புதன், 3 மார்ச், 2010

வெட்டவெளிச்சமாகும் சாமியார்களின் உண்மை முகம்

பதிந்தவர்_வன்னியன் on March 2, 2010
பிரிவு: செய்திகள்

[வீடியோ இணைப்பு] இந்து மத போதனைகள் செய்துவந்த சாமியார் நித்தியானந்த தமிழ் நடிகை “ர” எழுத்தில் தொடங்கும் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காணொளி வெளியாகி உள்ளது.

இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை “ர” சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை “ர” சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது “ர” மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் சாய்பாபா பற்றி இலண்டன் பிபிசியும் செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது, சாமியார் பிரேமானந்தா,… etc சாமியார் நித்யானந்தா என்று சாமியார்களின் உண்மை முகம்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மக்கள் பகுத்தறிவினை பெற்று மூடநம்பிக்கைகளை ஒழிக்கிறார்களோ அது வரை இதைப்போன்றவைகள் தொடரும்….

புலம்பெயர்ந்துவாழும் எம் உறவுகளும் தனது கஷ்டங்களை தீர்க்க வேண்டி இப்படிப்பட்ட சாமியார்களின் ஆசிரமத்தில் சென்று தங்கி தங்கள் பணத்தினை இழந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

மக்களின் விழிப்புணர்வுக்காக லண்டன் பிபிசி சாய்பாபா பற்றி வெளியிட்ட காணொளியை கீழே இணைத்துள்ளோம்:

Google Buzz(Visited 302

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக