சனி, 18 ஜூன், 2011

Revised pattern of I.A.S. Exam.: இ.ஆ.ப. தேர்வு முறையில் மாற்றம்

<ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ >
 என ஆங்கிலஎழுத்துருக்கள் எப்போதும் தமிழ் வரி வடிவில் வருகின்றனவே.  இவற்றைச் சரி பார்க்கலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


ஐ.ஏ.எஸ்.தேர்வு முறையில் மாற்றம்

First Published : 18 Jun 2011 01:59:47 AM IST


புதிய பாடத் திட்டத்தின்படி முதல்தாளில் (Paper-1) பொது அறிவு மற்றும் சமூக பிரச்சினைகள் (Sociology) அரசியல் மற்றும் ஆட்சிமுறை (Politics & Administration)  ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் தாளில் மாணவர்களின் (Aptitude) இயல்திறன் சோதிக்கப்படுகிறது. இத்தாளில் அடிப்படை எண்கணிதம், பகுத்தறிவு திறன், அடிப்படை ஆங்கில அறிவு, புத்திகூர்மை ஆகியவை சோதிக்கப்படுகிறது.IAS தேர்வை பொறுத்தவரை நிறைய படித்தல் என்பதைவிட நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அளவாக ஆழப்படித்தலே வெற்றிக்கான சிறந்த யுக்தி ஆகும். முதன்மை தேர்வை பொறுத்தவரை படிப்பதோடு மற்றும் நின்றுவிடாமல் நிறைய பயிற்சியும் மிக்க அவசியம். முதன்மைத் தேர்வில் (Negative Marks) முறை இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். முதன்மைத் தேர்வு முடிந்த உடனேயே Mains தேர்விற்கு தயாராக வேண்டும் June-September நான்கு மாதங்கள். நான்கு மாதங்களே எஞ்சி இருப்பதால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவசியம் ஆகிறது. பொதுவாக Prelims தேர்விற்கு தயாராகும்போதே விருப்பப் பாடங்களையும் தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் Prelims தேர்விற்கு பிறகு விருப்பப் பாடத்தை நன்கு படித்தல் என்பது மிகவும் கடினமாகும். Prelims தேர்வின் போதே விருப்பப் பாடங்களைப் படித்து வைத்துக்கொண்டால் Prelims தேர்விற்கு நன்கு Revision  செய்ய முடியும்.தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் பெரிதும் விரும்பி படிக்கும் விருப்பப்பாடங்கள் Political Science, Sociology, Public Administration, History, தமிழ் இலக்கியம் ஆகியவை ஆகும். புதிய பாடத் திட்டத்தின்படியும் மற்றும் பொது அறிவு கட்டுரை ஆகியவற்றுக்கு மிகவும் தொடர்புடைய பாடங்களாக Society, Political Science, Administration விளங்குகின்றன. எனவே இதுபோன்ற விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பதே சமயோசித புத்தியாகும். Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான விடையை கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத பழகிக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தேவையான அளவான பதிலை தராமல் கேள்விக்கு தொடர்புள்ள அனைத்து விஷயங்களையும் பக்கம்பக்கமாக எழுதி நேரத்தையும் மதிப்பெண்களையும் வீணடித்துவிடுகின்றனர். ஊதாரணமாக இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிக்க ஐந்து வழிமுறைகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்குக? என்ற கேள்விக்கு நக்சலிசம் தோன்றியவிதம் மற்றும் நக்சலிச வரலாறு பற்றி இரண்டு பக்கங்கள் எழுதுவது என்பது தேவையற்ற செயலாகும். கேள்வியின்படி சிறந்த ஐந்து வழிமுறைகளை மட்டும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் சுமார் 1 ணீ பக்கங்களுக்குள் விளக்கினால் போதுமானதாகும். நமக்குத் தெரிந்தவற்றை எழுதுவதைவிட கேள்விக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் எழுதுவதே போதுமானதாகும். இவ்விதம் நன்கு பயிற்சி எடுத்து சிறந்த முறையில் விடைகளை அளித்தால் Mains தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது எளிதான ஒன்றாகும்.எனவே IAS தேர்வை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் சமுதாய உந்துதலின் பேரில் படிக்காமல் மாணவர்களின் மனம், சிந்தனை, செயல் ஆகிய மூன்றையும் ஒருநிலைப்படுத்தி தேர்வின் கடினத் தன்மையை முற்றிலும் உள்வாங்கி மிக்க கவனத்துடன் படித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் Final Year Degree Course படிக்கும்போதே IAS தேர்விற்கான பயிற்சியை ‘’Faith Can Move Mountains’’ போன்ற இந்திய அளவில் சிறந்து விளங்கும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்கள் ஒரு மனதாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ‘’ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ நம்பிக்கை இருந்தால் மலையும் நமக்கு கடுகாகும். உங்களை நம்புங்கள் உலகை வெல்லுங்கள்.ராஜா , இயக்குநர், Cracking IAS Study Circle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக