செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அலகாபாத்:உத்தரபிரதேசத்தில் சிலர் ராவணனை அரக்கனாக நினைக்காமல், கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். புராண காலத்தில் ராமன், ராவணனை அழித் ததாக கூறப்படுகிறது. ராவணனை அழித்த ராமனுக்காக நாடு முழுவதும் கோவில்கள் உள்ளன. ராம நவமி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.



டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ராம் லீலா விழாவின் போது மிகப்பெரிய ராவண உருவம் செய்து எரிக்கப்படும். தீமையை நன்மை வெற்றி கொண்டு விட்டதாக கூறி இந்த விழா கொண்டாடப்படுகிறது.உத்தரபிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தசரா விழாவுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராவண விழாவை கொண்டாடுகின்றனர்.



ராவணன் இலங்கையை சிறப்பாக ஆட்சி செய்தான். கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கினான். இதை போற்றும் விதமாக அலகாபாத்தில் ராவணனுக்காக 10 நாள் விழா நடக்கிறது. இதையொட்டி, ராவண பக்தர்கள் ஊர்வலம் நடத்துகின்றனர். நாங்கள் ராவணனின் உருவத்தை எரிப்பதில்லை. ராவணனை தீமையின் சின்னமாக பார்ப்பதில்லை, என அலகாபாத்தின் ராவண விழாக்குழு உறுப்பினர் ஹேமேந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக