திங்கள், 12 நவம்பர், 2012

மன அழுத்தத்தைக் குறையுங்கள்!

சொல்கிறார்கள்

"மன அழுத்தத்தை க் குறையுங்கள்!'

குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் லோகநாயகி: ஒவ்வொரு ஆண்டும் குழந்தை இல்லா தம்பதியினர் பிரச்னை, 10 சதவீதமாக அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம், தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள். அதிக வயதான பின் திருமணம் செய்து கொள்ளுதல், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் தான், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்துள்ளதற்கு காரணம். இவற்றைக் குறைத்தாலே, பாதிப் பிரச்னை தீர்ந்து விடும்.பொதுவாக ஒரு பெற்றோர் தன் குழந்தையை நன்கு படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைப்பதுடன், தங்கள் கடமை முடிந்து விடுவதாக நினைக்கின்றனர்.
ஆனால், இது சரியல்ல. ஒரு பெண்ணிற்கு சீரற்ற மாதவிலக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கான சிகிச்சையை உடனே மேற்கொள்ள வேண்டும்; இனபெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்னைகளுக்கும், முறையான சிகிச்சை அவசியம்.ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருக்கும் பெண்களுக்கு, இப்பிரச்னை, திருமணம் ஆனதும் சரியாகி விடும் என, சிலர் சொல்வர்; இது தவறு. காரணம், சீரற்ற மாதவிடாய் சுழற்சிகளால், கரு தங்குவதில், பின்னாளில் பிரச்னை ஏற்படும்.

இதே போல், ஆண்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல், துரித உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மேலும், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தங்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது மிக அவசியம்.உணவு பழக்க வழக்கங்கள் மூலம், குழந்தையின்மை பிரச்னையை ஓரளவிற்கு தவிர்க்கலாம். இருபாலரும், சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

பிரவுன் பிரெட், ஓட்மீல் என, சத்துள்ள ஆகாரம் அனைவருக்கும் அவசியம். "ஆன்டி - ஆக்சிடன்ஸ்' மூலம், கருமுட்டையின் தரம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் வரை அதிகமாக உற்பத்தியாகும்.இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தம் எங்கும் நிறைந்துள்ளது. ஆனால், நாம் சிறிது நேரத்தை இதற்காக ஒதுக்கி, மன அழுத்தத்தை போக்கும் விதமாக, இசை கேட்பது, தியானம் செய்வது போன்றவற்றை பின்பற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக