திங்கள், 12 நவம்பர், 2012

பி.ஒ.நி.(பி.பி.சி.) இயக்குநர் பதவி விலகல்

பிபிசி இயக்குநர் பதவி விலகல்

First Published : 11 November 2012 04:23 PM IST
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் என்ட்விஸ்டல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் வேல்ஸில் நிகழ்ந்த சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து, கடந்த மாதம் பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அரசியல் பிரமுகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத்தொடர்ந்து அவர்மீது பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் குற்றம்சாட்டை அளித்த நபர் அடையாளம் தெரியாமல் தவறான நபர் மீது குற்றம் சுமத்திவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து தவறான நபர் மீது முழுமையாக விசாரிக்காமல் செய்தி வெளியிட்டதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக ஜார்ஜ் என்ட்விஸ்டல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக