

வசெந்தத்தின் ஒவ்வொரு விழாவிலும் சமுதாயத்திற்கு உதவும் செயல்களைச் செய்வது வழக்கம். இம்முறை கண் தானம் செய்வது குறித்து விளக்கப்பட்டது. பல உறுப்பினர்களும் கண் தானம் செய்ய முன்வந்தது சிறப்பம்சமாகும். விழாவின் இறுதியில் சவுதி வாழ் மூத்தத் தமிழரும் சமூக சேவகருமான திரு. ஜெயசீலன் அவர்களுக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.


User Comments
[ Post Comments ]

பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan
பதிவு செய்தது: 10 Aug 2010 3:59 am
தனித்தமிழ்க்கடல் மறைமலையடிகளுக்குக்கடல் கடந்து விழா என்பது மகிழ்ச்சி தருகிறது. வசெந்தம் அமைப்பினருக்குப் பாராட்டுகள். தனியர் என்பது individualஎனப்பொருள்படும். bachelor -மணமாகார் என்பதே சரி. experience -துய்ப்பு, பணியறிவு, பட்டறிவு எனப் பொருள்படும்.தூய்ப்பு எழுத்துப் பிழையா? திருத்தம் செய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பதிவு செய்தவர்: azad
பதிவு செய்தது: 09 Aug 2010 3:15 pm
பாராட்டுக்கள்....நல்ல செய்தி


செவ்வாய், 20 ஏப்ரல், 2010


தினமலர் செய்தியைப் பார்த்த முதல்வர் இல்லச் சீரமைப்பிற்காக ௧௫ இலட்சம் உரூபாய் ஒதுக்கிட்டு ஆணை பிறப்பித்துள்ளார். தினமலரில் உடனே வர வேண்டிய செய்தி இதுவரை வரவில்லையே! எனினும் அரசின் கவனத்திற்குக் கொண்டுபோன தினமலருக்கும் உடன் நடவடிக்கை எடுத்த அரசிற்கும் பாராட்டுகள்.
மறைமலையடிகளார் இல்லம்: ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிப்பு



சென்னை, ஏப்.19: சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலையடிகளார் நினைவு இல்லம் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்த இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லம் மறைமலையடிகளார் நினைவு இல்லமாக இப்போது தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்தக் கட்டடம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைப் பழுது பார்க்க, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்தத் தொகை பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்படும். இந்தத் தொகை மூலம் நினைவு இல்லம் பழுது பார்க்கப்பட்டு, சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

கருத்துக்கள்

தினமணிக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள். கன்னிமாரா நூலகததில் இணைந்த மறைமலையடிகள் நூலகமும் சரியாகப் பேணப்படவில்லை. அதனையும் தினமணி சுட்டிக்காட்டினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *