வெள்ளி, 29 ஜூலை, 2011

ஆகசுட் 7- இல் பாசக கடல் முற்றுகைப் போராட்டம்; சுசுமா சுவராசு பங்கேற்பு

இந்திய நிலையில் இச்சிக்கலைக் கொண்டுபோகும் பா.ச.க.விற்குப் பாராட்டுகள். வெறும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் வாழ்விற்கும் தமிழ் ஈழ மலர்ச்சிக்கும் வழி வகையில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஆகஸ்ட் 7-ல் பாஜக கடல் முற்றுகை போராட்டம்; 
சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பு

First Published : 29 Jul 2011 12:25:12 PM IST


சென்னை, ஜூலை 29: ஆகஸ்டு 7-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக நடத்தும் கடல் முற்றுகைப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்தும், இதனை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக