ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மழை ஏமாற்றியதால் குறைந்து வரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

மழை ஏமாற்றியதால் குறைந்து வரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

seithi_manjalaaru_vaigaianeesu+03
  தேவதானப்பட்டி பகுதியில் மழை ஏமாற்றியதால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் குறையத்துவங்கியுள்ளது.
  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்தது. இதனால் தலையாறு, வறட்டாறு, மூலையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகமானது. இதனையொட்டி வறண்டு காணப்பட்ட எலிவால் அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இருபது அடிக்குக் கீழ் இருந்த மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மளமளவென 40 அடியாக உயர்ந்தது.
  இந்நிலையில் கடந்த சில நாட்களாகச் சாரல்மழை பெய்தது. அப்போது மேகங்கள் திரண்டு இருந்தாலும் காற்று அதிகமாக அடித்து மழையைக் கலைத்தது. இதனால் மஞ்சளாறு அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறையத் தொடங்கியது.
  இதனால் உழவர்களும் பிற பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். இதே நிலை நீடித்தால் தேவதானப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பேரிடர் உள்ளது.
-வைகை அனீசு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக