புதன், 28 ஜூலை, 2010

அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் கருணாநிதி


தஞ்சையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) அமைச்சர்கள் கே.என். நேரு, கோ.சி.மணி, துணை
தஞ்சாவூர், ஜூலை 27: அநாகரிகமான வார்த்தைகளைப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.  தஞ்சாவூர் திலகர் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:  குடும்பத்துடன் திருவாரூரில் இருந்து நான் திருட்டு ரயில் ஏறி வந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் திருட்டு ரயில் ஏறி வந்தது எப்போது, எந்த ரயிலில் என்று அவர் சொல்லவில்லை. வாய் புளித்ததோ இல்லை, மாங்காய் புளித்ததோ என்பது போல வாய்க்கு வந்தபடி அவர் சொல்லியிருக்கிறார்.  ஜனநாயக ரீதியில் அரசியல் செய்து, கட்சியை வளர்த்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் பேராதரவுடன் இருப்பதே சேமநல அரசு. அத்தகைய அரசினை இழித்தும், பழித்தும் பேசுபவர்கள் மக்களிடம் எடுபடமாட்டார்கள். வெகுவிரைவில் செல்லாக் காசாகிவிடுவார்கள்.  நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார். என் பெயரைச் சொல்லி அவர் அடிக்கடி திட்டும்போது, யார் அந்த கருணாநிதி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருபவர் தானே என்று மக்களிடம் நான் பிரபலமாவேன். என்னை திட்டுபவர்கள் பெருக, பெருக, திமுக வளர்ந்துக் கொண்டேயிருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது.  யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் திராவிடர் என்ற சொல்லை வைத்துக் கொள்கின்றனர். திராவிடர் என்ற சொல்லை கட்சிக்கு வைத்தால் தான் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  மரத்தை வெட்டி கோடாரி செய்து, அந்த கோடாரியைக் கொண்டே மரங்களை வெட்டுவது போன்று, தொடக்க கால திராவிடர் இயக்கத்தில் இருந்து அந்த வார்த்தையை எடுத்து, கட்சி தொடங்கி, திமுகவை வீழ்த்தலாம் என்று நினைப்பவர்களின் கனவு கைகூடாது.  பிராமணர்களுக்கு நாங்கள் விரோதிகள் அல்ல. தனிப்பட்ட எந்த பிராமணர் மீதும் எங்களுக்கு விரோதம் கிடையாது. பிராமணப் பத்திரிகைகளும் எங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றன. அவர்கள் எங்களை விரோதம் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. ஜாதி ரூபத்தில் வரும் பார்ப்பனீயத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  தஞ்சாவூர் பெரியகோயில் 1,000-வது ஆண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதனை வெறும் விழாவாக மட்டும் கொண்டாடாமல், மாவட்டத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளோம் என்றார் கருணாநிதி.  பொதுக்கூட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வரவேற்றார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட துணைச் செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.  
கருத்துக்கள்

கலைஞர் ஆளும் கட்சியாக இருந்தால் அவரால் நன்மை பெறுவதும் அவர் எதிர்க்கட்சியாக இருந்தால் அவரைத் தாக்குவதும் இவர்களின் வேலை. எனவே, கலைஞர் நேற்றுவரை எதிர்த்தவர்கள் இன்று புகழ்பாடினால் - நாளை மீண்டும் எதிர்ப்பார்கள் என்று உணர்ந்தும் - அவர்களுக்கு முதன்மை அளிப்பதும் உண்மையாகவே கலைஞரை எக்காலத்தும் புகழ்பவர்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் அளிப்பதுமான போக்கை நிறுத்தினால் உண்மையானவர்கள் மட்டும் அவர் அருகில் இருப்பர். தமிழ் நலம் நாடுவோரை எக்காலத்திலும் உயர்த்தினால் ஆளும்கட்சியாக இருக்கும் பொழுது மட்டும் புகழ் பாடிப் பிழைப்பவர்கள் மறைந்து போவர். இவ்வாறு செய்யும் பொழுது சாதிக் கண்ணோட்டத்தில் உதவுவதும் உதறுவதுமான போக்கு காணப்படாது.அப்பொழுது குறிப்பிட்ட சாதியினருக்கு நண்பர் என்றோ பகைவர் என்றோ சொ்ல்லும் நிலைமையும் வராது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:26:00 AM
கலைஞர் பிராமணீயத்தைத் தாக்கினாலும் பிராமணர்களுக்கே உதவுவார் என்பதற்கு அவர் அருகில் இருக்கும் வாலி முதலானவர்களே சான்று. தினமணி , தினமலர் முதலான இதழ்கள் அவரைத் தாக்கினாலும் அவ்விதழ் ஆசிரியர்களுக்கு முதன்மைப் பொறுப்பு அளிப்பதும் இதழ்களுக்கு மிகுதியான விளம்பரங்கள் அளிப்பதும் கலைஞர்தான். கலைஞர் ஆளும் கட்சியாக இருந்தால் அவரால் நன்மை பெறுவதும் அவர் எதிர்க்கட்சியாக இருந்தால் அவரைத் தாக்குவதும் இவர்களின் வேலை. எனவே, கலைஞர் நேற்றுவரை எதிர்த்தவர்கள் இன்று புகழ்பாடினால் - நாளை மீண்டும் எதிர்ப்பார்கள் என்று உணர்ந்தும் - அவர்களுக்கு முதன்மை அளிப்பதும் உண்மையாகவே கலைஞரை எக்காலத்தும் புகழ்பவர்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் அளிப்பதுமான போக்கை நிறுத்தினால் உண்மையானவர்கள் மட்டும் அவர் அருகில் இருப்பர். தமிழ் நலம் நாடுவோரை எக்காலத்திலும் உயர்த்தினால் ஆளும்கட்சியாக இருக்கும் பொழுது மட்டும் புகழ் பாடிப் பிழைப்பவர்கள் மறைந்து போவர். இவ்வாறு செய்யும் பொழுது சாதிக் கண்ணோட்டத்தில் உதவுவதும் உதறுவதுமான போக்கு காணப்படாது.அப்பொழுது குறிப்பிட்ட சாதியினருக்கு நண்பர் என்றோ பகைவர் என்றோ சொ்ல்லும் நிலைமையும் வர
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:25:00 AM
Indira gandhi , Jayalaitha agiyorai patri vai koosum varthigal sonnadhu yaar? ramarai patri kevalamaga pesiyadhu yaar? 1989 il sattasabail selaiyai uruhiyadhu yaar? solvadhelaam poi , purattu.... chi
By kumar
7/28/2010 5:13:00 AM
well said Ki. How cleverly MK brining caste into this? Shit. He can marry thrice, his daughter can marry twice, his sons did wonderful job for News Readers and Dinakaran office Do we need to give respect to his family?
By SN
7/28/2010 4:52:00 AM
Devil quoting scriptures
By Deyes
7/28/2010 3:48:00 AM
அநாகரீகமான விமர்சனங்களைக் கண்டு இன்று வெட்கப் படுபவர்கள் ...அன்று திருட்டு ரயில் ஏறி இருக்கக் கூடாது !!!..அன்று திருட்டு ரயில் ஏறியது எப்படி தவிர்க்க முடியாத ஒரு சூழலோ ....அதைப் போன்று இன்று விமர்சனமும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது !!! இனி வரும் நாட்களில் அநாகரீகமான செயல்களைச் செய்யாமல் நிறுத்திக் கொண்டால் ..அநாகரீகமான விமர்சனங்கள் வார்த்தைகள் வர வாய்ப்பில்லை !!! @ rajasji
By rajasji
7/28/2010 3:28:00 AM
ஆரம்பத்தில் மதுரையில் இந்திரா காந்தி அவர்களைத், தி.மு.க. தாக்கி காயப்படுத்தி ரத்தம் வழிந்த போது அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் எத்தனை நாகரீக‌மானது என்பது தழ்நாட்டின் மனசாட்சிக்குத் தெரியும்... thedipaar.com
By ki
7/28/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக