ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: கருணாநிதி கடிதம்



சென்னை, பிப்.27: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.67}ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.58}ம் உயர்ந்தது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது.திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக மத்திய அரசுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் (2010}11) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்தும் உங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.கடந்த சில மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை உயர்வால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது உங்களுக்கு நன்கு தெரியும். டீசல் விலை உயர்வானது, உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.சாதாரண மக்கள், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், டீசல் விலை உயர்வை மட்டுமாவது திரும்பப் பெற நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் கருணாநிதி.பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து, திரிணமூல், தி.மு.க. ஆகிய கட்சிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

நிதிநிலை அறிவிப்புகள் வரும நிதியாண்டு முதல்தானே நடைமுறைக்கு வரும். அவ்வாறிருக்க இவ்விலை உயர்வை மட்டும் உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி சரியாகும்? 2.) இவ்விலை உயர்வைத் தவறு எனக் கருதுவோர் கூட இவ்வாறு முதல்வர் மடல் எழுதியுள்ளதை நாடகமாகக் கருதுகின்றனர் என்பதைத் தினமணியின் கருத்துக் கணிப்பில் 81% வாசகர்கள் வாக்கு மெய்ப்பிக்கின்றது. தமிழினப் படுகொலையின் பொழுது நாடகம் அரங்கேறியதால் எல்லாவற்றையுமே நாடகமாகப் பார்க்கச் செய்கின்றது. ஆட்சிநலன் கருதி திமுக காங்கிரசை விட்டு விலகாது என்பது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்த போதிலும் மகளுக்கு மந்திரி பதவி கிடைக்காமையால் அல்லது மகனின் மந்திரி பதவி பறிபோகும் சூழல் எழுந்துள்ளமையால் கலைஞர் எதிர்ப்புக் குரலை எழுப்புவதாகக் கருதச் செய்கிறது. எனவே, இத்தகைய பழியைத் துடைக்கும் வண்ணம் கலைஞர் தமிழ்நலப் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவரது குரலுக்கு மதிப்பிருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/28/2010 3:15:00 AM

கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக, கர்னாடக மாநில அரசு, 2500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும்' என்று அறிவித்துள்ளார். 10 திட்டங்களுக்கு நிலம் இலவசமாக வழங்கியும், மாநில அரசும் ரயில்வேயும் பாதிப்பாதி நிதி அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையிலும், ஐந்து திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்பிலும் நிறைவேற்றுவதற்கு கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பா ஒப்புதல் அளித்துவிட்டார். அனால் நம்ம தலையெழுத்தை பாருங்கள். மாதம் ஒரு ரெக்கார்டு டான்ஸ் பார்த்துக்கிட்டு ஒரு முதலமைச்சர். ஆமாம் பணம், பாட்டில், பிரியாணி வாங்கிக்கிட்டு ஓட்டு போடும் நாம் அதுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாதுதான்.

By Ramanathan
2/28/2010 2:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக