சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும்

 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா

ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019

திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041
 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி:  குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:
 சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதிபதி எசு.செகதீசன் தலைமையில் பெரியபுராணம் நூல் (சூ.சுப்பராய நாயகர் உரை) வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. திருநிறைதிரு அம்பலவாண தேசிக பரமாசாரியச் சுவாமிகள் நூலை வெளியிட, முதல் படியைக் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொள்கிறார். முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முதலானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய நாள் மாலை 4.30 மணி : ‘பெரிய புராணம்- ஒப்பிலா உயர் காப்பியம்’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை செயராசு சிறப்புரை.
 மாலை 6 மணி: நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் சேக்கிழார் விருதுகள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சிறந்த தமிழறிஞர், ஓதுவார், பேராசிரியர், சமய – சமூகத் தொண்டர், பத்திரிகையாளர், சிற்றிதழ் ஆசிரியர், சிறந்த நூல் எனப் பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள், பொற்கிழி ஆகியவை வழங்கப்படவுள்ளன. மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கும், தேவாரம், திருமுறை மனனப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
தொடர்ந்து இரவு 7 மணி:  ‘சேக்கிழாரின் உவமைத் தனித்துவம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம்
தலைமை : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாசுகர்
மூன்றாம் நாள் /சனிக்கிழமை காலை 10 :
முனைவர் தி.இராசகோபாலன் தலைமையில் ‘திருமுறை பண்களும் திருத்தொண்டின் பெருமையும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு
பிற்பகல் 3.30 மணி :  புலவர் வே.பதுமனார் தலைமையில் பக்தி கவிச்சோலை
மாலை 6 மணி: பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் ‘திருக்குறள் விழுமியங்களும் திருத்தொண்டர் வாழ்வும்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் அரங்காடல்
நிறைவு நாள்  / ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி:
 ‘திருத்தொண்டர் புராணத்தில் ஈர்த்தென்னை ஆட்கொள்வது’ என்ற தலைப்பில் விழாவின் இறுதி நாளான இளைஞர் அரங்கம்
பிற்பகல் 3.30 மணி: ‘பெரியபுராணப் பெண்டிர்’ நிகழ்ச்சி:
தலைமை : கம்பவாரிதி இலங்கை செயராசு
சொற்பொழிவு: திருவையாறு வே.இரமணன், சொ.சொ.மீ.சுந்தரம்
மாலை 6 மணி: முனைவர் கண.சிற்சபேசன் தலைமையில் பாங்கறி மண்டபம்