புதன், 24 ஏப்ரல், 2024

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00

ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி .காருண்யா

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் 

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை சிவம்

உலகத்தமிழ் மாமணி, முனைவர் . இரா. சிவகுமாரன், சிங்கப்பூர்

தொடர்ந்து என்னூல் திறனரங்கம் - இரு சிற்றேடுகள்

1. இலக்குவனார் நூறு

 2. திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்

ஆய்வர்:  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரை:  பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மயிலை இளவரசன்


திங்கள், 22 ஏப்ரல், 2024

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் : இதழரங்கம்

 




தமிழே விழி!                                                                                                    தமிழா விழி!  

மிழ்க்காப்புக் கழகம்

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்

இதழரங்கம்

சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல்  அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது.

ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம்.

ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த வெவ்வேறு கட்டுரை அனுப்பலாம்.

பக்க வரையறை: குறைந்தது 4 பக்க அளவில்; கூடுதல் வரம்பு இல்லை.

கிரந்த எழுத்துகளையும் அயற்சொற்களையும் தவிர்த்துக் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அயற்சொற்களையோ அயற்பெயர்களையோ குறிப்பிடுகையில் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடுதல் நன்று.)

தவறான கருத்துகளுக்கு மறுப்புரை அமையலாம். ஆனால், தாக்குரை அமையக்கூடாது.

கூறியது கூறலைத் தவிர்ப்பதற்காக இவ்விதழ்அரங்கத்தில் பங்கேற்போர்

தங்களின் பெயர்

கட்டுரைத் தலைப்பு

கட்டுரையில் இடம் பெறும் அறிஞர்கள் பெயர்கள்

முகவரி

மின்வரி

பேசி எண்

ஆகிய விவரங்களை

இவ்வாண்டுச் சித்திரை 18/மே முதல் நாளுக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம்.

கட்டுரைகளை வைகாசி 17/30.05.2024 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

சிறந்த கட்டுரைகளை வழங்கும் ஐவருக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பெறும். பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.

கட்டுரைகளுக்கான கலந்துரையாடல் எழுத்தாடலாக நடைபெறும். கருத்து பகர்வோர் குறிப்புரைகளும் தொடர்ந்து இடம் பெறும்.

கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளியிடப்பெறும். ஆதலின் அவரவர் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தையும் அனுப்ப வேண்டுகிறோம்.

பங்கேற்பு இசைவையும் கட்டுரையையும் அனுப்ப வேண்டிய மின்வரி:

madal.akaramuthala@gmail.com

தலைவர்

தமிழ்க்காப்புக்கழகம்

தொடர்பு எண்கள் : தலைவர் 98844 81652 ;  செயலர் :  80565 62267





புதன், 10 ஏப்ரல், 2024

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.  (திருவள்ளுவர், திருக்குறள், 394)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்சித்திரை 01, 2055 / 14.04.2024 இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 89 & 90 ; என்னூலரங்கம்

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்த்திரு த.மகராசன்

புலவர் தி.வே.விசயலட்சுமி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

சனாதனம் – பொய்யும் மெய்யும்’

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

சனி, 6 ஏப்ரல், 2024

மலர்க்கொடிஅன்னையின்‌ மலரடிபோற்றி!

 




மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

யார்‌அர செனினும்‌ தமிழ்க்குக்‌ கேடெனில்‌

போர்முர சார்த்த வீறுடை மறவர்‌

இலக்குவனாரின்‌ இனிய துணையாய்‌

செருக்களம்‌ நோக்கிச்‌ செல்கென விடுத்த

தருக்குடை மறத்தி;தமிழ்நலன்‌ காக்கும்‌

விருப்புடன்‌ துணைவர்‌ சிறைக்களம்‌ புகினும்‌

பொறுப்புடன்‌ மக்கள்‌ சுற்றம்‌ காத்திடும்‌

பெருந்துணை நல்லாள்‌; இல்லம்‌ ஏகிய

மறைமலை அடிகளும்‌ திருக்குறளாரும்‌

முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. அவர்களும்‌

வள்ளுவர்‌ காட்டிய வாழ்க்கைத்‌ துணையாய்‌

விருந்து பேணிடும்‌ குறள்நெறிச்‌ செம்மல்‌

என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்‌;

கலக்கம்‌ நீக்கிக்‌ கனிவைப்‌ பொழிந்து

இலக்குவர்‌ போற்றிய இனிய தமிழ்த்தாய்‌

மலர்க்கொடி அன்னையின்‌ மலரடி போற்றி!

தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டமே உயிர்த்துடிப்பாக வாழ்ந்த தமிழ்க்காப்புப் போராளிக்குத் தக்க துணையாக விளங்கிய அந்தப் பெருந்தகையாட்டிக்குப் புகழ் வணக்கம் செலுத்துவது அவருடைய பிள்ளைகளுக்கு மட்டுமன்று; தமிழர் அனைவருக்குமே உரிய கடமையாகும்.

– முனைவர் இ.மறைமலை,

குறள்நெறி, பங்குனி 19, 2055 / ஏப்பிரல் 01, 2024, மலர்க்கொடி இலக்குவனார் நூற்றாண்டு (6.04.1924-14.12.1988நிறைவுச் சிறப்பிதழ்




செவ்வாய், 26 மார்ச், 2024

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024

 


கனடாவில் உலகத்

 தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, 9/2024