திங்கள், 16 ஜூலை, 2012

குன்னூரில் இலங்கைப்படையினர் :சிங்கள ஆதரவும் நிற்காது! எதிர் போராட்டமும் ஓயாது!


தற்போதைய செய்திகள்
குன்னூரில் இலங்கை இராணுவத்தினர்: நாளை கருத்தரங்கில் கலந்து கொள்வதால் பரபரப்பு
தினமணி
First Published : 15 Jul 2012 02:59:29 PM IST

Last Updated : 15 Jul 2012 05:48:53 PM IST

குன்னூர், ஜூலை 15: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் உள்பட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்புக் குரல் எழுப்பின. இந்நிலையில், தமிழகத்தில் அவர்கள் பயிற்சி பெற இருந்தது, பெங்களூருக்கு என்று மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இந்தியாவில் எங்குமே இலங்கை ராணுவத்தினர் பயிற்சி பெறக்கூடாது என்று கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.குன்னூருக்கு அருகே கொடநாடு பகுதியில் தமிழக முதல்வர் தங்கியுள்ளார். அவரைக் காண அமைச்சர்கள் பலரும் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில், குன்னூரில் தாஜ் ஹோட்டலில் இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 பேர் வந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு குன்னூரில் எம்.ஆர்.சி எனப்படும் மெட்ராஜ் ரெஜிமெண்ட் செண்டரில் பயிற்சி வகுப்பு இருப்பதாகவும், அவர்கள் இன்று குன்னூரில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு, நாளை நடக்கும் வகுப்பு மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்துக்கு எதிராக, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு என அரசியல் சூழ்நிலை நிலவும்போது, இந்தச் செய்தி குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரும் அந்தப் பகுதியில் தங்கியிருப்பதால், இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து, போலீஸார் தாஜ்-கேட் வே விடுதிக்கு முன்னர் குவிக்கப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பு அந்தப் பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்

கருணாநிதியின் சொல்லை மதிக்காமல் மத்திய அரசு சிங்களவனை அழைத்து மாநாடு கொண்டாட்டம் விருந்து வைப்பதை கண்டித்து முத்தமிழ் காவலர் , தண்டவாளத்தில் தலை வைத்து நிலையத்தில் தரித்து நின்ற ரயிலை நிற்கவைத்த மாவீரன் .ரெண்டரை மணிநேர உண்ணாவிரத்தில் ஓர் இனத்தையே மண்ணோடு மண்ணாக்கிய மாவீரன் . ஆளும் கூட்டணியில் இருந்து வாபஸ் என்று அறிக்கை விட்டு மீண்டும் ரெண்டுமணி நேரத்தில் வாபஸ் பெறுவார் . தமிழ் இனமே கலங்காதே
By vasan
7/15/2012 3:46:00 PM
துரத்த வேண்டும்.
By ஆனந்த்
7/15/2012 3:43:00 PM 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல்: மதிமுகவினர் 52 பேர் கைது
தினமணி
First Published : 15 Jul 2012 08:46:05 PM IST


குன்னூர், ஜூலை.15: குன்னூரில் உள்ள ராணுவ முகாமில் பயிற்ச்சியில பங்கேற்க வந்திருந்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக வினர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.குன்னூரில் உள்ள ராணுவ முகாமில்  பயிற்ச்சிப் பெறுவதற்காக ஞாயிற்றுக் கிழமை 10 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் குன்னூர் கேட்வே தங்கும் விடுதிக்கு வந்திருந்தனர். இவர்களில் இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு திங்கள் கிழமை காலை குன்னூர் டிஎஸ்எஸ்சி எனப்படும் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜில் ராணுவ பயிற்ச்சி அளிக்க உள்ளதாக தகவல்கள் பரவின இதனைத் தொடர்ந்து. மதிமுகவைச் சேர்ந்த கோவை மாவட்ட செயலர் ஆர்.எஸ்.மோகன குமார், கோவை புறநகர் மாவட்ட செயலர் ஈஸ்வரன் உள்ளிட்ட  20 ற்கும் மேற்பட்ட மதிமுகவினர்  நீலகிரி மாவட்ட செயலர் அட்டாரி நஞ்சன் தலைமையில் குன்னூர் கேட்வே தங்கும் விடுதியினுள் நுழைய முயன்றனர் இவர்களை காவல் துறையினர் குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை வழித் தடத்தில் அரை மணி நேரத்திற்கும மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேப் போன்று உதகை தாஜ்  ஓட்டலை முற்றுகையிட முயன்ற 30ற்கும் மேற்பட்ட மதிமுகவினரை காவல்  துறையினர் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் உதகை நகர செயலர் மணிவண்ணன்,மாவட்ட துணை செயலர் விஜயகுமார்,குன்னூர் நகரசெயலர் கிங்ஸ் ராஜன், பொதுக் குழு உறுப்பினர் பி.சி சேகர், கோத்தகிரி ஒன்றிய செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர செயலர் தமிழகம் சபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
சென்னை, ஜூலை 15-

தமிழ்நாட்டில் நடைபெறும் ராணுவ முகாமிற்கு இலங்கை அதிகாரிகளை அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சி முகாம் குன்னூரில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, வங்கதேசம், சீனாவைச் சேர்ந்த் 40 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

இதில் இலங்கை சார்பில் 4 அதிகாரிகள் வந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தாம்பரம் முகாமில் இலங்கை விமானப்படை வீரர்கள், பயிற்சி பெற்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வீரர்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்திருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அதிகாரிகளை வெளியேற்றாவிட்டால் வெலிங்டன் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் பெரியார் தி.க. எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக