திருவலிதாயம் சிவன்கோயில் thiruvalithayam_sivankoil

பாடி எனப் பெயர் விளங்கும் ஊர்கள் 
   முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்று பெயர் பெறும். திருத்தொண்டராகிய சண்டேசுரர் ஆக்களை (பசுக்களை) மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி என்று தேவாரம் கூறுகின்றது. கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ் நூல்கள் குறிக்கின்றன. வட ஆர்க்காட்டில் ஆதியில் வேலப்பாடி என்னும் குடியிருப்பு உண்டாயிற்று. வேல மரங்கள் நிறைந்த காட்டில் எழுந்த காரணத்தால் அது வேலப்பாடி என்று பெயர் பெற்றதென்பர்.
  நாளடைவில் காடு நாடாயிற்று. வேலப்பாடியின் அருகே வேலூர் தோன்றிற்று. கோட்டை கொத்தளங்களையுடையதாய் வேலூர் சிறப்புற்றபோது ஆதியில் உண்டாகிய வேலப்பாடி அதன் பகுதியாய் அமைந்துவிட்டது.
  தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற ஊராகிய திருவலிதாயம் இப்பொழுது பாடியென்றே அழைக்கப்படுகின்றது.
அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum
சொல்லின் செல்வர்இரா.பி.சேது(பிள்ளை): தமிழகம் ஊரும் பேரும்
படம்: நன்றி : தனசேகரன்
பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan