புதன், 15 ஆகஸ்ட், 2012

பார்வையற்றவர்களுக்காக ச் செயற்கை விழித்திரை

அமெரிக்காவில் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரை தயாரிப்பு
வாஷிங்டன், ஆக.15-

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வில் ஒளிவீச செயற்கை விழித்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித் திரையை பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து ஓடியது.

அதை பார்த்த விஞ்ஞானிகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர். அதே தொழில்நுட்பத்தை பார்வையற்ற மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக