புதன், 16 பிப்ரவரி, 2011

106 thamizh fishermen jailed: D.M.K. protest:106 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்


தி.மு.க.தொண்டர்களில் பெரும்பான்மையர்க்குத் தமிழ்ப்பற்று இருப்பினும் பிற கட்சியினர்  போல் தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ளதால் அமைதி காப்பர். தலைமைக்கு எதிர்க்கட்சியாக இருந்தால்தான் தமிழ்ப்பற்று வரும் என்பது பலர் கூறும் கூற்று. எனவே, இந்த ஆர்ப்பாட்டம் தேர்தல் தந்திரம் என்றாவது எதிர்க்கட்சியாக மாறுவதற்கான ஒத்திகை என்றாவது கருதப்படும். வேறு வகையில் பார்த்தால்  கையால்ஆகாத அரசு என்ற பெயர் வரும்.  ஆளுங் கட்சி இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும். அலைக்கற்றை ஊழலை மறைப்பதற்கான நாடகம் எனச்  சொல்வார்கள் என அறிந்தும் திடீர்ப்பாசத்தைக் காட்டுவதைவிடச் சோனியாவின் இல்லத்தின் முன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றுகை யிடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++
106 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்


சென்னை, பிப். 15: நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், மீனவர்களை விடுவிக்கக் கோரியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருக்கிறது. சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பும், மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீன்களை அள்ளிச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படையினர் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அத்துமீறி நடந்துகொள்ளும் இலங்கைக் கடற்படையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார். இந்த விஷயத்தில் பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின்பேரில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.மீண்டும் அத்துமீறல்: இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீன்பிடிப் படகுகளும், இந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் 106 பேரும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது. சிறைபிடிக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.  மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கை மீனவர்கள் சிறைபிடித்து, இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கைக் கடற்படையே நேரடியாக தமிழக மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்றதாகவும் மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.இலங்கைத் தூதரகம், துறைமுகங்கள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்: இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை அருகே சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மீனவர்கள் வேலைநிறுத்தம்:இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்

