சனி, 1 அக்டோபர், 2011

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது

மாட்ரிட், அக். 1-
 
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் 34 வயது மதிக்கதக்க ஒரு மர்ம மனிதன் புகுந்தான். திடீரென அவன்தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணியின் தலையில் சுட்டான். பின்னர் மற்றொரு பெண்ணின் மார்பில் சுட்டான்.
 
உடனே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குண்டு காயத்துடன் கிடந்த 2 பெண்களையும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பிணி உள்ளிட்ட 2 பெண்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை ஆபரேசன் மூலம் உயிருடன் வெளியே எடுத்தனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Saturday, October 01,2011 05:06 PM, க.தங்கதுரை. ராந்தம் said:
கடவுள் கடவுளாக இருக்கின்றார். மனிதன் மனிதனாக இருப்பதில்லை. மிருகமாக மாறிக்கொண்டு இருக்கின்றான்.
Saturday, October 01,2011 04:13 PM, பெ வீரமுத்து said:
இறந்த பெண்ணே மீண்டும் உயிர் பிழைத்ததற்கு சமம் / அந்த குழந்தை அந்த நாட்டை ஆளும் அளவிற்கு வாழவேண்டும் என்பது எனது ஆசை .
On Saturday, October 01,2011 04:26 PM, சித்திக் said :
ஐயோ பாவோம் இந்த கருத்து நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசை பட்டுவிட்டிர் போன்கோல்
On Saturday, October 01,2011 05:00 PM, siva said :
எதுவும் நடக்கும்.இப்போதே எதையும் தீர்மானம் செய்ய முடியாது.நாடகமே உலகம். நாளை நடப்பதை யாரறிவார் ?மொத்தத்தில் ஒரு வித்யாசமான கோணத்தில் வீரமுத்து அவர்கள் ஆசை பட்டிருக்கிறார்.
Saturday, October 01,2011 04:00 PM, muthu said:
ஐயோ கடவுளே
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக