புதன், 10 அக்டோபர், 2012

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: கருணாநிதி

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: இறுதி முடிவெடுக்க கண்ணீரும் கம்பலையுமாக கருணாநிதி வேண்டுகோள்!

First Published : 09 October 2012 07:33 PM IST
பிரதமரின் உத்தரவை மதிக்காதது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடக அரசின் மீது 356வது பிரிவைப் பயன்படுத்த மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை...
நெடுங்காலமாக காவேரி தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தீர்வு காணமுடியாமல் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நிலவிட வேண்டியசகோதர உணர்வுக்கும் நெருக்கடி ஏற்பட்டு,இரு மாநிலமக்களும்ஒற்றுமையாகப் பேசி விவாதித்து நட்புணர்வோடு பழகத் தலைப்பட்டால் தான்இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலிவு என்ற நிலையில், என் தலைமையிலே இருந்த தி.மு. கழக ஆட்சியில், அன்றைக்குப் பிரதமராக இருந்த வாஜ்பாய்-ஐச் சந்தித்து, காவேரி ஆணையத்தை 1998ஆம் ஆண்டு உருவாக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் கூட, அந்த ஆணையத்திற்கு மரியாதை காட்டாமல்அதை ஏற்றுக் கொள்ளாமல் “பல் இல்லாத ஆணையம்”, அதனால் ஒரு பயனும்விளையாது என்று, அப்போது இங்கேயிருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாஅவர்கள் அறிக்கைகள் விட்டும், அந்த ஆணையத்தின் கூட்டங்களுக்குச்செல்லாமல் புறக்கணித்து, இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட வேண்டியஉறவும் நேசமும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது.அந்த நேரத்தில் நல்ல வேளையாக திரு. எடியூரப்பா அவர்கள் முதல்அமைச்சராக இருந்த போது நான் அவரிடம் பல முறை விவாதித்து, கர்நாடகமாநிலத்தார்,தமிழக மாநிலத்தார் என்ற இரு மாநிலத்தாரும்விரோதஉணர்வைக் கை விட்டு நட்புணர்வோடு பழகிட வேண்டும் என்பதற்காக பலஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை நான் சென்று திறந்து வைத்தும், அதற்கு ஈடாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையை திறப்பது என்றும் முடிவு செய்து அவ் வண்ணமே இரு மாநிலங்களிலும் இரு விழாக்கள் சகோதர உணர்வோடு நடத்தப்பட்டது.இப்போது திடீரென்று தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரைத்தராமல் கர்நாடக அரசு பிடிவாதம் செய்ததை ஒட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு அதிலும் உரிய பயன் கிடைக்க முடியாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் தர மறுத்த நிலையில்காவேரி ஆணையத்தின் அதிகாரப் பூர்வமான தலைவரான பிரதமர் அவர்களேதமிழகத்திற்குத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்று ஆணைபிறப்பித்த நிலையிலே கூட - அந்த ஆணையை, காவேரி ஆணையத்தின்தலைவர் பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஆணையாகவோ கர்நாடக அரசு கருதாமல் - மேலும் மேலும் வறண்டுகிடக்கும் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரை தர மறுத்து -தாமதம் காட்டி வருவதுமட்டுமல்ல,தண்ணீரைக் கேட்கின்றஉரிமைதமிழ்நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு - அதன்காரணமாக இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு தேடி வருகிறது.தமிழ் நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங்காலமாகவிவசாயத்தையேநம்பி வாழும்தமிழக உழவர் பெருமக்களைபரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாககர்நாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர்கன்னட மக்களுக்கும்,தமிழ்மக்களுக்கும்நிரந்தரமானஒரு பகையை உருவாக்கும்முயற்சியிலேஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக ஆக்கியிருக்கிறது.இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.
தமிழகத்தின் சார்பில் அமைதியான முறையிலும், நீதி மன்றங்களின்வாயிலாகவும்எடுத்து வந்தநிலைப்பாட்டுக்குஎதிராககர்நாடக அரசுஒத்துழையாமை கிளர்ச்சியை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது, இந்திய நாட்டு ஒற்றுமையை வலியுறுத்துகிற அனைவருக்கும் எதிரானசெயலாகும்.காவேரி ஆணையத்திற்கு தொடக்க காலத்தில் இந்த ஆணையத்தின்குழுவின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு வலிவு உண்டு என்பதைநிரூபிக்கும் வகையில்ஆணையத்தின்தலைவரானஒரு பிரதமருடையகருத்தையே அலட்சியப்படுத்தி, அதற்குப் பணிய மறுத்து செயல் படும் அந்தஅரசுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்குமுற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையோடு,நான் பிரதமரைக் கேட்டுக் கொள்வது - இரு மாநிலத்தாரும் அன்பால்பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக்கட்டிக் காக்க வேண்டும்என்பதற்காக, கர்நாடக அரசின் மீதுஅரசியல்சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும். இந்த வேண்டுகோள் கர்நாடகத்தார் மீது எந்த காழ்ப்புணர்வோடும்கூறப்படுவதல்ல. எதிர் காலத்திலாவது மத்திய அரசு கர்நாடகம் போன்று கடியநெஞ்சத்தோடு செயல்படுகிற மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகவும்,தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயான பூமிகளாகஆகி விடக் கூடாது என்பதற்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக