First Published : 02 Oct 2011 03:54:31 PM IST
சென்னை, அக்.2: இந்தியாவில் மரணட தண்டனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும், ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்யக் கோரியும் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரதத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடங்கிவைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், உலகில் 107 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை இருக்கும் நாட்டை விட மரண தண்டனை இல்லாத நாடுகளில்தான் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. தமிழ்நாட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என மக்கள் கொந்தளித்து எழுந்தனர்.நீதிமன்றத் தடையால் தற்போது மக்கள் நிம்மதியாக உள்ளனர். தமிழக அரசும் சட்டசபையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பிறகும் மரண தண்டனையை நிறைவேற்ற சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
By பொன்மலை ராஜா
10/3/2011 12:10:00 AM
10/3/2011 12:10:00 AM
By J.Narayanasamy
10/2/2011 5:55:00 PM
10/2/2011 5:55:00 PM