திங்கள், 8 அக்டோபர், 2012

குழந்தை பிறந்ததும் கொல்லும் கொடுமை என்று முடியுமோ?

பிறந்து 24 மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி ஆண் குழந்தை கிணற்றில் வீச்சு
பிறந்து 24 மணி நேரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி ஆண் குழந்தை கிணற்றில் வீச்சு
சரவணம்பட்டி, அக்.7-


கோவை காளப்பட்டி அசோக் நகர் பாச்சா தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். ஓய்வு பெற்ற என்ஜீனியர். இவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு நடைபயிற்சிக்காக சென்றார்.

அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே கிணற்றை கோவிந்தன் எட்டிப் பார்த்தார். கிணறு 40 அடி ஆளமுள்ளது என்பதால் சரியாக தெரியவில்லை. உடனடியாக அருகிலிருந்தவர்களை அவர் அழைத்தார். அப்போது கோவிந்தனின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் கோபியும், ஊர்பொதுமக்களும் விரைந்து வந்தனர்.

கிணற்றுக்குள் வாலிபர் கோபி இறங்கினார். அழுகை சத்தம் வந்த சாக்கு பையை எடுத்துக் கொண்டு மேலே வந்தார். அங்கு சாக்குபையை பிரித்து பார்த்த போது அதற்குள் பிறந்த 24 மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் குழந்தையை ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்தனர். தவறான உறவால் பிறந்த குழந்தை என்று அதன் தாய் கிணற்றில் வீசிச்சென்றாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக