மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை!': நாகநாதன்
சென்னை, மார்ச் 29: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்டக் குழு துணைத் தலைவர் எம். நாகநாதன் தெரிவித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இப்போதுள்ள அரசமைப்பு சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு போதிய நிதி அதிகாரம் இல்லை.அரசு அமைத்த பல்வேறு கமிட்டிகள் இதுகுறித்து எடுத்துக் கூறிய பின்னரும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சிகளை வலுப்படுத்துவதில் சரியான திசையில் செல்லும் வகையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் 73 மற்றும் 74}வது திருத்தங்கள் தேவையற்ற வகையில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன்மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் போன்ற உயர் நிலையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளால் மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சிகளிடையே சுமூக நிலை பாதிக்கும். கலர் டிவி பயன்பாடு: நாட்டிலேயே ஏழை, எளிய மக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1.08 கோடி வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, மேலும் 44.8 லட்சம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும்.இத்தகைய வசதிகளின் பயனை வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அனுபவிக்கின்றனர். இதில் சீனா மட்டுமே விதிவிலக்கு. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிக குடும்பங்களில் டிவி பயன்பாடு உள்ளது என்றார் நாகநாதன். கருத்தரங்கில் அரசு முதன்மை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, கல்லூரி முதல்வர் எம். கலியப்பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/30/2010 3:10:00 AM
3/30/2010 2:17:00 AM