B.J.P. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
B.J.P. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 நவம்பர், 2012

இராமனை எனக்குப் பிடிக்காது - பா.ச.க.தலைவர் இராம்செத்மலானி

பா.ச.., மாநலங்களவை உறுப்பினர் இராம் செத்மலானி: 

இராமாயண இராமன் ஒரு மோசமான கணவர்; அவரை எனக்குப் பிடிக்காது. சில மீனவர்கள் சொன்னதற்காகத் , தன் மனைவியான சீதையை, வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர். அதேபோல, இலட்சுமணனையும் எனக்கு பிடிக்காது.
 
தினமலர்

புதன், 10 அக்டோபர், 2012

நல வாழ்விற்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்குக் கி.வீரமணி பாராட்டு

நல வாழ்விற்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்கு க் கி.வீரமணி பாராட்டு
சுகாதாரத்துக்கு முதல் இடம்: மத்திய மந்திரி கருத்துக்கு கி.வீரமணி பாராட்டு
சென்னை, அக். 10-

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்நாட்டில் கோவில்களை உருவாக்குவதைவிட, கழிப்பறைகள் அமைப்பது மிகவும் அவசியம் என்பது போன்ற ஒரு கருத்தைச் சொன்ன மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசுக்கு உடனே பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் 63.2 சதவிகித வீடுகளில் டெலிபோன் (செல்போன் இதில் 52.3 சதவிகிதம்) மேலும் வீட்டுக்கு வீடு டெலிவிஷன் உண்டு. ஆனால், சுமார் 49.8 சதவிகித பகுதி வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது என்பது எவ்வளவு விசித்திரமானது. எனவே 100 சதவிகித கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்ற இலக்குக்கே முன்னுரிமை தரவேண்டும்.

பக்தி இல்லாவிட்டால் என்ன நட்டம்? சுகாதாரம் இல்லாவிட்டால் இப்படி நாள் தோறும் மனித ஆயுள் சுருங்கித் தீருமே. இதை எண்ணிப்பார்க்க வேண்டாமா. எனவே மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி அந்தக்கூற்று உண்மையே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பாசக வேடிக்கை பார்க்காது: பொன். இராதாகிருட்டிணன் பேச்சு

பாஜக வேடிக்கை பார்க்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

First Published : 08 Aug 2011 12:41:42 AM IST


ராமேசுவரம், ஆக. 7: தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரக் கோரி, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக சார்பில் கடல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தலைமை வகித்து, அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த மத்திய காங்கிரஸ் அரசும், அதற்குத் துணைபோன திமுக அரசால் இன்று தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.  கச்சத்தீவில் பாதுகாப்பாக மீன் பிடிக்கும் உரிமை வேண்டி நானும், சுப.நாகராஜன் உள்ளிட்ட சில தொண்டர்களும் சுமார் 6 மணி நேரம் நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று மறியல் போராட்டம் நடத்தினோம்.  மத்திய அரசு மீனவர்கள் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண வேண்டும். தமிழனுக்கு அநீதி ஏற்பட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது. இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பாஜக சார்பில் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தி, கச்சத்தீவை மீட்போம் என்றார்.  பாஜக தேசியச் செயலர் முரளீதர ராவ் பேசியதாவது:  இந்தியனுக்கு இடமில்லாத கச்சத்தீவில், சீன வீரர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச இடம் அளித்துள்ளார். இதைக் கண்டிக்காமல் பிரதமர், வெளியுறவுத் துறை, உள்துறை அமைச்சர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கு காங்கிரஸ், திமுக அரசுகள் மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளன. இந்தியர்களின் மூச்சுக் காற்று பட்டாலே இலங்கை காணாமல் போய்விடும். ஆனால், தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொன்றும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.  இதற்கு மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி, பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்வதில்தான் அக்கறை காட்டி வருகின்றனர்.  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். அப்போது அந் நாட்டு அரசிடம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்த நிறுத்த வலியுறுத்துவார் என்றார் முரளீதர ராவ். 

இராமேசுவரத்தில் பாசக கடல் முற்றுகை: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ராமேசுவரத்தில் பாஜக கடல் முற்றுகை: 
5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

First Published : 08 Aug 2011 12:42:38 AM IST

Last Updated : 08 Aug 2011 03:47:12 AM IST

ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாகப் பேசியபடி வந்த பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
 ராமேசுவரம், ஆக. 7: தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வலியுறுத்தி ராமேசுவரத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.  தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  போலீஸாரின் அனுமதி மறுப்பை மீறி நடந்த இப்போராட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5,000-த்துக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்து கொண்டனர்.  ராமேசுவரம் துறைமுகம் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, கட்சியின் மாநில முன்னாள் தலைவர்கள் லட்சுமணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை விளக்கிப் பேசினர்.  அப்போது, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் சுப. நாகராஜன் உள்ளிட்டோர் ராமேசுவரம் கடற்கரையில் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே, போலீஸôர் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் மேடை நோக்கி வந்த ராதாகிருஷ்ணன், தொண்டர்களிடம் பேசுகையில், நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று 6 மணி நேரம் கடல் மறியல் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.  உடனே உற்சாகமடைந்த தொண்டர்கள், அவரை தோளில் தூக்கியபடி மீண்டும் கடற்கரை நோக்கிச் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பாஜகவினர் நடத்திய இந்தக் கடல் மறியல் போராட்டம் போலீஸாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீனவர்கள் போல கடற்கரை ஓரத்தில் நடந்து வந்ததாகவும் அவர்கள் கடலுக்குள் செல்லவில்லை எனவும் உளவுப் பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.  இப்போராட்டத்துக்கு இந்திய, இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி யூ. அருளானந்தம், மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், பாம்பன் சிப்பிசேசு ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஆகசுட் 7- இல் பாசக கடல் முற்றுகைப் போராட்டம்; சுசுமா சுவராசு பங்கேற்பு

இந்திய நிலையில் இச்சிக்கலைக் கொண்டுபோகும் பா.ச.க.விற்குப் பாராட்டுகள். வெறும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்விற்கும் தமிழ் ஈழ மலர்ச்சிக்கும் வழி வகையில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஆகஸ்ட் 7-ல் பாஜக கடல் முற்றுகை போராட்டம்; 
சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பு

First Published : 29 Jul 2011 12:25:12 PM IST


சென்னை, ஜூலை 29: ஆகஸ்டு 7-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக நடத்தும் கடல் முற்றுகைப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்தும், இதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

செவ்வாய், 26 ஜூலை, 2011

manmohansingh and pa.chidambaram should be resigned - Nidhin: மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

First Published : 26 Jul 2011 03:03:17 AM IST


 புதுதில்லி, ஜூலை 26: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.  தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதிட்டபோது, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஆலோசித்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  இது குறித்து தில்லியில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது:  2ஜி உரிமம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் நடைபெற்று இருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் பதவி விலக வேண்டும்.  இவர்கள் இருவரும் சட்ட ரீதியாகவும், தார்மிக அடிப்படையிலும் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்.  ஆ.ராசா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன் வைக்கப்படுவதாகக் கூறினாலும், அவரது சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அனைவராலும் கவனத்தில் கொள்ளக் கூடியது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2003-ல் தான் முதல் முறையாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று, தொலைத் தொடர்பு துறை அலைகற்றை உரிமம் வழங்குவதற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலைக்கற்றை உரிமம் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார். உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளன. இதை ஒழுங்குபடுத்த மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் தவறி விட்டனர். இதன் மூலம் மலிவான விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கு ப.சிதம்பரம் மறைமுகமாக உதவி இருக்கிறார்.

சனி, 30 ஏப்ரல், 2011

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது

வாழ்க உங்கள் முயற்சி! பரவுக உங்கள் உணர்வு! வெல்க உங்கள் நோக்கம்! குற்றவாளிகள் அனைவரும தண்டிக்கப்படட்டும்!  ஆனால், காங்.ஆட்சி மாறினால்தான் இது கைகூடும் என்பதை எண்ணி ச் செயல்படுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது
First Published : 30 Apr 2011 02:51:27 AM IST

இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மா
சென்னை, ஏப். 29: போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சுமத்திய இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த 60-க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.  இலங்கையில் நடைபெற்ற போரில் அங்கு இனப்படுகொலைகள் நடைபெற்றதாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜக இளைஞர் அணி அறிவித்திருந்தது.  இதன்படி, பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் பாலகணபதி, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தமிழிசை சொளந்தர்ராஜன் உள்பட அக்கட்சியினர் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை கூடினர். இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். சிலர் ராஜபட்ச உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்துவிட்டனர்.  பிறகு இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக அவர்கள் சென்றனர். தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர் அவர்களை தடுத்தனர். இதனால் போலீஸôருக்கும், பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸôரின் பாதுகாப்பையும் மீறி பாஜகவினர் சிலர் தூதரகத்தை நோக்கிச் சென்றனர். இதையடுத்து, போலீஸôர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கர்நாடக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை


பெங்களூர், அக்.25: கர்நாடகத்தில் அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் உள்பட 7 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூர், பெல்லாரியில் சுமார் 60-65 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சில சுரங்க நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. எம்எல்ஏக்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்படுவதாக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

குமாரசாமி முதலான எதிர்க்கட்சியினர் காங்.உடன் இணைந்து பேரம் பேசி வெற்றி கண்டதால்தானே ஆட்சிக்கு எதிப்பான சதி அரங்கேறியது. அவர்கள் வீடுகளில் ஏன் ஆய்வு செய்ய வில்லை? அரசு எந்திரத்தைப் பயன்படுத்தித் தனக்கு எதிரானவர்களை மிரட்டும் காங்.கின் செயல் நாளை அவர்களுக்கே எதிராகத் திரும்பும் என்பதை நினைவில் கொண்டு செயல்படல் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2010 2:42:00 AM
தினமனி நல் வழ்த்துகல் நம் நட்டுக்கு தேவை ரானுவ ஆட்சிதான். ஜனனாயகத்தை மூட்டை கட்டி வைக்கலாம்
By M. Annamalai
10/25/2010 9:04:00 PM
ALL MLAs AND MPs AND MINISTERS! FIRST AFFIDAVIT SUBMITED AT THEIR FIRST ELECTION MUST BE SCRUTINISED AND THE PRESENT ASSET MUST BE COMPARED WITH THE AFFIDAVIT AND EXCESS PROPERTY MUST BE CONFISCATED. RAID SHALL BE CONDUCTED AT THE RESIDENCES OF ALL POLITICIANS. WHO IS TO BELL THE CAT?
By M. Annamalai
10/25/2010 8:54:00 PM
INCOME TAX RAID NEED ALL OVER INDIA AND INOME TAX OFFICER HOME ALSO MUST RAID WEEKLY.
By manoharan
10/25/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

ராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி.க்கள் ​சந்​திப்பு வெறும் நாட​கம்: ​பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன்



சென்னை, ​​ ஜூன் 10: இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை,​​ தமி​ழக எம்.பி.க்கள் சந்​தித்​துப் பேசி​யது வெறும் நாட​கம் என்று பா.ஜ.க.​ மாநி​லத் தலை​வர் பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​ ​​ இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​ ​​ பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​பட்ச புது​தில்லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது.​ ​​ ஏற்​கெ​னவே இலங்கை சென்று ராஜ​பட்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் தில்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ ​​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்​வ​தையே இப்​போ​தும் ராஜ​பட்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.​​ இலங்​கை​யில் நடை​பெ​றும் கொடு​மை​யை​விட,​​ ஆளும் காங்​கி​ரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்​றும் ராஜ​பட்ச நடத்​தும் நாட​கம் பெரும் கொடு​மை​யாக உள்​ளது.​ ​ ​​ இந்​தியா -​ இலங்கை இடையே இப்​போது 7 ஒப்​பந்​தங்​கள் கையெ​ழுத்​தா​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இலங்​கைத் தமி​ழர் பிரச்னை பற்றி மேம்​போக்​கான,​​ கண்​து​டைப்​பான ஒரு ஒப்​பந்​தம் தவிர,​​ திட்​ட​வட்​ட​மான நட​வ​டிக்​கை​கள் எது​வும் இல்லை.​ இதி​லி​ருந்தே,​​ தமி​ழர்​களை ஒழிப்​ப​தில் இந்​தி​யா​வும்,​​ இலங்​கை​யும் கூட்​டாக செயல்​ப​டு​வது வெட்ட வெளிச்​ச​மா​கி​றது.​ ​​ இந்​தி​யா​வில் தேடப்​ப​டும் குற்​ற​வா​ளி​யான இலங்கை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்​தா​வை​யும் ராஜ​பட்ச தன்​னு​டன் அழைத்து வந்​தி​ருக்​கி​றார்.​ ​​ இந்​திய நாட்​டின் சட்​டம்,​​ ஒழுங்கு எவ​ரை​யும் விட்டு வைக்​காது என்​பதை புரிய வைக்க வேண்​டும்.​ எனவே,​​ டக்​ளஸ் தேவா​னந்​தாவை உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும்.​ ​​ இலங்​கை​யில் நடக்​கும் மறு சீர​மைப்​புப் பணி​க​ளில் சீனர்​க​ளைப் பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அந்​தப் பணி​களை தமி​ழர்​க​ளுக்கு வழங்க ராஜ​பட்​ச​வி​டம் இந்​திய அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்று பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.
கருத்துக்கள்

நாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன்ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 27 மே, 2010


கல்வி நிறுவனங்களில் மதரீதியாக பாகுபாடு: தமிழகம் முழுவதும் ஜூலையில் பாஜக ஆர்ப்பாட்டம்: இல.கணேசன்



கோவை, மே 26: கல்வி நிறுவனங்களில் மதரீதியாக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். ÷கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:÷சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கான படிவத்தில் வருமானம் குறித்த எவ்விதத் தகவலும் கேட்கப்படவில்லை. ஆனால், இந்து மாணவர்களுக்கு வருமானம் அடிப்படையிலேயே, குறைந்த மாணவர்களுக்கே, குறைவான தொகையே உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. ÷முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், பிற மதத்தினருக்கும் அதேபோல வழங்க வேண்டும். இல்லையெனில் பொருளாதார அடிப்படையில் உதவித் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.÷இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோவையில் ஜூலை 18-ல் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.÷மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, பணவீக்கத்தைக் குறைக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்குச் சென்றுவிட்டது. ÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அரசியல் மாநாடு அல்ல என்பதால் அதை பா.ஜ.க. வரவேற்கிறது. மேலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறுவதில் பா.ஜ.க.வின் முயற்சியும் இருந்தது. ÷வரும் பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளைத் துவக்கியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

நம்நாடு மதச்சார்பற்ற நாடு அன்று. பல்சமயச் சார்பு நாடு. இந்த நிலை மாறவேண்டும். சிறுபான்மையர் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனரோ அத்தனை விழுக்காட்டு அளவில்தான் மொத்தக் கல்விக் கூடங்களில் சிறுபான்மைக் கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். சான்றாகப் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும மேலானவை தெலுங்குச்சிறுபான்மையர் என்ற போர்வையில் நடததப்படும் தெலுங்கர் கல்வி நிறுவனங்களே. சமயத்திற்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழர் சமயம் சிறுபான்மையாகி விட்டதால் தாய்ச் சமயத்தையும் தாய் மொழியையும் ஊக்குவிக்கும் வகையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழர் சமயம் எனக்குறிப்பவர்க்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். பிற சமயங்களின் ஆதிக்கம் நம் நாட்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று, நாகரிக, மொழிச் சிறப்புகளை அழிக்கின்றன என்பதை உணர வேண்டும். ஐரோப்பியக் கிறித்துவர்கள் தமிழ்ச்சிறப்பைப் போற்றினார்களே தவிர தமிழர் சமயத்தைத் தழுவவில்லை. பிற சமயங்களின் சிறப்புகளைப் போற்றும் மனப் பக்குவம் வேண்டும். ஆனால், சமய மாற்றம் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஒகேனக்கலில் குடிநீர்த் திட்டம் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானது: இல.கணேசன்



கோவை, மே 26: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானதுதான் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.கோவை ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழக அரசு சார்பில்தான் நடத்தப்படுகிறது. திமுக மாநாடாக இருந்திருந்தால் பாஜக பங்கேற்றிருக்காது. தமிழர்களின் மாநாடாக இருப்பதால் பங்கேற்கிறது.தமிழகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக தமிழர்களுக்கு இருக்கும் பிரச்னை. பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே தடுமாறி வருகின்றனர். ஒவ்வொரு இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் வெவ்வேறு வகையில் பிரச்னைகள் உள்ளன. இவற்றுக்கு இம்மாநாட்டில் தீர்வு கிடைக்க பாஜக குரல் கொடுக்கும்.முல்லைப் பெரியாறு போன்ற அண்டை மாநில நதிநீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்த வேண்டும். இதற்காக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.காங்கிரஸ் ஆட்சியில் அங்கிருந்த முதல்வர், கட்சிகள் தெரிவித்த கருத்துக்கும், இப்போதுள்ள முதல்வர் மற்றும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. ÷ஒகேனக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், திட்டப்பணிகள் துவக்கப்பட்ட இடம்தான் சர்ச்சைக்குரியது என்று கர்நாடகத்தில் குரல் எழும்பியுள்ளது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்குச் சொந்தமானதுதான் என்றார்.
கருத்துக்கள்

மிகச் சரியான உரை.இது போல், தமிழ்நலம் நாடித் தங்கள் கட்சியை அழைத்துச் சென்றால் அவர்களுக்கும் நல்லது. தமிழகத்திற்கும நல்லது. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 4 மே, 2010

இதுவல்லவா இராசதந்திரம்...(ஆசிரியருரை)



நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக சிபு சோரன் வாக்களித்ததற்காக,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவரது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி.​ ""நீங்கள் ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள்,​​ நாங்கள் ஆதரவு தருகிறோம்.​ எனக்குத் துணை முதல்வர் பதவி தாருங்கள் போதும்'' என்று முதல்வர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சொன்னவுடன்,​​ ஆதரவு வாபஸ் என்கிற தீர்மானத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டது.​ இந்த மனமாற்றம் பாஜக எதிர்பாராதது.​ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி பாஜக தலைமை ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது,​​ பாரதிய ஜனதாவின் பலவீனத்தைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ,​​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இன்னொரு தடால் பல்டி அடித்துவிட்டது.​ தந்தை சிபுசோரனே தொடர்வார் என்கிற மறு அறிவிப்பை வெளியிட்டார் ஹேமந்த்.​ இப்போது சிபு சோரன் ஜாலியாக சிரித்தபடி முதல்வராகத் தொடர,​​ பாஜக தனது முகத்தில் அசடு வழிய நேற்று சிபு சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது.சிபு சோரன்,​​ காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக வருத்தம் தெரிவித்த அவரது மகன் ஹேமந்த்,​​ இது தெரியாமல் நடந்த பிழை என்று தெரிவித்ததுடன்,​​ அதற்குச் சொன்ன காரணம் என்ன தெரியுமா?​ ​ "மிகவும் மோசமான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துவிடக்கூடாது.​ பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டால் அதன் பின்னர் அங்கே காங்கிரஸ் தனது ஆட்சியை அமைத்துவிடும்' ​ என்பதுதான் சிபு சோரன் தரப்பின் வாதம்.​ அதாவது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கவிழ்ந்து விடக்கூடாது என்கிற சகதாபம்.​ ஆனால்,​​ மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமைத்துவிடலாகாது என்கிற ஆவேசம்.​ பலே,​​ இதுவல்லவா அரசியல் நேர்மை!ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் ஆதரவுடன் சிபு சோரன் ஆட்சி தொடரும் என்றும்,​​ அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் பதவியையும் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டு,​​ மத்திய அமைச்சர் பதவிக்கு சிபு சோரன் வருவார் என்றும் பேச்சு எழுந்தது.​ இன்னொரு பக்கம்,​​ ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமைப்பார்கள் என்றும் பேசப்பட்டது.​ இப்போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல,​​ எதுவுமே நடக்காததுபோல சிபுசோரன் முதல்வராகத் தொடர்கிறார்.​ பாரதிய ஜனதா வாய்மூடி கண்கட்டி,​​ காதுகளைப் பொத்திக் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறது.​ இதுவல்லவா அரசியல் நேர்மை!மத்தியில் ஆதரவு,​​ மாநிலத்தில் எதிர்ப்பு என்பது இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளும் மேற்கொண்டுள்ள அதிசயக் கொள்கை.​ அமைச்சரவையில் பங்குபெறாமல்,​​ பெரிதாக ஆதாயம் ஏதும் இல்லாதபோதிலும்கூட,​​ கம்யூனிஸ்ட் கட்சிகளும்,​​ மத்திய கூட்டணியில் ஆதரவாகவும்,​​ மாநிலத்தில் அதே கூட்டணிக் கட்சிக்கு எதிராகவும் செயல்படும் அரசியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது,​​ பதவி மோகத்தில் இருக்கும் சிபு சோரன் போன்றவர்கள் எத்தகைய அரசியலை கையில் எடுத்தாலும் ஆச்சரியமில்லை.​ ஆகவே,​​ அவர் வெட்டுத் தீர்மானத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக,​​ நாங்கள் கேளாமலேயே வாக்களித்தார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும்கூட,​​ ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.சிபு சோரன் காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தபோது,​​ அதைப் பொருள்படுத்தாமல்,​​ அடுத்த வேலையைப் பார்த்திருந்தால் பாரதிய ஜனதாவுக்கு இத்தகைய சங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்காது.​ மேலும்,​​ சிபு சோரன் இந்த வெட்டுத் தீர்மானத்தில் பாஜகவுடன் துணை நின்று,​​ காங்கிரஸýக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி வந்திருக்கப் போவதில்லை.​ இதற்குப் போய் இவ்வளவு கோபப்பட்டு,​​ இப்போது தர்மசங்கடத்தில் ஆள்பட்டு...​ பாஜக-வுக்கு இது ஒரு சோதனைக் காலம் போலும்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் ​(20 இடங்கள்)​ வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற முறையிலும்,​​ பெரும்பான்மை இல்லாத ஒரே காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாத ஏக்கத்திலும்,​​ ஏதோ அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியாகப் பங்கு பெறும் வாய்ப்பையும் ஏன் இழக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறதுபோலும்.​ ​ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன்,​​ சசிநாத் ஜா கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்றபோது,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று பாஜக செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமல்ல.​ ஆனால்,​​ அதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல்தான் பாஜக,​​ சிபு சோரனுக்கு ஆதரவு தந்தது.​ அவரும் பழைய கதைகளை நினைக்காமல்தான் ஆதரவை ஏற்றார்.​ ​பதவிக்காக எதையும் செய்யத் துணிந்த கட்சி என்று காங்கிரûஸ வர்ணிக்கும் ஏனைய கட்சிகளும் காங்கிரஸ் காட்டிய பாதையில்தான் பயணிக்கின்றன என்பதற்கு இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம் ஏராளம்.​ குழந்தைகளைக் கமர்கட்டைக் காட்டி ஏமாற்றுவதுபோல,​​ நீங்கள் ஆட்சி அமையுங்கள் என்று பதவி ஆசை காட்டி ஏமாற்றி,​​ இப்போது அதுவும் இல்லாமல் செய்திருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ராஜதந்திரத்தை பாராட்டத்தான் வேண்டும்.படித்த முட்டாள்களைப் படிக்காத புத்திசாலி ஜெயித்துவிட்டாரே!
கருத்துக்கள்

அருமையாக உள்ளது. ஆட்சி்ப் பொறுப்புக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் அதனைத் தங்க வைத்துக் கொள்தவற்காக எதையும் செய்வார்கள் என்பது இயல்புதானே! மக்கள் விழித்தெழாதவரை இவ்வவலங்கள்தொடரத்தான் செய்யும். அதுவரை நீங்கள் ஊதுகின்ற சங்கை ஊதிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள் செவியில் விழுந்து மாற்றம் ஏற்படாமலா போகிறது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/4/2010 2:39:00 AM

Gatkari is a novice.Shibu Soren has taught a bitter lesson to BJP.BJP is now reduced to a laughing stock as for as Jarkhand is concerned.They have not yet learned the basics of politcs.Had they saught the advice of seniors,they might not have landed in a quagmire.

By K.Sugavanam
5/4/2010 2:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 13 நவம்பர், 2009

வருத்தத்தோடு விலகுகிறேன்; மகிழ்ச்சியுடன் இணைகிறேன்: திருநாவுக்கரசர்



சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமை வந்த திருநாவுக்கரசரை சால்வை அணிவித்து வரவேற்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு.
சென்னை, நவ. 12: "பாஜகவில் இருந்து வருத்தத்தோடு விலகுகிறேன். காங்கிரஸில் மகிழ்ச்சியுடன் இணைகிறேன்' என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார். தில்லியில் கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் முதன்முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வியாழக்கிழமை வந்தார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து அவரை வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, மக்களவை உறுப்பினர் ஜே.எம். ஹாரூண், முன்னாள் அமைச்சர் பூவராகவன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் பாஜகவில் இருந்து விலகுவது வருத்தமாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு அவர் அழைத்ததன்பேரில் 2002-ல் பாஜகவில் இணைந்தேன். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேரவில்லை. வாஜ்பாய் நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பாஜக முழுமையாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. ஜின்னா குறித்து கருத்து தெரிவித்த பிறகு அத்வானியும் கட்சி தலைவர் பதவியில் இருந்து கண்ணீருடன் வெளியேற வேண்டிவந்தது. இப்போது அடுத்த தலைவர் யார் என்பதைக்கூட முடிவு செய்ய முடியாத நிலையில் பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜகவை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்டோர் தங்களுக்கு தொடர்பில்லாத கட்சியாகப் பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு கடந்த காலமும் இல்லை. எதிர்காலமும் இல்லை. தமிழகம்தான் எனது அரசியல் களம். எனவே மத்தியப் பிரதேசத்தில் எம்.பி.யாக இருந்து தமிழக மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாது. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முயன்றேன். அதுவும் முடியவில்லை. பாஜகவில் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். அன்போடு நடந்து கொண்டார்கள். ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்த பிறகே காங்கிரஸில் இணைந்தேன். காங்கிரஸில் இணைந்த பிறகுகூட ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "குட்பை' சொன்னேன். ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தங்கபாலு உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடன் இணைந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபடுவேன். டிசம்பர் முதல் வாரத்தில் திருச்சியில் இணைப்பு விழா நடைபெறும். சோனியா அல்லது ராகுல் காந்தி ஆகியோரில் ஒருவர் அதில் பங்கேற்பார்கள் என்றார் திருநாவுக்கரசர்.
கருத்துக்கள்

கொலைகாரக் கும்பலில் அடைக்கலமாகும் திருநாவுககு மன்னிப்பே கிடையாது. குழு அரசியலில் சிக்கி அவதிப்படுவதே அவருக்கான தண்ட‌னை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:40:00 AM

Thirunavukkarasu, you are a traitor. You will pay price for your actions.

By ganesh
11/13/2009 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 5 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கூடாது :
பா.ஜ.க. கருத்து



சென்னை கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் இல. கணேசன். உடன் (இடமிருந்து) முன்னாள் மாநிலத் தலைவ
சென்னை, அக். 4: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார். இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபட்சவுக்கு துணைப் போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது: இலங்கையில் மின் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும். இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டிக்கிறோம். சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்துப் பாடத் திட்டத்தையும் தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். பசுவதைத் தடைச்சட்டம் தமிழகத்தில் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சேமநல நிதியில் 3 முதல் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் போடுவது குறித்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் எச். ராஜா.

கருத்துக்கள்

சரியான கருத்தைத் தெரிவிக்கும் பாசக விற்குப் பாராட்டுகள்.தமிழ்ப்பகை கொண்ட இந்தியம்ஈழத் தமிழர்களை எங்கும் குடியுரிமை கிடைக்காமல் நாடற்றவர்களாக ஆக்குவதில்தான் கவனம் செலுத்துமே தவிர பிற வெல்லாம் இழுத்தடிக்கும் திசை திருப்பும் போக்கே ஆகும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 9 ஜூன், 2009

வேதனையளிக்கிறது இலங்கைத் தமிழர் நிலை: சுஷ்மா ஸ்வராஜ்
தினமணி
First Published : 09 Jun 2009 03:13:40 AM IST

கருத்து்கள்

ஈழத் தமிழர்களின் வேதனை கண்டு உண்மையிலேயே பா.ச.கட்சி துன்புற்றால் உடனடியாகக் காங்.அரசின் போ்ர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும். அது ஒன்றுதான் உடனடித் தீர்வாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 3:47:00 AM