திங்கள், 8 அக்டோபர், 2012

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வெளியுறவுக் கொள்கையாம்! உச்சமன்றம் தலையிடாதாம்!

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க த் தடை இல்லை:
உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க தடை இல்லை:
 சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு
புதுடெல்லி, அக். 8-

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் சுமார் 1 லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. இதனால் வாழ்வாதாரங்களை இழந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் தவித்தபடி உள்ளனர். இந்த நிலையில் சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு எதிராக இது உள்ளது என்று கூறினார்கள். சிங்கள ராணுவத்துக்கு தமிழ் நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால் தமிழக தலைவர்களின்  கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இலங்கை நட்பு நாடு என்பதால் ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் ராஜாராமன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில், "சிங்கள ராணுவத்துக்கு தமிழ் நாட்டில் பயிற்சி கொடுத்தால் அது தமிழக மக்களின் மனதை காயப்படுத்தும்''  என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. மத்திய அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் வக்கீல்கள் வாதம் நடந்தது. நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது, "சிங்கள ராணுவம் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு தடை விதிக்க இயலாது'' என்று உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "இது வெளியுறவுத் துறையைச் சேர்ந்த விவகாரம். அதன் கொள்கை முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக