” நடப்பு அரசியலை வெளிப்படையாகப் பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக் கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமே அந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றி வருகிறார் ” என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம்.
‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதை யாக இனித் தமிழேந்தி வரமாட்டார். அரசியல் கவிதை அற்றுப்போகாமல் காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின் பயணம் நின்றுவிட்டது.
தமிழின விடியலுக்கான எல்லாப் போராட் டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சி முழக்கமிடும் போராளித் தமிழேந்தி குரலைஇனிக்கேட்கவாய்ப்பில்லை!
பாவலர் தமிழேந்தி உலகவாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
இன்று சித்திரை 22, 2050 / 5-5-19 ஞாயிறுமாலை 5 மணிக்கு உடல்கொடைஅளிக்கப்படஉள்ளது.
மார்க்சியத்தின் பால் ஆழ்ந்த பற்றும் -பெரியார் அம்பேத்கர் கொள்கையில் உறுதியும் கொண்ட பாவலர்.
காஞ்சிஅமுதன்யோகநாதன்
தமிழ்த் தேசிய விடுதலையையும் பெரியாரித்தையும் உயிர் மூச்சாக கொண்டு, களம் பல கண்டு வாழ்ந்தவர்.
தமிழீழம், தலைவர் பிரபாகரன் குறித்து பல பாடல்கள் எழுதியுள்ளார்.
– விசுவநாதன்கரிகாலன்
மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமை கட்சியின் முன்னணியாளர் எழுச்சிக் கவிஞர் தோழர் தமிழேந்தி.
சில மாதங்களுக்கு முன்பு, தோழர் ‘குலுக்கை’ செல்லையா அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஐயா தமிழேந்தியின் உடல்நிலை குன்றிக்கொண்டு வருகிறது, அவரிடம் விரிவான நேர்காணல் செய்யவேண்டும் என்று சொன்னார். அதற்கான வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.
இத்தனைப் புதுமைத் தொழில்நுட்பங்கள் நம் கைக்குக் கிடைத்த பிறகும், இப்படிப் பலரையும் முறையாக ஆவணப்படுத்தாமல் வெறுமனே வழியனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக