மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

  வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
  சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
  http://www.ypvnpubs.com/2017/03/blog-post_17.html என்ற இணைப்பைச் சொடுக்கி ‘தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்’ என்ற பதிவைப் படித்த பின் “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற தலைப்பிற்கு ஏற்ற பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழென்பதை நம்பக்கூடியவாறு பதிவுகளை ஆக்குதல் வேண்டும்.
 தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளைத் தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  சொற்கோப்பு (Word), பொதிஆவணமாக(PDF) அனுப்பி வைக்கக்கூடாது. வலைப்பூ இல்லாதவர்கள் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதிலே தங்கள் பதிவுகளை வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
  உரிமம் – பொதுமைப்படைப்பு – எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்.”( “License: Creative Commons Attribution-Share Alike 4.0 International ) என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற அன்பளிப்பு (இலவச) மின்னூலில் எனது பதிவு இடம்பெற உடன்படுவதோடு ஒத்துழைப்பும் வழங்குகிறேன் எனப் பதிவின் இசைவை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.
  மின்னஞ்சலுக்கான பொருள் (Subject) ‘மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017’ என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் 120×160 pixel அளவான முகம் அளவு படத்துடன் ஐந்தாறு வரிகளில் தங்களைப் பற்றிய அறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். குறித்த மின்-நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.
  ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளின் இணைப்புகளையும் வழங்கலாம். பதிவுகளைச் சித்திரை முப்பதாம் நாளுக்கு (30/04/2017) முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும். தங்கள் வலைப்பூக்களிற்கு பூட்டுப் போட்டிருந்தால் பரவாயில்லை. வாசகர் படித்துக் கருத்துப் போட இசைவளித்த வலைப்பூப் பதிவையே தெரிவுசெய்வோம்.
 பதிவிற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் அமைந்த அதிகமான வாசகர் கருத்துகளைக் கொண்ட பதிவுகளையே சிறப்புப் பதிவாகத் தெரிவு செய்வோம். அதற்காகத் தாங்கள் ஆக்கிய பதிவை மக்களாய(சமூக) வலைத்தளங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தலாம்.
  எமக்குக் கிடைத்த பதிவுகளின் இணைப்பை நாமும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அறிமுகம் செய்து வைப்போம். 30/04/2017 இற்குப் பின் வரும் பதிவுகளின் இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈற்றில் பதிவுகளைத் தொகுத்து மின்நூல் ஆக்கி வெளியிட்டதும் பரிசில் பெறும் பதிவிற்கு உரிய அறிஞர்களின் விரிப்பு இந்த வலைப்பூவில் வெளியிடுவோம். பின் அவர்களுக்கான வெகுமதி இதழ்கள் / Gift Certificates அனுப்பிவைக்கப்படும்.
  உலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.
“உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்நூலிற்கான பதிவுகளை எழுதுவோருக்கு உதவும் பதிவு.
உலகின் முதன் மொழி தமிழா?
http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html

 பங்கு பெறுவீர்! பரிசில் பெறுவீர்!

– யாழ்பாவாணன் வெளியீட்டகம்