மகுடை 19 விளைவித்த எண்ணங்கள்

       அனைவருக்கும் வணக்கம்.
எனது பெயர் பேரரசி. நான் பாரிட்டின் மாரா இளம் அறிவியல் கல்லூரி, படிவம் 2 மாணவி ஆவேன். ‘இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை’ (Movement Control Order)  இன் போது எனது பட்டறிவைப் பற்றி நான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  உலகமயமாக்கலின் இந்த நூற்றாண்டில், நமது அன்புக்குரிய நாடான மலேசியா, மகுடை 19(கொரானா 19) நோயால் தாக்கப்பட்டுள்ளது. மகுடை 19(கொரானா 19) என்றால் என்ன? WHO அதாவது ‘உலக நலவாழ்வு அமைப்பின்’ படி மகுடை 19/COVID 19, 2019 புதிய மகுடைத் தொற்று என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய், சீனாவின் உஃகானில் 2019 திசம்பர் 31 அன்று அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடைச் சந்தை மூலம் தொற்றியது. மகுடை 19 இன் தொற்று, காற்று, இருமல் மற்றும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் வழியாகப் பரவுகிறது. ஒருவருக்கு மகுடை 19 மகுடை 19 இருந்தால் அவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுச் சிக்கல்கள் போன்ற அறிகுறிகள் காணப்படும். COVID 19 நம் நாட்டில் தற்போதைய முதன்மைச் சிக்கல்களில் ஒன்றாக மாறிவிட்டது, ஏனெனில் அது மரணத்திற்கு வழிவகுக்கிறது.
             இன்றுவரை, மலேசியாவில்  4,346 மற்றும் அதற்கு மேற்பட்ட மகுடை 19 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதனால், 8 ஆவது மலேசியப் பிரதமரான தான் சிரீ முகைதீன் யாசின் மார்ச்சு 18 முதல் ஏப்பிரல் 14 வரை அனைத்து மலேசியர்களுக்கும் நடை இயக்கக் கட்டுப்பாடு (movement control order) என்ற பாதுகாப்பு நடவடிக்கையை வெளியிட்டுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்பிரல் 28ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகுடை 19-ஐ கட்டுப்படுத்த முடியாவிட்டால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நடை இயக்கக் கட்டுப்பாடு  அதிகரிக்கக் கூடும். இவ்வகையான சிக்கல்கள் அனைத்து மலேசியர்களும் தங்கள் உடல்நலம் மற்றும் அவர்களது குடும்பங்களின் உடல்நலத்தைப் பற்றியும் கவலைப்பட வைக்கிறது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்பதால் அவர்கள் கடையில் இன்றியமையாப் பொருட்களை வாங்கத் தொடங்கினர். எல்லா உணவையும் வாங்கக்கூடிய வர்களையும்,  அதனை வாங்க இயலாத மக்களையும் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த விடுமுறை நீண்டது என்றாலும் அது மகிழ்ச்சியாகவே இல்லை. ஏனென்றால், சிறையில் அடைத்து வைத்தது போல நடைக் கட்டுப்பாடு என்னை உணர வைக்கிறது. இது மிகவும் சலிப்பை ஏற்படுத்துகிறது. அன்றாடம் என் அம்மாவின் சுவையான சமையல் உண்டாலும்,   வீட்டில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதால் எனது உடலின் எடை அதிகரிக்கின்றது என்று கவலைப்படுகிறேன். ஆனால் மாரா இளம் அறிவியல் கல்லூரி மாணவராக இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஏனென்றால், மாணவர்களின் கற்றலைக் குறித்து அக்கறை கொண்ட பல ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் ஏற்கெனவே கூகுள் வகுப்பறை, ‘ஓஎசுஇஎம்’, ‘பிளிப்கிரிட்’ பிறவற்றின் மூலம் மெய்நிகர் வகுப்பறைக் கற்றலைத் தொடங்கினர். தற்போதைய கற்றலின் அடிப்படையில் தகவல்களைக் கண்டுபிடிக்க அனைத்து ஆசிரியர்களும் சிரமப்படுவதைக் கண்டு நான் மிகவும் நன்றியுள்ளவளாகக் கருதுகிறேன். இந்தச் சூழ்நிலையை என் அம்மா, அப்பா மூலமும் உணர்ந்தேன், ஏனென்றால் அவர்களும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள்.
           தற்செயலானது என்றாலும் மகுடை 19 இன்னும் பலரின் உயிரை எடுத்துக்கொண்டிருக்கின்றது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. ஏனென்றால் இது பலருக்குப் பரவி  மிரட்டலாக உள்ளது. இறந்தவர்களில் சிலர் மருத்துவர்கள் ஆவர். மகுடை 19  தொற்றிய நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நேரத்தைத் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நோயாளிகளுக்காக மருத்துவர்கள்  தினமும் மருத்துவமனையில் உட்கார்ந்து வீட்டிற்குச் செல்லாமலும், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடாமலும் இருக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மகுடை 19(COVID 19) நோயால் பாதிக்கப்பட்டுத் தீவிரப்பண்டுவப் பிரிவில்  இருந்தனர். என் நலவாழ்வுமிக்கக் குடும்பத்துடன் இருப்பதற்கு நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் சுவையான உணவை வழங்கிய என் அம்மாவுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
மிகவும் சலிப்பான இந்த விடுமுறையில், நான் என் நண்பர்களைப் பார்க்காமல் இருக்கும் வாய்ப்பை இழக்கிறேன். நான் முழு உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவியாக இருந்ததால், குடும்பத்தினருடன் விட நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். அங்குள்ள கற்றல் சூழ்நிலையையும் நான் இழக்கிறேன். வீட்டில் நான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன், திறன்பேசியுடன் விளையாடுகிறேன், என் அம்மாவுக்கு உதவுகிறேன். கல்லூரியில் நான் பூப்பந்து, வட்டை ஆட்டம்(Frisbee game) விளையாடுவதால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் அண்மையில் நான் என் அம்மாவுக்கு உதவுவதில் விடாமுயற்சியுடன் இருந்தேன். ஒவ்வொரு மாலையும், நான் என் அப்பா, தங்கை ஆகியோருடன் வட்டாட்டம்(கேரம்) விளையாட்டை விளையாடுவேன். இரவில், இணையப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட திகில் திரைப்படங்களைப் பார்ப்போம்.
       என் ஓய்வு நேரத்தால் நான் சலிப்படைகிறேன். நான் சமூக ஊடகங்களில் குறிப்பாக படவரி(Instagram), உம் குழலி(youtube) முதலியவற்றில் இணைந்திருப்பேன். படவரியில் நகைச்சுவைகள், படவரித்தொலைக்காட்சி ஆகியவற்றைப் படிக்க பார்க்க விரும்புவேன். திரு பீனின் காணொளிகைளப் பார்க்க விரும்புவேன். ஏனென்றால் உரோவன் அட்கின்சன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆவார். இந்த வகையான உடற்பயிற்சி எனக்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் எனது நேரத்தையும்  செலவிட உதவுகிறது. தற்போது, மாணவர்களின் நேரத்திற்குப் பயனளிக்கும் வகையில் சில  கட்சிகள், சங்கங்கள் பல போட்டிகளை நடத்துகின்றன. போட்டியில் பங்கேற்க என் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர். எனவே இந்த வழியில் எனது ஓய்வு நேரத்தை நிரப்ப முடியும். 5 ஆம் ஆண்டு மாணவியாக இருக்கும் என் தங்கைக்குக் கற்பிக்க என்  நேரத்தைச் செலவிட முடிந்தது. இது எனது குழந்தைப் பருவக் கற்றல் பட்டறிவுகளை நினைவூட்டுகிறது.
மகுடை 19 நோய்த்தொற்று பற்றி நான் கவலைப்பட்டாலும், அதை எவ்வாறு தடுப்பது என்ற  வழிமுறைகள் உள்ளன என்பதைக்கண்டு நான் நிம்மதியடைந்தேன். அவற்றில், கண்கள், மூக்கு, வாயைத் தொடாதீர்கள், ஏனெனில் இது மகுடை 19 தொற்றும் இடமாகும் என்ற கூற்று, 31/3/2020 அன்று வெளியான ‘தி சன்’ செய்திக்குறிப்புக்கு இணங்க, மனிதர்கள் தங்கள் முகத்தை ஒரு மணி நேரத்திற்கு 23 தடவைகள் தங்களின் வாய், மூக்கு, கண்களைத் தொடுகிறார்கள். கூடுதலாக, நாம் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் ஏனெனில் இது நம் கைகளில் உள்ள நோய்மிகளைக் கொல்லும். மக்களுக்கிடையேயான தூரம் குறைந்தது 1 பேரடி(மீட்டர்) என்பதை  அனைவரும் அவசியம் உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்குமுன் என்னைப்போல் விடுமுறையை எப்படிக் கழித்திருந்தாலும் நாம் மகுடைநோய் பரவாமல் இருக்க நம்மால் ஆன கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும் அடுத்தவர்களுக்கு உதவவும் வேண்டும்.
        இந்த மகுடை 19 மிகவும் ஆபத்தானது. எனவே, மலேசியர்களாகிய நாம் உடனடியாகச் செயல்பட வேண்டும்.  கடுமையான நோய்மிகளைத் தடுக்க அரசாங்கத்தின் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும். மகுடை 19 நோயாளிகளை விரைவாகக் குணப்படுத்தவும், மலேசியர்கள் அனைவரையும் கோவிட் 19 அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றவும் என்று நான் கடவுளிடம் வழிபடுவேன். ஏப்பிரல் 28 க்குப் பிறகு கல்லூரிக்குச் செல்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
மலேசியாவை நேசி! தூய்மையான மலேசியா!
நன்றி.
 பேரரசி முத்துக்குமார்
படிவம் 2
மாரா இளம் அறிவியல் கல்லூரி பாரிட்டு, மலேசியா