ஈராக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈராக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2010

ங்கும் இங்குமாகப் பலர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியை உதயை வீரையன் தினமணி மூலம் அருமையாகக் கேட்டுள்ளார்.  வ்ல்லரசின் கைப்பொம்மையாகச் செயல்படும் அமைப்பை எவ்வாறு பன்னாட்டு அவை என்று சொல்ல முடியும். செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கேற்ப முடிவெடுக்கும் ஓர்
அமைப்பை எவ்வாறு அனைத்து நாடுகளின் அமைப்பாகச் சொல்ல முடியும்.   ஈழததில் படுகொலை புரிந்த பொழுது  அதைத் தடுத்து நிறுத்த வேண்டியவர்களுடன் இணையாமல் கொலைகாரக் கூட்டணியுடன் இணைந்த கொடுங்கோலர் பொறுப்பில் இருந்தும் யாராலும் தட்டிக்  கேட்காமல்   இருந்த அமைப்பபை எவ்வாறு  உலக அமைதிக்கான அமைப்பாகக்கூற முடியும்?  ஒபாமா வருகையின்  பொழுது மட்டுமல்ல, மாவீரர் நாள் நெருங்குவதற்கு முன்பும் ஆனச் சரியான காலத்தில் வந்துள்ள அருமையான கட்டுரை.இதனை வெளியிட்டுத் தன் உணர்வையும் வெளியிட்டு்ள தினமணிக்குப் பாராட்டுகள். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஐ.நா. மன்றம் அவசியமானதா?


ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்கப்பட வேண்டும்; இதற்கு அமெரிக்கா ஆதரவு தரும்...'' என்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தாற்காலிக இடம்பெற்றுள்ள இந்தியாவுக்கு இது ஆறுதலான செய்திதான். ஆனால், உலக அமைதிக்கு இந்த அவை உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறதா?இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் என்ன? உலகெங்கும் வாழும் மக்களிடம் சில நேரங்களில் இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் இருக்கிறது. உலக அமைதிக்காகவும், மனித உரிமைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதைச் செயல்படுத்த இயலாதபோது அதற்கு என்ன மரியாதை இருக்கும்?அமெரிக்க ஏகாதிபத்திய நாடு ஆப்கானிஸ்தான்மேல் படையெடுத்தபோதும், இராக்மேல் படையெடுத்து அதன் அதிபரை அநியாயமாகக் கைது செய்து, விசாரணை என்ற பெயரால் மரண தண்டனை விதித்து தூக்குமேடை ஏற்றியபோதும் இந்த அவை வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.இலங்கையில் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோதும், மூன்று லட்சம் பேரை முள் வேலிக்குள் போட்டு சித்திரவதை செய்கிறபோதும் ஐ.நா. அவையும், அதன் பொதுச் செயலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, "இந்த ஐ.நா. அவை எதற்காக இருக்கிறது?' என்ற கேள்வி எழுகிறது.இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைக் கண்டுவிட்டது; அதன் விளைவுகளையும் உணர்ந்துவிட்டது. முதல் உலகப் போரின் முடிவில் "சர்வதேச சங்கம்' அமைக்கப்பட்டது. அது ஒழுங்காகச் செயல்படாததால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதன் முடிவின் தொடக்கமாகவே 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை உதயமானது. இரண்டாம் உலகப் போர் மக்களுக்கு அளவற்ற துன்பங்களையும், இழப்புகளையும் கொண்டு வந்தது; இந்தப் போரில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருள்சேதம் ஏற்பட்டது; ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன; மனித மேதைமையின் மாபெரும் படைப்புகள் அழிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் காயம், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போருக்கு மனிதகுலம் தந்த விலை எழுத்தில் அடங்காதது. சோவியத் யூனியன் 20 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பறிகொடுத்தது; அமெரிக்கா 4 லட்சம் பேரையும், பிரிட்டன் 3 லட்சத்து 70 ஆயிரம் பேரையும் இழந்தது. ஜெர்மன் தரப்பில் 13.6 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர்; காயம் அடைந்தனர்; சிறைப்பிடிக்கப்பட்டனர். இதன் ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜப்பானின் இழப்பு வரலாறு மறக்காதது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 அன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஒரே நொடியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரைச் சாம்பலாக்கியது; 1,56,555 பேரை முடமாக்கியது. 1945 நவம்பர் 20 முதல் 1946 அக்டோபர் 1 வரை நியூரென்பர்கில் சர்வதேச ராணுவ டிரிப்யூனலில் முக்கிய ராணுவக் குற்றவாளிகளின் மீது நீதி விசாரணை நடந்தது. இது ஆக்கிரமிப்பை மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாக அறிவித்தது; நியாயமாகத் தண்டித்தது. நியூரென்பர்க் டிரிப்யூனலின் தீர்ப்பில் காணப்படும் சர்வதேச உரிமை பற்றிய கோட்பாடுகளை ஐ.நா. சங்கப் பொதுச்சபை உறுதிப்படுத்தியது. இதன்மூலம், ஆக்கிரமிப்புப் போரும், மனிதகுலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களும் மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாகும் என்று ஐ.நா. அவை அறிவித்தது. இந் நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின்கீழ் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1948 டிசம்பர் 10 அன்று ஏற்றுக்கொண்டது. "மனித உரிமைகள் பொதுப் பிரகடனம்' அனைத்து நாடுகளும் ஏற்று நடக்க வேண்டிய ஒன்றாகும். 1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மனித உரிமைகள் மீறலால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டது. அந்த மாநாடு வியன்னா பிரகடனம் ஒன்றையும், செயல்திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. அதன்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் 30 விதிகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளைக் குடியியல், அரசியல் உரிமைகள் என்றும், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். குடியியல், அரசியல் உரிமைகள் இக்கால மக்களாட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது மக்களாட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. வாழ்க்கை, சுதந்திரம், தனிமனிதப் பாதுகாப்பு உரிமைகள், அடிமைத்தனம், சித்திரவதையிலிருந்து விடுதலை, சட்டத்தின் முன் சமத்துவம், சட்டத்துக்குப் புறம்பான கைது, சிறையீடு அல்லது நாடு கடத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு, நியாயமான விசாரணை என இந்த உரிமைகள் தொடர்கின்றன. இத்தனை மனித உரிமைகளையும் காலிலே போட்டு மிதிக்கும் இலங்கை அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; எச்சரிக்கைகள் மட்டுமே பலன் தந்துவிடுமா? ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு கொழும்பு சென்றார். ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் சென்றபோது தென்பகுதியில் சிங்களர்கள் "வெற்றி விழா' கொண்டாடிக் கொண்டிருந்தனர். வடக்கே தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைபட்டு, போதிய உணவு, மருந்து, தண்ணீர் இன்றி வேதனையின் விளிம்பில் இருந்தனர். இதேபோன்று ருவாண்டா, போஸ்னியா, காஸô மற்றும் டாவூரில் இனப்படுகொலை நடந்தபோதும் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. இதனால் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு இல்லை. எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்காகவே இடம்பெயர்ந்தனர். ஐ.நா. அமைப்பு ஒருசில நாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பாதுகாப்பு அவையில் விவாதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவர விரும்பியபோது சீனா அதன் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறி அதனைத் தடுத்துவிட்டது. பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 சாதாரண உறுப்பினர்களும் இருக்கின்றனர். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளுக்கே "வீட்டோ' அதிகாரம் உள்ளது. பெரிய சோஷலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா இனப்படுகொலையை ஆதரிக்கிறதா? ஐ.நா. மனித உரிமை அவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 16 நாடுகள் கையொப்பமிட்டால்தான் ஒரு தீர்மானம் விவாதிக்க முடியும் என்பது விதி. இலங்கையில் இருதரப்பும் இழைத்த போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானமும் கைவிடப்பட்டது. இதற்கு மாறாக இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 20 - 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் உள்பட 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நா. மனித உரிமை அவை நிறைவேற்றிய தீர்மானம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. "இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது; இது மனித உரிமை அவையின் கையாலாகாத் தன்மையைக் காட்டுகிறது' என மன்னிப்பு சபை சாடியுள்ளது, "ஐ.நா. மனித உரிமை அவை படுதோல்வியைச் சந்தித்துள்ளது' என்று லண்டன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இந்த இனப்படுகொலையை முற்போக்கு முகாமைச் சேர்ந்த சீனா, ரஷியா, வியட்நாம், கியூபா முதலிய இடதுசாரி நாடுகள் ஆதரித்து வருவதையே உலகம் வேதனையோடு விமர்சனம் செய்கிறது.இவர்களுக்கு மானிட விடுதலை பற்றி அக்கறையே இல்லையா? சொந்த நாட்டின் சுயநலத்தில் அடங்கிவிட்டார்களா? மனித உரிமை பற்றியும், உலக அமைதி பற்றியும் பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  இந்தியாவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. 'காந்தியம்' என்பதும் "ராஜீவ் காந்தியம்' எனக் குறுகிப் போய்விட்டது. இந்திய நாடு இலங்கையை ஆதரித்து நிற்பது ஒன்றும் வியப்பல்ல. "இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது' என இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாகவே பேசியுள்ளார். இந்தியா இதனை மறுக்காமல் பெருமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் யாருக்கும் வெட்கமில்லை. மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதுபோல உலகத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. அவை வலிமைமிக்கதாக இருக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மூன்றாவது உலகப் போரை உலகம் சந்திக்கும்.  அதன்பிறகு மனித இனமே இருக்காது.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்/வாஷிங்டன், அக்.23: இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலை "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.இராக் போர் குறித்து 4 லட்சம் ஆவணங்களை திங்கள்கிழமை வெளியிடப் போவதாக "விக்கிலீக்ஸ்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த ஆவணங்கள் வெளியானால் பொதுமக்களுக்கும் இராக்கில் உள்ள பன்னாட்டு வீரர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பென்டகனில் பன்னாட்டுப் படைகளின் (நேட்டோ) தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக்ஸ்ராஸ்முùஸன் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் 4 லட்சம் ஆவணங்களின் முக்கிய தகவல்களை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.இராக் போரின்போது நடத்தப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள் ஆகியன ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. இராக்கில் உள்ள பொதுமக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது  குறித்தும், இராக் ராணுவத்துக்கு ஈரான் எந்த வகையில் உதவியது என்பதும் இராக் ராணுவ மற்றும் போலீஸôரின் செயல்பாடு குறித்தும் டைம்ஸ் நாளேட்டில் தகவல் வெளியாகியுள்ளது.உலகிலேயே ராணுவத்தின் போர் ரகசியம் இந்த அளவுக்கு அம்பலமானது இதுவே முதல் முறை. இராக் போரில் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081, ஊடுருவல்காரர்கள் 23,984, இராக் ராணுவத்தினர் 15,196, கூட்டுப் படை வீரர்கள் 3,771 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 3,92,000 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.விக்கிலீக்ஸ் இணையதள தகவல் வெளியீட்டால் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை பென்டகன் நியமித்துள்ளது என்று பென்டகன் பத்திரிகை தொடர்பு அதிகாரி ஜெஃப் மாரெல் தெரிவித்தார்.அச்சுறுத்தல் அதிகமுள்ள 300 இராக்கியர்களை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.போர் குற்றத்துக்கான நிர்பந்தங்கள் குறித்த கள அறிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படைகளும் இராக் அரசும் எந்த அளவுக்கு வரம்பு மீறியுள்ளன என்பது புரியும் என்று விக்கிலீக்ஸ் இணையதள தலைமை ஆசிரியர் ஜூலியன் அஸôஞ்ஜ் குறிப்பிட்டுள்ளார்.அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 92 ஆயிரம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.இம்முறை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லெ மோன்டே, அல் ஜஸீரா, டெர் ஸ்பெகல் ஆகிய ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் சிறப்புப் பேட்டியில் ஜெஃப் மாரெல் கூறியிருப்பது: தனிநபரும் சட்டத்தை மீறலாம் என்பதற்கு விக்கிலீக்ஸ் வழிவகை செய்துள்ளது. ரகசிய தகவல்களை உலகிற்கு வெளியிட்டதோடு, இவை எதிரிகள் கையில் கிடைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை அங்குள்ள பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரகசியங்களை அறிந்து ராணுவத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் இராக்கில் உள்ள கூட்டுப் படைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு டிசம்பரில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் 3,800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஷியா-சன்னி முஸ்லிம் இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டபோது ராணுவம் ஷியா பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உலகெங்கும் இவ்வாறு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த உலகச் சான்றோர்கள் முன்வர வேண்டும். பொறுப்பான ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் பிறநாடுகள் முயல வேண்டும். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற் படுகொலைகள் குறித்தும் நடைபெறும் அட்டூழியங்கள் குறித்தும் வெளிக் கொணர்ந்து பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விக்கிலீக்சு பொறுப்பாளர்கள் வாழ்க! வாழ்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:04:00 AM
அடாவடி அமெரிக்க மீது உலக நாடுகள் உடனே போர் தொடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். உலக அரங்கில் முதல் தீவிரவாத நாடு அமெரிக்கா தான் அமெரிக்கா ஊடகங்கள் கூட உண்மை செய்தியை தந்து நடுநிலையை கடைபிடித்து உள்ளது ஆனால் இந்திய ஊடகங்களோ அமெரிக்காவின் பிச்சை காசுக்காக உண்மையை மறைக்கிறது.
By Thakbeer ali
10/24/2010 1:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *