திங்கள், 18 ஏப்ரல், 2011

இப்படிச் சொல்லாவிட்டால் இவர் உயிருடன் இருக்க மாட்டார் என்பது தெரியும். எனினும் ஒரு காலத்தில் தாய் நாட்டிற்காக உயிரையும் பொருட்படுததாமல் உழைப்பேன் என்றவர் எதிரிகள் எமை 1 கோடி இட்டுஅழைத்தாலும் தொடேன் என வாழ வேண்டியவர் இவ்வாறு வாழ்ந்து என்னதான் பயனோ? வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்லவில்லை: கருணா

First Published : 18 Apr 2011 02:19:20 PM IST


கொழும்பு, ஏப்.18- இறுதிப்போரில் தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்று தற்போதைய அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், புலிகளிடம் இருந்து பொதுமக்களை ராணுவம் பாதுகாப்பாக மீட்டது என்றும் அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலர் ராபர்ட் ஓ பிளாக், இலங்கையின் உள்விவகாரங்களில் அதிகமாக தலையிடுவதாகவும் கருணா குற்றம்சாட்டியுள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 கருத்து:

  1. சிங்கள அரசில் இருந்து கொண்டு எதிராக உண்மையைக் கூற முடியாது என்பதையும் வஞ்சக(துரோக)ச் செயல் புரிவோர் அதனால் என்ன நன்மை அடைகின்றனர் என்றும் கேட்டதில் என்ன தவறு என்று வெளியிடவில்லை. தெரிந்தால் திருக்திக் கொள்ளலாமே!

    பதிலளிநீக்கு