அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.  

(திருவள்ளுவர், திருக்குறள் ௲௩௰௩)

வேண்டாதன போக்கும் போக்கி நாள், உழவரைப் போற்றும் பொங்கல்  திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு, மாட்டுப் பொங்கல் திருநாள், பண்பை வளர்க்கும் காணும் பொங்கல் நாள் ஆகிய

தமிழர் திரு வாரத்திற்கு

அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக !

இன்பம் தங்கி இன்னல் அகலட்டும்!

வளமை நிறைந்து வறுமை தொலையட்டும்!

ஒற்றுமை ஓங்கிப் போர் ஒழியட்டும்!

யாவரும் இணை என்பது நிலைக்கட்டும்!

 

வாழ்த்தி மகிழும்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்