முதலில் உள்நாட்டு தமிழர்களை காப்பாற்ற முடிகிறதா என்று பார்போம்....................
By sarath
2/16/2011 9:37:00 AM
தனியொரு கட்சியாக மாநிலத்தை ஆளுகின்ற, மத்திய அரசை ஆதரித்தும் மந்திரிசபையிலே பங்குபெற்றும் இருக்கின்ற தி.மு.க. யாரை கண்டித்தும் எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது எனத் தெரியவில்லை. தமிழ் வாழ்க என பொத்தம் பொதுவாக கும்பலில் குரல் கொடுப்பது போல இலங்கை அரசு ஒழிக என கோஷம் போட்டால் இப்போதைக்கு சட்டமன்ற தேர்தலை சமாளித்து விடலாம் என கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. மொத்தத்தில் காயமடைந்தவனின் ரத்தத்தைப் பார்த்து மயக்கமடையாமலிருக்க சோடா குடிப்பவனின் நிலையிலிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.
By அய்யன்பேட்டை தனசேகரன்
2/16/2011 9:31:00 AM
தலைவரே, நீங்க தான் முதல்வர் என்கிறதை மறந்துட்டீங்களா? எதிர்கட்சியா இருந்தாத்தான் போராட்டம் எல்லாம் பண்ணனும், ஆளும் கட்சியா இருக்கிறப்ப , கடிதம் எழுதுறது, தந்தி கொடுக்கிறது தானே நம்ம வேலை.
By madhuraikkaaran
2/16/2011 9:25:00 AM
கட்ச தீவை மீட்க்கும் வரை சிங்கள இன வெறியர்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் . ஆர்பாட்டம் , கடிதம் , தொலை நகல் இதெல்லாம் ஒரு பயனும் தராது .
By ***முமசு***
2/16/2011 9:15:00 AM
தலைவரே, நீங்க தான் முதல்வர் என்கிறதை மறந்துட்டீங்களா? எதிர்கட்சியா இருந்தாத்தான் போராட்டம் எல்லாம் பண்ணனும், ஆளும் கட்சியா இருக்கிறப்ப , கடிதம் எழுதுறது, தந்தி கொடுக்கிறது தானே நம்ம வேலை.
By மதுரைக்காரன்
2/16/2011 9:07:00 AM
விடுலை புலிகள் அழிவதற்கும், ஒரு தமிழ் இனமே அடியோடு ஒழிவதற்கும் உறுதுணையாக இருந்த இந்த தமிளினசிங்கம், தன்மான சிங்கம் போலியாக நடத்தம் ஒரு போராட்டம்தான் இது. யாருக்கு காட்டுகின்றாய் இந்த நாடகம்.
By ரா.சேகர்
2/16/2011 7:58:00 AM
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அரசிடமும், ராஜபக்ஷேவிடமும் அனுமதி முன்னரே வாங்கி விட்டீர்களா? இல்லை, மத்திய அரசின் ராசாவிற்கெதிரான நடவடிக்கைக்கும், உங்களிடம் கூட்டணிக்கும் காங்கிரசார் படுத்துகின்ற பாட்டிற்கு எதிரான உங்கள் ஆர்ப்பாட்டமா? இல்லை, மற்ற கட்சியினருக்கு முந்தி விட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமா? தமிழர்கள் இனத்தையே அழிக்க வேண்டும் என்று நினைத்த இலங்கை தன்னுடைய கொள்கையில் பின்வாங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. பாவம் நீங்கள் தான் தடுமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கும் பரவாயில்லைதான். ஆனால் தேர்தல் நேரமாச்சே. இப்பொழுது என்ன ஒரு தமிழ் மாநாடு நடத்திவிடுங்கள்.
By கமலக்கண்ணன்.ம
2/16/2011 7:53:00 AM
என்ன அச்சிர்யம் திமுக ஆட்களுக்கு மீனவர்கள் என்று ஒரு இனம் இருக்கு என்று தெரிகிறது..தேர்தல் வந்தால் எல்லாருக்கும் எல்லாம் தெரிது ....என்ன ஆச்சர்யம்
By Jeyam
2/16/2011 7:39:00 AM
கருணாநிதி காங்கிரசிடம் கட்சியை அடகு வைத்து பல வருடங்களாகிறது. ஏன் இந்த ஏமாற்று நாடகம்?
By கென்னடி
2/16/2011 7:17:00 AM
என்ன சார் ஜெயா கிட்ட ஆட்சியை ஒப்படசிட்ட்ரா கருணா தமிழக அரசை எதிர்த்து போராட்டம் செய்கிறார்களே நடவடிக்கை எடுக்காத அரசை டிஸ்மிஸ் செய்ய சொல்லி போராட்டம் செய்ய போகிறார்களா அய்யோ தலை சுதஊதே
By ramana
2/16/2011 7:17:00 AM
ilankai meenavarkal veru yarum illai. viduthalai pulikalay. ippo pulikal rajapaksa udan kooddu. example k. p. muthalvaray why dont you write a letter to the P.M. and stay in the Wheel chair. If election come you get up from the wheel chair. I fogot once to get a minister post for Alakiri and Kani moli you got up from wheel chair and stayed in Delhi for Days.
By esan
2/16/2011 6:50:00 AM
விடுதலை புலிகள் மீண்டும் உருவாகிவிட கூடாது என்பதில் இலங்கை அரசு கடுமையாக இருப்பதுதான் மீனவர்களை சிறை பிடிப்பது கொடுமைபடுத்துவது என்றெல்லாம் நடக்கிறது என தோன்றுகிறது.இதற்கு முடிவு கட்ட மத்திய அரசுதான் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வெறும் தந்தி கடிதம் தூது என்பதெல்லாம் சரிப்படாது. நம் வலிமையை இலங்கை அரசுக்கு உணர்த்தியே ஆக வேண்டும்.
By ஜெயராஜ் வி.சி.
2/16/2011 6:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஆர்ப்பாட்டம்: கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

First Published : 16 Feb 2011 10:55:03 AM IST


 சென்னை, பிப்.16: நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று காலை இலங்கைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக