வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எத்தனை எத்தனை மலர்கள் many kind of flowers


எத்தனை எத்தனை மலர்கள்

- இலக்குவனார் திருவள்ளுவன் 


பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்தனர். எனவே, இயற்கையைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட இயலாவண்ணம், மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழும் முறைமைக்கு அடிப்படையான நானிலப்பாகுபாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர். இவையே பின்னர்த் திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று. (படங்கள் தந்த விக்கி பொது நன்றி)
File:முல்லைப் பூச்சரம்.jpg
பூக்களை உவமையாகவும் உருவகமாகவும் கையாளும் வண்ணம் மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து நோய் நீக்கவும் தளர்ச்சி போக்கவும் ஊட்டம் பெறவும் பயன்படுத்தியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கபிலர் தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார். இந்நூல் ஆரிய அரசர் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது. எனவே, இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால் தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்.

தொடர்ச்சிக்கு :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக