வியாழன், 19 ஜூலை, 2012

Put sign in hindi - L.I.C.

பல தேசிய மொழிகள்பேசும்  நாட்டில் ஒரு குறிப்பிட்ட  மொழிக்கு மட்டும் தரும் முதன்மையும் சிறப்பும்  நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் எதிர்க்கும் பிளவு மனப்பான்மையையே ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் மத்திய அரசு எல்லா வகையிலும் இந்தியைத்திணித்து வருகிறது. உடனடியாக இந்த ஆணையை த் திரும்பப பெற வேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பம் இட்டால் போதுமானது என அறிவிக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், இந்தி மொழியில் கடிதத் தொடர்பு குறைந்து வருவதால், "அனைத்து ஊழியர்களும், வாரத்தில் ஒரு நாள், இந்தியில் கையெழுத்திட வேண்டும்' என, ஆயுள் காப்பீட்டு கழகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டுக் கழக, தென்மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"தென்மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்து, இந்தியில் குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க வேண்டும். இதற்காக, அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக, திங்கள் கிழமைகளில், இந்தியில் கையெழுத்திட வேண்டும்; கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.'இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை, "அதிக முக்கியத்துவம்' என்ற தலைப்பிட்டு, அனுப்பப்பட்டுள்ளது.இந்தி மொழியில் கையெழுத்திடுவதை, வலியுறுத்துவது தொடர்பாக, ஜூன் 29ம் தேதி, அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டம், மண்டல அளவில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினமலர்  சிறப்புச் செய்தியாளர்


ஏக இந்தி என்று எந்தமிழை மாய்க்க வந்தால்  சாக இந்தி என மாய்த்திடுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக