கொழும்பு, ஜூலை.25: கடந்த காலத்தைவிட ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இதை சமீபத்திய தமது இந்தியப் பயணத்தின்போது அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியை இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:புதுதில்லிக்கு 6 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தன் தலைமையில் சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விரிவாக உரையாடினோம். மேலும் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினோம்.இலங்கையில் இன்னும் 50 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில்தான் உள்ளனர். அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து இந்தியப் பிரதமரிடம் பேசினோம்.இதுதொடர்பாக இந்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார். ஒட்டுமொத்தமாக இந்தியா-இலங்கை இடையே நிலவும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை காக்க இந்திய அரசு முழுமூச்சுடன் செயல்படும் என மன்மோகன் சிங் தெரிவித்தார்.கடந்த காலங்களைவிட இந்திய அரசின் நிலைப்பாட்டில் தற்போது நிறைய முன்னேற்றங்கள் தென்படுகின்றன. இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியா மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க முயற்சிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு முனைப்புடன் உள்ளதும் உண்மை. தில்லியில் இலங்கை அரசுத் தரப்புக்கு எந்தளவு கெளரவம் அளிக்கப்பட்டதோ அதே அளவு வரவேற்பும், உபசரிப்பும் தமிழ் மக்கள் சார்பாக சென்ற எங்களுக்கும் கிடைத்தது. இது மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 10:11:00 PM
7/25/2010 10:11:00 PM
By தேசநேசன்
7/25/2010 9:21:00 PM
7/25/2010 9:21:00 PM
By Karan
7/25/2010 8:55:00 PM
7/25/2010 8:55:00 PM
By ki
7/25/2010 8:04:00 PM
7/25/2010 8:04:00 PM
By INDIAN
7/25/2010 7:56:00 PM
7/25/2010 7:56:00 PM
By INDIAN
7/25/2010 7:48:00 PM
7/25/2010 7:48:00 PM
By K.Thirumalairajan
7/25/2010 6:56:00 PM
7/25/2010 6:56:00 PM
By Observer
7/25/2010 6:48:00 PM
7/25/2010 6:48:00 PM
By sena
7/25/2010 6:36:00 PM
7/25/2010 6:36:00 PM
By kuru
7/25/2010 6:08:00 PM
7/25/2010 6:08:00 PM
By kuru
7/25/2010 6:07:00 PM
7/25/2010 6:07:00 PM
By முத்தமிழ்
7/25/2010 4:54:00 PM
7/25/2010 4:54:00 PM
By முத்தமிழ்
7/25/2010 4:53:00 PM
7/25/2010 4:53:00 PM
By naam tamilar
7/25/2010 4:13:00 PM
7/25/2010 4:13:00 PM
By naam tamilar
7/25/2010 4:12:00 PM
7/25/2010 4:12:00 PM
By arivu
7/25/2010 3:29:00 PM
7/25/2010 3:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்