வியாழன், 15 நவம்பர், 2012

இலங்கைத் தமிழர்காக அனைத்துக் கட்சி கூட்டம்: கோ.க.மணி

இலங்கைத் தமிழர்  சிக்கலுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டம்:  

கோ.க.மணி கோரிக்கை

First Published : 15 November 2012 07:02 PM IST
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிóக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டானியா தமிழர் பேரவை சார்பில் நவம்பர் 7 முதல் 9-ம் தேதி வரை லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் ஜி.கே. மணி, வியாழக்கிழமை காலை சென்னை திரும்பினார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே. மணி பேசியது:-
லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராடாமல் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தமிழர்களும், இங்கிலாந்து எம்.பி.க்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
எனவே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கவும், இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை வலியுறுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக