ஓமலூர், ஜூலை 26: இயற்பியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் சேது.குணசேகரனுக்கு சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.÷சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரான சேது.குணசேகரன், சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக 2008-ல் பதவியேற்றார். இவர் இயற்பியல் துறையில் 42 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ÷இயற்பியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புக்காக, அவருக்கு காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவின் ஒரு பகுதியாக சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், சிறந்த விஞ்ஞானி விருதை சேது.குணசேகரனுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் வழங்கினார்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/27/2010 3:01:00 AM