சனி, 11 ஆகஸ்ட், 2012

எல்லார்க்கும் மது கிடைக்கும் நாட்டில் கல்வி கிடைப்பதில்லையே!



திருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்

திருமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்டும் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம்

திருமங்கலம், ஆக. 11-
 
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ளது அரசபட்டி கிராமம். அங்கு அந்த கிராமத்திற்கென சுதந்திரம் பெற 13 ஆண்டுகளுக்கு முன் 1934-ல் சிறிய பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. பின் நடுநிலைப்பள்ளியானது. 2010-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்று வருகிறது.  
 
1 முதல் 5-ம் வகுப்பு வரை 105 குழந்தைகள் படித்து வருகின்றனர். கிராம பள்ளியானாலும் அங்குள்ள மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவு பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு 3 கம்ப்யூட்டர் வழங்கி உள்ளது. உயர்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
உயர்நிலைப்பள்ளியாகி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் ஆண்டில் 95 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு 78 சதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் உள்ளனர். அலுவலக உதவியாளர்கள் கிடையாது.  
 
உயர்நிலைப் பள்ளியாகியும் தனி கட்டிட வசதி இன்றி பழமையான ஓட்டுத்தாழ்வார கட்டிடத்திலும் மற்றும் ஒரு சிறிய கட்டிடத்திலும் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதிலும் இடப்பற்றாக் குறையால் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
 
சில நேரங்களில் மழை பெய்தால் கிராம ஊராட்சி கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. சத்துணவு சமையல் அறை மோசமாக உள்ளது. மரத்தடியில் சத்துணவு சமையல் நடைபெறுகிறது. உயர்நிலைப்பள்ளிக்கென ஊருக்கு அருகே 2 ஏக்கர் நிலம் பெற்றப்பட்டு அதில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கட்டிடம் கட்டாமல் முள்புதர் மண்டி கிடக்கிறது.
 
கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டிடத்திற்கு வானம் தோண்டி இரண்டு அடி உயரம் சுவர் எழுப்பியதுடன் அப்படியே நின்று விட்டது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
 
பள்ளியின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்தோம். உயர் அதிகாரிகள் பார்த்து சென்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக