தமிழைக் கற்காமல் பிற மொழிகளைக்கற்பதையே பெருமையாகக் கருதுவோரை விரட்டும் பாரதியார்
வேறுவேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
(பாரதியார் தேசிய கீதங்கள், போகின்ற பாரதம்:3)
(எப்போதும் எங்கும் ஆங்கிலத்தையே பயன்படுத்துவோர்) ஆங்கிலப் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும், சீட்டாடும் போதும், ஆசாரத் திருத்த அவைகளிலும், வருணாசிரம சபைகளிலும், எங்கும், எப்போதும், இந்தப் ‘பண்டிதர்கள்’ ஆங்கிலம் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை, இவர்கள் தமிழெழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாத்திர விசாரணை, அரசநீதி நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுதவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக