சனி, 10 ஜூலை, 2010

தமிழில் படித்தவருக்கு அரசு வேலை: முதல் நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர்


சென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

அவசரப்படுத்தி விளம்பரப்படுத்தியிருக்க வேண்டா. மேலும் பல நியமனங்கள் ஆனபின்பு வந்திருந்த போட்டியாளர்களில் தமிழ்வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுத்த பணியிடங்கள் என்ற அளவில் விரிவாக வெளியிட்டிருக்க வேண்டும். பொறுப்புள்ள பணி ஒன்றில் தமிழ்வழி பயின்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளித்து நியமனம் வழங்கியிருந்தால் பெருமை கொள்ளவும் வாய்ப்பாக இருந்திருக்கும். இப்பொழுது் அடிப்படைப்பணி (கடைநிலைப்பணியை)யைப் போன்ற பணிகளுக்குத்தான் தமிழில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் ஏற்படும். மேலும் அரசாணை பிறப்பிக்காமலேயே தமிழில் படித்தவர் என்ற முன்னிரிமை அடிப்படையில் இப்பொழுது வேலை வழங்கியிருந்தால் இதற்கு முன்பு இந்த நடை முறையைப் பின்பற்றாதது ஏன் என்ற வினாவும் வெளிவரும். கருணை அடிப்படைப்ப ணியமர்த்தம்போல் தோன்றும் இப்பணியமர்த்தத்திற்குரிய பணியிடம் பெயர் ஒளிப்பட இயக்கியர் என்பதாகும். நகல் பெருக்கியாளர் என்பது முன்பு வெட்டச்சுத்தாள் (stencil paper)மூலம் படிப்பெருக்கியில் படிகள் எடுக்கும் பணியிடத்தைக் குறிப்பதே. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 3:38:00 AM
டேய் நாதாரி புதியவன் ராஜ்,உங்க தலைவர் ...தமிழிலில் படித்தவருக்கு ..ஒரு கல்லூரி விரிவுரையாளர் பதவியோ ..அல்லது ஒரு உயர்த்த அரசு பதவியோ ...தகுதியின் அடிப்படையில் வழங்கி இருந்தால் பெருமை படலாம்...இதற்கு...ஏனடா ...இந்த விளம்பரம்....பண்ணாடைகள...
By Rajendran
7/9/2010 11:33:00 PM
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற தி.மு.க. வின் கொள்கைக்கு ஏற்ப தமிழில் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றிய கலைஞருக்கு பாராட்டுக்கள். முன்னுரிமையில் பேதுருவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அவர் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். நல்ல விசயங்கள் காமாலை கண்களுக்கு தெரிவதில்லை அதான் வழக்கம் போல தூற்றுகிறார்கள்.
By புதியவன் ராஜ்
7/9/2010 9:32:00 PM
Xerox operator? For this you need only to push some buttons. One need not need Tamil. Even a lay man can operate. Xerox also will come in any language and not only in classical Tamil. What for this dramas? Appoint vice chancellors, professors,teachers, Chief Secretaries, secretaries etc., if Tamil need to be respected. Appointing a xerox operator is just to see the opposition and court cases, RTI applications etc. rushing for the act and to stop the drama, citing the cases.
By karunakaran
7/9/2010 8:12:00 PM
வேலை அவருக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது . அவர் கட்சிகாரரா , வேலைக்கு அவர் மபு செய்திருந்தாரா , அவர் தமிழில் எதுவரை படித்திருக்கிறார் . இல்லை இந்த பெயரில் வேலை பெறுவதற்கு எதாவது செலவு செய்தாரா. நல்ல தமிழ் நாடு , வேலை ஆணையைக் கூட விழா நடத்திக் கொடுப்பது. பொது நல வழக்குப் போட நல்ல காரணம். ஆனால் தலைவிதி தமிழனுக்கு , கூத்தாடி கூத்தாடி , போட்டு உடைக்கிறாண்டி கருப்புக் கண்ணாடி. கண்ராவி
By ambalavanan
7/9/2010 7:57:00 PM
only can do karunanithi, play like this ugly ugly drama, see what this posting xerox operator, what a shame man. 60 lack employee has been with out any job. please dont issue like this news please.
By riyas ksa
7/9/2010 6:53:00 PM
தலைவா போதும் உங்கள் தமிழ் பற்று, தமிழும் திராவிடமும் பேசி, இந்தியா ஆத்திரம் அடைந்து லட்சகனக்கான தமிழர்களை கொன்றுவிட்டது, இன்னும் கோடிக்கணக்கான தமிழர்கள் சாவுக்கு வழி செய்து விடாதீர்கள்.
By CH
7/9/2010 4:49:00 PM
அவனவன் இங்கிலிஷ்ல படுச்சுப்புட்டு ..வக்கீல் ஆகுறான்!!!...தமிழன் தமிழ்ல படுச்சுப்புட்டு அந்த வக்கீலுக்கு பியுனாவும் ::பெல்பாயாவும் ...கக்கூஸ் கூட்டவும் பணி நியமனம் பெற்று இன்புறுகிறான் ! எண்ணற்ற மொழிகளில் புலைமை பெறுவதில் தவறில்லையடா தமிழா !!!!! நீ கிணற்றுத் தவளையாக இருந்து குண்டிச் சட்டிக்குள் குதிரை ஒட்டாதேட என் இன்பத் தமிழா !!! @ rajasji
By rajasji
7/9/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக