செவ்வாய், 27 ஜனவரி, 2026

மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா

      26 January 2026      கரமுதல



தமிழ்க்காப்புக் கழகம்வையைத்தமிழ்ச்சங்கம்இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கு விழாவையும் நிகழ்த்தின.

தொடக்கத்தில் எழுத்தாளர் மணா எழுதி இயக்கிய உயிருக்குநேர் என்னும் மொழிப்போர் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்விற்குத் தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். செயலர் தமிழ்க்காதலன் இணைப்புரை வழங்கினார். வையைத்தமிழ்ச்சங்கத்தலைவர் புலவர் ந.ந.இளங்குமரன் வரவேற்புரை ஆற்றினார். இளமுனைவர் நெல்லை சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த உரையை அளித்தார். பேரா.ப.மருதநாயகம், முனைவர் மு. முத்துவேலு ஆகியோர், மொழிப்போர், சங்கத்தமிழ்ச்சிறப்பு, இவற்றில் இலக்குவனார் பங்களிப்பு, விருதாளர்கள் குறித்துப் பாராடடிப் பேசினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய இந்தி நுழைவ எந்நாளும் தடுப்போம் என்னும் நூலினைப் பேரா.முனைவர் ப.மருதநாயகம் வெளியிட, இயக்குநர் சுதா, முனைவர் முத்துவேலு, பொறி.இ.திருவேலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரையில் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கங்களைக் குறிப்பிட்டார். மேலும் பராசக்தி திரைப்படத்தின் நிறைகுறைபற்றி ஆராயாமல், மொழிப்போர் குறித்த முதல் திரைப்படத்தை எடுத்து இக்காலத்தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக இயக்குநருக்கு விருது வழங்கப்படுவதாகக் கூறினார்.

பின்வருவாேருக்குச் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன. விருதுகளைப் பேரா.ப.மருதநாயகம் வழங்க விருதிதழ்களை முனைவர் மு.முத்துவேலு வழங்க நினைவு நூல்களைப் பொறி.திருவேலன் வழங்கினார்.

இப்படத்தின் இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கராவிற்கும் அதன் கதைஉரையாடல் ஆசிரியர் திரு அருச்சனனுக்கும் இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருதுகள் வழங்கப்பெற்றன.

இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருதுகள் , குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக, மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும் வழங்கப்பெற்றன.

இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருதுகள், முனைவர் அ.இராமசாமி – எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு  ஆகியாருக்கு வழங்கப்பெற்றன.

மேலும், பின்வரும் வகையில் இலக்குவனார் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன.

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  3. முனைவர் பொ.நா.கமலா
  4. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  5. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  6. முனைவர் ப.பாண்டியராசா
  7. முனைவர் செங்கைப் பொதுவன்
  8. முனைவர் செ.இராசேசுவரி
  9. புலவர் ச.ந.இளங்குமரன்
  10. குளச்சல் (இ)யூசுபு

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா
  4. முனைவர் வே.தீனதயாளி
  5. முனைவர் வெ.இரமேசுகுமார்

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

இலக்குவனார் இலக்கியச் செம்மணி விருது

முனைவர் முத்துவேலு

நிறைவாகக் குழுப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னர் தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு நன்றி நவின்றார்.

வியாழன், 22 ஜனவரி, 2026

மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா

 





 (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)

நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

ஆவணப்படம் திரையிடப்படும்.

எழுத்தும் இயக்கமும்:  மூத்த இதழாளர் மணா

தொடர்ந்து

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: புலவர் ச.ந.இளங்குமரன்

தலைமையுரை:  இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

வாழ்த்துரை  : பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு

இயக்குநர், உலகச்சட்டத்தமிழ் மையம், சென்னை

பொன்னாடைக்கு மாற்றாகச் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விருதாளர்களுக்கும் நினவளிப்பாக ‘வேண்டவே வேண்டா இந்தி’ அல்லது தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் நூல் வழங்கல்:

நான்கு பல்கலைக்கழகங்கனின் மேனாள் துணை வேந்தர்

நன்றியுரை:  தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு


விருதாளர்கள்

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  3. முனைவர் பொ.நா.கமலா
  4. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  5. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  6. முனைவர் ப.பாண்டியராசா
  7. முனைவர் செங்கைப் பொதுவன்
  8. முனைவர் செ.இராசேசுவரி
  9. புலவர் ச.ந.இளங்குமரன்
  10. குளச்சல் (இ)யூசுபு

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா
  4. முனைவர் வே.தீனதயாளி
  5. முனைவர் வெ.இரமேசுகுமார்

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது

60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை ‘பராசக்தி’ என்னும் பெயரில் அளித்தமைக்காக

  1. இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கரா
  2. தை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்

.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது

  • முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
  • எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக

ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது

  • குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
  • மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும்

செவ்வாய், 20 ஜனவரி, 2026

இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு

      20 January 2026      கரமுதல



தமிழ்க்காப்புக் கழகம்,  வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது

  1. ஆ.) இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
  2. பேரா.முனைவர் ப.மருதநாயகம்
  3. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
  4. முனைவர் பொ.நா.கமலா
  5. முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
  6. முனைவர் முகிலை இராசபாண்டியன்
  7. முனைவர் ப.பாண்டியராசன்
  8. முனைவர் செங்கைப் பொதுவன்
  9. முனைவர் செ.இராசேசுவரி
  10. புலவர் ச.ந.இளங்குமரன்

இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது

  1. முனைவர் ஏ. கோதண்டராமன்
  2. நெல்லை சோமசுந்தரி
  3. முனைவர் கு.சக்திலீலா

ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது

  1. புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
  2. முனைவர் தேமொழி
  3. முனைவர். செயந்தி நாகராசன்
  4. இலட்சுமி குமரேசன்
  5. கவிஞர்.ச.சங்கீதா

உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது

  1. முனைவர்.பயசு  அகமது

ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது

60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக

  1. இயக்குநர் திருவாட்டி சுதா
  2. கதை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்

.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது

  • முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
  • எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக

ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது

  • குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
  • மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர் ஆவணப்பட எழுத்திற்கும் இயக்கத்திற்கும்

இவ்விருதுகள் வரும் தை 11. 2057  ஞாயிறு  மாலை 5.30 மணிக்கு வழங்கப் பெறும்.

நிகழ்விடம் : தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

தை 06, 2057 / 20.01.2026


வியாழன், 15 ஜனவரி, 2026

பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்

 







    கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.

   அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல அஃது அனைவருக்கும்  பொதுவான நூல் என்கிற பொருளில் மேற்கண்ட கருத்தினைச் சொல்லியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன்

. பகவத்து கீதையை மையப்படுத்தி அவர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் தமிழறிஞர்கள் மத்தியில் பேசுபொருளானதுடன் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும் வல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான இலக்குவனார் திருவள்ளுவன், ‘பகவத்து கீதை மதநூலே அல்ல’ என்று விவாதித்து வருகிறார்.

   இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது,

“மதம் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். மதம் என்பதன் ஆங்கிலச் சொல் ரிலீசியன்(religion). இந்தச் சொல் relegare என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் இணை, பிணை என்பனவாகும். அந்த வகையில்  மதம் என்பது ஒருவரை ஒருவர் இணைக்க வேண்டும்; மக்களைப் பிணைக்க வேண்டும். அதனால் இந்த இலக்கணத்திற்கிணங்க பகவத்துகீதை இருக்கிறதா எனப் பார்ப்போம்.

   மதநூல் என்பது மக்களை இணைக்க வேண்டும். அவர்களிடையே பிணைப்பை உருவாக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி ஒருவரைத் தாழ்த்தி இருக்கக் கூடாது. யாரையும் இழித்தும் பழித்தும் கற்பித்தல் கூடாது. அப்படி இருந்தால்தான் அது மதநூல். அந்த அடிப்படையில் பகதவ்துகீதையை ஆராய்ந்தால், ‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவப் பிறப்புறுப்பிலிருந்து(யோனியிலிருந்து) பிறந்தவர்கள்” என்று அத்தியாயம் 9, சுலோகம் 32 இல் கீதை கூறுகிறது. பெண்களையும் பிராமணர் அல்லாதவரையும்  இழிவாகக் கூறுகிற கீதை அனைத்து மக்களையும் எப்படி  இணைக்க முடியும்? அதனால் கீதை எங்ஙனம் மத நூலாக இருக்க முடியும்?

“எப்போது அதருமம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வருணக் குழப்பம் உண்டாகிறது.” (1.41) என்கிறது பகவத்து கீதை ஆண்கள் கெட்டுப் போகலாம். ஆனால், அப்போது அதருமம் சூழாதாம். ஆனால், பெண்கள் கெட்டுப்போனால் மட்டுமே அதருமம் சூழ்கிறதாம். இப்படிக் கூறும் பகவத்து கீதை எப்படி மதநூலாகும்?

    மேலும், பெண்கள் கெட்டுப் போகும்போது வருணக் குழப்பம் உண்டாகிறது என்கிறது கீதை. அப்படியென்றால் என்ன பொருள்?

   பெண்கள் பிற வருணத்தாருடன் சாதியினருடன்) உறவு கொள்வதால் வருணக் குழப்பம் உருவாகிறது என்பதே இதன் பொருள்.. அஃதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிராகக் கற்பிக்கப்படுகிறது. இதற்காகவே வருணவகைகளை வலியுறுத்துகிறது கீதை  இப்படிப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளை விதைக்கும் பகவத்து கீதையை எப்படி மத நூலாக ஏற்க முடியும்?

நான்கு வருணத்தைக் கூறி மக்களிடையே உயர்வு தாழ்வை வலியுறுத்துவதே பகவத்து கீதையின் அடிப்படை. கீதையின் விளக்க நூல்களைப் பார்த்தாலே இது நன்றாகப் புரியும். மக்களிடையே வேறுபாடுகளை உண்டாக்கி அதற்கேற்ப குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குச் சாதகமாக எழுதப்பட்ட நூல் எங்ஙனம் மதநூலாகும்?

இன்னும் சொல்லப்போனால், ஒரு மதநூலானது மக்களிடையே ஆணவத்தை, அகம்பாவத்தைக் கற்பித்தல் கூடாது. அடக்கத்தை உணர்த்த வேண்டும்; அன்பை வலியுறுத்த வேண்டும். ஆனால், பகவத்து கீதை அப்படியில்லை.  தானே எல்லாம் என்பதாகக் கிருட்டிணன் கூறுவது கீதையில் உள்ளது. குறிப்பாக “நான் சடங்கு, நான் வேள்வி, நான் முன்னோர்களுக்கான உணவு, நான் மருந்து, நான் மந்திரம், நான் நிச்சயமாக நெய், நான் நெருப்பு, நான் அவி(பலி உணவு), நானே நான்” என்று கீதையில் கூறுகிறான் கிருட்டிணன்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவர், நான்(உடம்பு),எனது(பொருள், உடைமை, சொத்து) என்று கருதும் ஆணவத்தையும் அகங்காரத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பவனே இறைவனை அடைந்து உயர்ந்த உலகை அடைவான்(குறள் 346) என்று கூறுகிறார். இததகைய தமிழ்நெறியே தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நானே எல்லாம்எனக் கூறுகிற கீதை எங்ஙனம் மதநூலாகும்?

    உலக மாந்தரின் நல்வாழ்விற்காக எந்நாளும் ஏற்றவழி கூற வேண்டிய கீதை, சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வகுப்பினரின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுகிறது. ஒரு வகுப்பாரைப் போற்றியும்  ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியும் பேசுகிறது கீதை. பிற மத மக்களை நேசிக்கக் கற்றுத் தராவிடடாலும பரவாயில்லை. ஆனால், சொந்த மக்களையே நேசிக்கக் கற்றுத் தரவில்லையே! அவ்வாறிருக்க  இந்து மத நூல் என்று கீதையை எப்படிக் கூற முடியும்?

மதநூல் என்பதையும் கடந்து அது பொதுவான நூல்  என்றும் சிலர் பரப்பி வருகின்றனர். மதம் என்கின்ற ஒன்று இருக்கிறதா? என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. மதம் இருப்பதாக வைத்துக் கொண்டால் மதத்தின் இலக்கணத்தின்படி இல்லாத பகவத்து கீதை மத நூல் அல்ல; அனைவருக்கும் பொதுவான நூலும் அல்ல” என்கிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்.

புதன், 14 ஜனவரி, 2026

தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! – இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

மார்கழி > தை  2056 >2057

2026