திங்கள், 8 அக்டோபர், 2012

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு : தூத்துக்குடியில் இன்று விசை ப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்


கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் இன்று விசைபடகு மீனவர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி, அக். 8-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுமின் எதிர்ப்பாளர்கள் இன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம், தருவைகுளம், வேம்பார், திருச்செந்தூர், புன்னக்காயல், மணப்பாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைபடகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் கூடங்குளம் அணுமின்நிலைய முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக