L.T.T.E. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
L.T.T.E. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 அக்டோபர், 2012

இனப்படு கொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் தாயகப் போராளிகள மீது வழக்கு

இராணுவத்திடம் சிக்கியுள்ள 60 விடுதலைப்புலிகள் மீது போர் க் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு

ராணுவத்திடம் சிக்கியுள்ள
 60 விடுதலைப்புலிகள் மீது போர் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு
மாலை மலர் கொழும்பு, அக். 8-

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகள் பலர் ராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை இலங்கை ராணுவ அதிகாரி ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார். இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாகவும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததும் மற்றும் நாடு கடந்த தமிழீழம் அரசை அமைக்கும் ரகசிய சதித்திட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ள நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட்ட ஆதாரங்களை தீவிரவாத விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த அனுராதபுரம், வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் 4 புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 300 விடுதலைப்புலிகளில் 150 பேர் மீது மோசமான குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவே அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

சனி, 6 அக்டோபர், 2012

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு நாளுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு  நாளுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு
  
பாரீஸ், அக். 6-

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்க விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சுவிஸ் கிளை அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிரிலும் உயர்வான தமிழீழ தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து அந்த கல்லறைத் தெய்வங்களுக்கு மாலை சாத்தி மலர் தூவிசுடர் ஏற்றி விடியலுக்காய் வரம் கேட்கும் புனித நாளாம் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 இவ்வாண்டும் அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழதேச மக்களாலும் தமிழன் உணர்வாளர்களாலும் நினைவு கூறப்படவுள்ளது.

அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் வழமை போல் 27.11.2012 செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு நடை பெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2012 நினைவெழுச்சி நாளில் தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் தன் பணியை ஆற்றுவதற்காக மாவீரர் குடும்ப உறவுகளாகிய தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

கடந்த காலங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை எமக்கு இதுவரை அனுப்பி வைக்காதவர்களும் தங்களால் கடந்த காலங்களில் விவரங்கள் தரப்பட்ட போதும் உரிய தொடர்புகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் தயவு செய்து உங்களுடனான மாவீரர் குடும்ப உறவுத் தொடர்பை பேணுவதற்கு விவரங்களை 31.10.2012க்கு முன் தந்துதவுமாறு பணி வன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 27 ஜூன், 2012

கருணாநிதியின் கபட நாடகம்!

தமிழ் ஈழம் அமைக்கப்பட்டதும் எல்லா  வணிக ஒப்பந்தங்களும் உங்கள் குடும்பத்திற்கே அளிக்கிறோம் என ஒப்பந்தம்  போட்டிருந்தால் உதவியிருப்பாரா?
 
 
கருணாநிதியின் கபட நாடகம்!



தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.  தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.  அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்தின் முற்பகுதியில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழ்நாட்டில் ஈழப்போராளிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கு தங்கியிருக்கவும் மக்களிடையே தங்கள் போராட்டத்தைக் குறித்துப் பிரசாரம் செய்யவும் நிதி திரட்டவும் தாராளமாக அனுமதிக்கப்பட்டார்கள்.  ஆனால், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும். ஆட்சியும், அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக்கூட அசைக்க அவர் தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.  1973-ஆம் ஆண்டில் இவர் முதலமைச்சராக இருந்தபோது தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பி 30-4-73 ஆம் தேதியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  ""இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு உங்களின் தார்மிக ஆதரவு உண்டா?'' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ""போராட்டத்துக்கு ஆதரவில்லை'' எனத் திட்டவட்டமாகக் கூறினார்.  அதேயாண்டில் தமிழ்நாட்டிலிருந்து செயல்பட்ட "டெலோ' இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிமருந்துகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரைத் தமிழகக் காவல்துறை கைது செய்தது. குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை அதிகாரிகள் வந்து கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். இதன் விளைவாக, ஈழப்போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டு 1983-ஆம் ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவர்களல்ல. நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்.  1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை. ஆனால், அப்போது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய வி.பி. சிங் அந்த உடன்பாட்டை மிகக்கடுமையாகக் கண்டித்தார். அது மட்டுமல்ல, அன்னிய நாடு ஒன்றின் உள்பிரச்னையை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பியதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.  1989-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் ராஜீவ் பதவி விலக நேர்ந்தது. அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.  இலங்கையில் இனப்பிரச்னை தொடர்பாக ஈழத் தமிழர் தரப்பினர் அனைவரையும் அழைத்துப் பேசி அந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டார். அவர் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். அதாவது, ஈழத் தமிழர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.  கருணாநிதியின் அழைப்பை மதித்து, ஏற்று அவருடன் பேசுவதற்காக பாலசிங்கம், யோகி ஆகியோரை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன தெரியுமா?  இந்திய ராணுவத்தினால் இலங்கையின் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கூறினார் கருணாநிதி.  இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்களையும் வரதராசப் பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களையும் விரிவாக பாலசிங்கம் எடுத்துக்கூறினார்.  புதிய தேர்தல் நடத்தி அந்தத் தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வர புலிகள் தயாராக இருப்பதாக பாலசிங்கம் கூறினார். அதைக் கருணாநிதி ஏற்கவில்லை என்பதுடன் நிற்கவில்லை. தில்லி சென்று பிரதமர் வி.பி.சிங்கைச் சந்தித்துப் பேசி, புலிகள் தனது யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறி நழுவி விட்டார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமது பணி முடிவடைந்துவிட்டதாகவும் இனி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும் கூறி இப்பிரச்னையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி.  தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை விடுதலைப் புலிகளின் தூதர்கள் சந்தித்து காயமடைந்த போராளிகள் சிகிச்சை பெறவும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிச் செல்லவும் அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதை நம்பி தமிழகம் வந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த போராளிகளைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். மருந்துகள் வாங்குவதற்காக புலிகள் கொண்டுவந்த பணத்தைப் பறிமுதல் செய்தார்.  இதுகுறித்து 23-7-1997 அன்று எனக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தில் இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி வந்தவர்களுக்கு கருணாநிதி செய்த கைம்மாறு இதுதான்.  24-8-1990-இல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் ஈழப்பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் ""தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம்'' என்று கூறினார். ஆனால், அதில் உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. இவ்வாறு கூறியதையே பிற்காலத்தில் மறுத்தார்.  மீண்டும் அவர் முதலமைச்சர் பொறுப்பு வகித்தபோது 14-5-2000 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பின்வருமாறு அறிவித்தார்: ""தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறியதற்கு அவ்வாறு தனி ஈழத்தை அமைக்கக் குரல் கொடுப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. தனி ஈழத்தை அங்கீகரிப்பதும் அங்கீகரிக்காததும் வேறுவிஷயம். தனி ஈழம் அமையத் தமிழ்நாட்டின் சார்பில் குரல் கொடுப்பேன் என்ற பொருளில் அல்ல நான் பேசியது. அங்குள்ள தமிழர்கள் எல்லா உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன்'' என்று கூறினேன் என்றார்.  இரண்டே நாட்களில், 16-5-2000 அன்று அவருடைய உள்ளக் கிடக்கையையும் புலிகள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக வெளியிட்டார். ""விடுதலைப் புலிகள் மூலம் தமிழீழம் அமைவதை ஆதரிக்கிறேன் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தமிழீழம் அமைந்தால் வரவேற்பேன் என்று சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது'' என்றார்.  தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கானத் தமிழர்களைச் சுற்றிவளைத்து குண்டு மழை பொழிந்தபோது தமிழக மக்கள் கொதித்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்திய அரசிற்கு எதிரான உணர்வு வெடித்து வெளிப்பட்டது.  இந்திய அரசையும் தனது அரசையும் மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு ஆவன செய்யாவிட்டால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வற்புறுத்தினார்கள். நிலைமை சரியில்லாததைக் கண்ட கருணாநிதி, "அமைச்சர்கள் என்ன, தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பதவி விலக வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதை வரவேற்றனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் உலகமெலாம் இருந்த தமிழர்களின் மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது.  ஆனால், 12 நாள்கள் கழிவதற்குள் கருணாநிதி தலைகீழான நிலையெடுத்தார். 26-10-2008 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்குப் பறந்து வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை எனக் கருணாநிதி அறிவித்தார்.  அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார். எதிர்க்கட்சியான பிறகு மீண்டும் தமிழீழப் பிரச்னையைப் பேசத் தொடங்கி இருக்கிறார். 18-4-2012 அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் ""இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தரவேண்டும்'' என வற்புறுத்தினார்.  இப்போது ""ஈழத்தை உருவாக்கும் பணியில் மீண்டும் ஈடுபடப்போவதாகவும் அதை விரைவில் காண்பதற்காகவே தான் உயிரை விட விரும்புவதாகவும்'' உருக்கமான வசனம் பேசியிருக்கிறார்.  கடந்த மூன்று முறை இவர் பதவி வகித்த காலகட்டத்தில் தமிழீழத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை. இவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட்ட வேளையில் கூட அதை நிர்பந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையைத் தீர்க்க இவர் எதுவும் செய்ததில்லை. மாறாக, ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என பலமுறை வெளிப்படையாகவே அறிவித்தவர் கருணாநிதி.  தமிழ் ஈழம் அமைவதற்குக் கருணாநிதி சமீபகாலமாகக் காட்டி வரும் ஆர்வமும், ஈழத் தமிழர்கள்மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பாசமும் புல்லரிக்க வைக்கிறது. ஆட்சியையும், பதவியையும் தக்க வைத்துக் கொள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டதைத் தவிர, ஈழப் பிரச்னையில் அவர் எப்போதாவது உள்ளார்ந்த அக்கறை காட்டியிருக்கிறாரா என்பதை அவரது மனசாட்சியிடம் முதலில் கேட்டுவிட்டு, பிறகு அவர் பேசட்டும். ""எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என நாமக்கல் கவிஞர் பாடிய திரைப்படப் பாடல் கருணாநிதிக்காகவே எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது.  1987-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் சம்மதமில்லாமல் ஜெயவர்த்தனவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி  உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க  இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை.  
கருத்துகள்

பதவிக்காக கொள்கையில் சோரம் போனவர்களில் தலைமையானவர் இனத்துரோகி கருணாநிதி. இவர் பேசும் தமிழ்,தமிழர் எல்லாம் சந்தர்ப்பவாதத்திற்கு மட்டுமே. தன் வாழ்நாளிலேயே கபடதாரி என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டது சந்தோசமே!
By ஷாலி
6/27/2012 7:58:00 AM
நன்றி, ஐயா. என் வாழ்வில் மறக்க முடியாத தற்கால தமிழர் வரலாற்றில் மன்னிக்க படமுடியாத ஒரு இன துரோகி திரு.கருணாநிதி. திரு.வி.பி.சிங் காலத்தில் எளிதில் தனி தமிழ் ஈழம் பெற்றிருக்க முடியும்.ஆனால் விடுதலை புல்களுக்கு பெருமை கூட கூட கூடாது என்று எண்ணியேகருணாந்தி செயல்பட்டுள்ளார். இன்று எவ்வளவு பெரிய அழிவினை ஈழ தமிழ் இனம்ஏற்றுள்ளது! அத்தனையும் தவித்திருக்க படவேண்டியதுதானே.!!
By P .Padmanaabhan
6/27/2012 7:23:00 AM
...அருமையான தலையங்கம். ஜயா தான் புலிகள் மீது எப்போதும் வெறுப்பு காட்டினார் என்று கூறும் கருணா ஜெயா அவரை மாதிரி தன சுய நல்த்திர்க்க்காகவுன் பணம் சேர்ப்பதற்காகவும் வாரிசு அரசியலகுக்க்காகவும் தி மு க போன்ற ஒரு உயர்ந்த இயக்கத்தை குடும்ப இயக்கமாக மாற்றி மக்களை ஏமாற்றவில்லை . ஜெயா எப்போதும் புலிகளை அண்டிக் கெடுத்ததில்லை .திராவிட தெலுங்கு தமிழன் நாடகம் தமிழ் இனம் அழிவுக்கு காரணம் , .மலையாளி எம் ஜி ஆர் தமிழன் நலனுக்காக பாடுபட்டவர் . அதனால் தான் இன்றளவும் அவரைப்பற்றி பேச கருணாவிற்கு திராணி தைர்யம் இல்லை.இப்போதும் தமிழன் அழிவில் முக்கிய பாத்திரம் வகித்த ஆர்யா பார்ப்பானை கலாம் அவர்களை கலகம் என்று கூறி அரசியல் செய்கிறார் ,தமிழனை நெஞ்சில் குத்துகிறார்
By ர.Krishnamurthy
6/27/2012 5:49:00 AM
தமிழன்னைக்கு பிறந்த தமிழின பச்சை தொரோகி
By SARAVANAN
6/27/2012 5:46:00 AM


வியாழன், 2 பிப்ரவரி, 2012

Recognition for the party of LTTE is cancelled : விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு நீக்கம்

விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு ரத்து

First Published : 02 Feb 2012 03:01:05 AM IST


கொழும்பு, பிப். 1: இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் (பி.எஃப்.எல்.டி.) பதிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது.    இதுதவிர, ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (இஎன்டிஎல்எஃப்), இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனர் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பதிவைப் புதுப்பிப்பதற்காக ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத காரணத்தாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதன், 18 ஜனவரி, 2012

Stamp of prapakaran in london, flag of tiger in france: இலண்டனில் பிரபாகரன்… பிரான்சில் புலிக் கொடி

லண்டனில் பிரபாகரன்… பிரான்ஸில் புலிக் கொடி! - ஜூனியர் விகடன்

புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழ்ஈழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், ‘ஐ ஹேவ் ட்ரீம்’ என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திரிகோண மலையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியானது. கனடாவில், ‘தமிழ் இனப் படுகொலை’ என்ற குறியீட்டுடன் தபால் தலை வெளியானது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட்டு, மீண்டும் இலங்கைக்குக் கலக்கத்தை உண்டாக்கி இருக் கிறார்கள், ஈழத் தமிழர்கள்.‘விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்… சுதந்திரத் தமிழ் ஈழப் போராட்டம் முடிந்தேபோனது’ என்று சிங்களர்கள் கொக்கரித்தாலும்… புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா-வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்ஷேவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள்.
”எப்படி இது சாத்தியமானது?” என்று,  இங்கிலாந்தில் தபால் தலையைக் கொண்டு வந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். இவர், 2009-ம் ஆண்டு ஈழப்போரின்போது லண்டனில் உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத் தையும் ஈர்த்தவர். ”ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டத்தின் வளர்ந்த பல நாடுகளில், அந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில், அவர்களுக்கு விருப்பமான தபால்தலையை வெளியிட அனுமதி உள்ளது. அந்த விதிமுறைகளின்படியே நான், எங்களது தேசியத் தலைவர் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட முயற்சி எடுத்தேன். இதற்காக முதலில் ‘ராயல் மெயில்’ என்ற இங்கிலாந்து தபால் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். நமது கோரிக்கையை அவர்கள் நியாயமானது என்று கருதி ஏற்றுக்கொண்டால் மட்டுமே தபால்தலை வெளியிட அனுமதி கொடுப்பார்கள். பிரபாகரனின் தபால்தலை வெளியிட நான் விடுத்த விண்ணப்பத்தை ராயல் மெயில் ஏற்றுக்கொண்டு, முதல் தரத் தபால்தலையாக வெளியிட்டது.
இந்தத் தபால்தலையை உபயோகித்து, அனைத்து வெளிநாடுகளுக்கும் தபால் அனுப்ப முடியும். இது எங்களுடைய தமிழ் மக்களின் வெற்றி… எங்கள் நாடு விடுதலை அடையும் வரை எங்கள் போராட்டம் பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார் நம்பிக்கையோடு.
பிரபாகரன் தபால்தலை வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, தமிழ் ஈழக்கொடி, மலர் என்று 11 தமிழீழச் சின்னங்களை தாங்கிய தபால் தலைகள் பிரான்ஸில் வெளியாகி இருக்கின்றன.
‘முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல…’ என்ற கவிஞர் காசிஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது!
மகா. தமிழ்ப் பிரபாகரன்
நன்றி : ஜூனியர் விகடன்

சனி, 26 நவம்பர், 2011

Senators urge US to take lead role in Sri Lanka investigations


Senators urge US to take lead role in 

Sri Lanka investigations

[TamilNet, Thursday, 24 November 2011, 15:09 GMT]
In a letter to United States Secretary of State, Hilary Clinton, three senior Senators have called for "United States to openly take the lead in pressing for an independent international commission, either by the UN Human Rights Council or under the [UN's] Secretary General's own authority," if Sri Lanka fails to take "credible steps to investigate and hold perpetrators accountable for the array of allegations documented in the UN Panel of Experts report." Senators also expressed concern that "since the end of the war the [Sri Lanka] military has supplanted or interferes in civil administration in the North, and that more than thousand detainees with suspected LTTE links, names withheld, reportedly remain without charge, without access to Red Cross or family."

Senator Robert Casey
Senator Robert Casey
Senator Benjamin Cardin
Senator Benjamin Cardin
Senator Patrick Leahy
Senator Patrick Leahy
Vermont Senator and Chairman of the Senate Judiciary Committee, Patrick Leahy, Pennsylvania Senator and Chairman - Subcommittee on Near Eastern and South and Central Asian Affairs of the Foreign Relations Committee, Robert Casey,Maryland Senator and Chairman of the subcommittee on International Development and Foreign Assistance, Economic Affairs, and International Environmental Protection of the Foreign Relations Committee, Benjamin Cardin, jointly wrote the letter to Secretary Clinton.

The letter referred to earlier statements by Ambassador Susan Rice earlier stand on the LLRC that the commission "should fully investigate serious allegations of violations," and also the statement from the State Department which expressed it dismay that "LLRC did not possess the requisite level of "independence and impartiality."

Meanwhile, according to local reports, the LLRC has handed over the report to Sri Lanka's President and unofficial time lines have been publicized on the procedures for 'releasing' the report.

While Colombo is busy ochestrating its next round of theatrics using the LLRC report to buy further time to postpone answering war-crime charges, the question asked by Tamil diaspora circles is whether the report will provide ammunition to the big-power abettors of the genocide to further prolong the agony of the Tamils.

Moothoor villagers demand their security ensured after teacher murder


Moothoor villagers demand their security ensured after teacher murder

[TamilNet, Friday, 25 November 2011, 16:27 GMT]
Students, teachers, education officials and members of public in large numbers went in a procession Friday morning from Cheanaiyoor Central College to Champoor Police Station in the Moothoor East in Trincomalee district demanding that the culprits behind the brutal killing of a young unmarried Tamil teacher Miss Kurukulasingham Srivathani that took place on Thursday should be arrested. Srivathani left home Wednesday as usual in her scooter to Paaddaa'li-puram Government Tamil Mixed School in the Moothoor education zone, about seven km away from her place Cheanaiyoor-Kaddaipa'richchaan, which is located between two Sri Lanka Army camps, one at Paaddaa'li-puram and the other at Chanthosa-puram. Moothoor East, previously a part of the de facto Tamil Eelam administration by the LTTE is now fully occupied by the SL military.

A delegation of the civil groups at the conclusion of the procession met the Officer-in-Charge of the Champoor Police Station and put forward a demand to ensure the security of teachers and students and public in the Moothoor East.

Miss Srivathani
Miss Srivathani with garland at World Teachers Day event in her school two months ago
Later in the afternoon a condolence meeting was held in the Kaddaipa'richchaan residence of the murdered teacher Miss Kurukulasingham Srivathani who was born on 20 February 1978.

Her body was kept at the residence for the public to pay their last respects.

Moothoor Zonal Director of Education Mr.A.Vijeyanandamoorthy, former Trincomalee district parliamentarian Mr.K.Thurairatnasingham and several others spoke at the condolence meeting.

They said the death of Miss Srivathani was an irreparable loss to the educational development of Moothoor at a time student community needed dedicated teachers. Mr.S.Suntharamoorthy, Principal of the Paaddaa'lipuram Government Tamil Mixed School presided.

Later in the afternoon around three p.m. the remains of Srivathani were buried in the Hindu Cemetery at Kaddaipa'richchaan amid cries from students, teachers and people of Moothoor East.

Miss Srivathani passed out as a trained teacher from the Batticaloa Teacher Training College in 2006 and got her first appointment at Paaddaa'lipuram School.

She was honored at her school at an event held two months back on the World Teachers Day for her dedicated service.

She met her tragic death while she was on her way to school in her scooter on Thursday. Later her body was recovered from a shrub, three miles off Cheanaiyoor with cut injuries on her head.

Except her ear-ring all jewelry she was wearing and her handbag with the salary for the month of November had been reported missing. Her scooter was found lying near her body.

Related Articles:
24.11.11   Young female Tamil teacher killed in Moothoor East

திங்கள், 7 நவம்பர், 2011

US, India deploy ‘entry-refusal’ weapon against Tamil solidarity

US, India deploy ‘entry-refusal’ weapon against Tamil solidarity

[TamilNet, Saturday, 05 November 2011, 23:19 GMT]
Tamil Nadu film director and leader of the Naam Thamizhar Movement that upholds the cause of Eezham Tamils, Mr. Seeman, was refused of landing permission in the USA when he went to participate in a Tamil conference organized by three US-based diaspora associations of both Tamil Nadu and Eezham Tamils. Mr. Seeman was given with a valid visa to visit the USA but was refused entry at the New York airport on Saturday. Last month, the President of the Global Tamil Forum (GTF), the diaspora-based umbrella organisation of Eezham Tamils, Rev. Fr. S J. Emmanuel, was refused entry at Chennai airport when he travelled from Europe, despite having valid multiple entry visa to India. Whether the USA and India, long known for the misuse of visa by the Establishments, cooperate or compete in capturing Tamil polity for their agendas is the emerging question.

Naam Thamizhar Seeman
Naam Thamizhar Seeman
The US Tamil conference “Thamizhar Changkamam 2011” (the Tamil confluence) on Saturday was organized by three US-based diaspora associations, World Tamil Organization, US Tamil Political Action Council (USTPAC) and Ilangkai Thamil Sangam (Sangam) at Crown Plaza in New Jersey.

The conference was scheduled to discuss, improving lives of Tamils, war crimes investigations and coordination of activities.

According to the programme of the conference, Mr. Seeman was to deliver the keynote address besides speeches by the visiting TNA parliamentarians.

Mr. Seeman was refused entry at the New York airport on Saturday early hours.

Fr. S.J. Emmanuel
Rev. Fr. S.J. Emmanuel
When asked for reasons, Mr. Seeman was told that his connections with the LTTE would be a security threat to the USA, said a press statement from Naam Thamizhar, asking why then the US embassy in India had given him the visa.

The press statement said that Mr. Seeman was invited by the World Tamil Organization and accused that the deportation was at the behest of elements working against the Tamil nation.

While selectively deport war-torn Tamils engaged in socio-political organisation, both the USA and India on the other hand competitively build their own ‘networks’ and NGO blocs among Eezham Tamils.

Meanwhile, internationally accused war criminals of Sri Lanka travel freely to both the countries.

Writing in Guardian on 30 September 2011, about States abusing visa to counter righteous struggles of peoples, Arundhati Roy said: “Our lungs are gradually being depleted of oxygen. Perhaps it's time use whatever breath remains in our bodies to say: Open the bloody gates."

In September this year, veteran US journalist and author, David Barsamian, founder and director of Alternative Radio, and a person having cultural contacts with India for well over 45 years, was refused landing permission in New Delhi. His entry was refused for reasons not revealed to him.

In last November, a US Professor of Anthropology, Richard Shapiro, who has his family in India, was stopped from entering India and he was not even replied to his queries when he could again return to India.

Arundhati Roy says Kashmir question was the reason for the refusal of entry to both the US visitors.

Arundhati Roy in UK
Arundhati Roy
The complaint against David Barasamian according to "official sources" is that he had reported on events in Jammu and Kashmir during his last visit to India and that these reports were "not based on facts," Arundhati cited Indian officials.

“Who decides which "facts" are correct and which are not? Would Barsamian have been deported if the conversations he recorded had been in praise of the impressive turnouts in Kashmir's elections, instead of about daily life in the densest military occupation in the world (an estimated 600,000 actively deployed armed personnel for a population of 10 million people),” asks Arundhati. [The intensity of SL military occupation of the country of Eezham Tamils is worse than that of Kashmir cited by Arundhati]

The deportation of Prof Shapiro “was probably a way of punishing his partner, Angana Chatterji, who is a co-convenor of the international peoples' tribunal on human rights and justice which first chronicled the existence of unmarked mass graves in Kashmir, Arundhati said.

More than 60 prominent intellectuals, academics, journalists and writers, including Prof. Noam Chomsky, who condemned the deportations in September 2011 said that “We are dismayed that this power to send people back from the airport is slowly becoming a weapon, used to discipline and silence people who draw any kind of attention to uncomfortable truths about India.”

“We demand that the right to travel and the right to free exchange of ideas between scholars, journalists, artists, and human rights defenders be respected and protected, and that government agents not authorize the denial of entry and eviction of visitors to India, or monitor their movement. Free exchange of ideas is one of the most basic human rights and values in free democratic societies. Freedom of travel is one of the most important avenues for furthering such exchange among peoples. Recognizing this, the International Covenant on Civil and Political Rights, which India has ratified, protects freedom of expression, right to travel and scientific exchange,” said the September statement of Indian academics and journalists.

Whatever said to India is also applicable to the USA, perhaps in a more underlined way, because of the latter’s international involvements.

But, what one wonders is that how many in the USA, and how many among the ‘All India’ Indians will voice against what their Establishments are doing to Eezham Tamils in intimidating and hijacking their efforts to come out from genocide and annihilation of their nation.

Related Articles:
12.10.11   India refuses landing to GTF leader, TNA plans visit to USA


External Links:
HARDNEWS: DAVID BARSAMIAN’S DEPORTATION: Statement of Protest
The Guardian: The dead begin to speak up in India

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Dutch court convicts 5 Tamils, says 

LTTE not "terrorist"

[TamilNet, Saturday, 22 October 2011, 01:42 GMT]
The Hague district court, by refusing to brand Liberation Tigers as a "terrorist" organization, defied the current European Union policy, but convicted five Tamil naturalized dutch citizens to prison terms for using "nonviolent threats to force Tamil exiles to donate to the Tigers." The Dutch decision, in addition to being a "significant public relations victory for the Tigers" will also be critical to the on-going case in the European Court of Justice to overturn the 2006 decision by the EU to put the Tamil Tigers on the terror list, the Washington Post said. Victor Koppe, attorney for one of the defendants, said he would appeal the convictions.

The prison terms ranged from 2 years to 6 years. Selliah, the book keeper of collected funds outside Sri Lanka, received the longest prison term, according to reports.

The court said the Tigers’ 26-year battle for an independent Tamil state, which cost an estimated 100,000 lives, was a “non-international armed conflict.” That means that any atrocities committed by either side should be classified as war crimes or crimes against humanity, and not terror attacks, according to the Washington Post.

“For the LTTE, this is a very good judgment,” Koppe told The Associated Press after the verdict. “It will be Exhibit A in the LTTE procedure in Luxembourg [EU Court of Justice].”

Tamil cirlces said that the Dutch decision also vindicated the then Senator Hilary Clinton's statement on Tigers to the British Guardian where she said, "I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality-driven terroristic objectives. The bottom line is, you can't lump all terrorists together. And I think we've got to do a much better job of clarifying what are the motivations, the raisons d'être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they're seeking."

A spokesperson for Tamils Against Genocide (TAG), a US-based activist group, said: "If the Dutch case is a harbinger of future legal decisions, the post-9/11 cloud of terrorism which mischaracterized the aim and objectives of the thirty-year old Tamil national liberation struggle is receding.

"The Dutch Court's legal classification of the war as a non-international armed conflict, and not part of the Global War on Terror, raises far-reaching questions concerning the legality of counter-terrorism efforts taken by actors in the international community in Sri Lanka on a broad range of issues, from terrorism-based detentions in New York to war crimes in Mullivaikaal to Tamil asylum claims in Japan and Thailand.

"A continuation of earlier rulings in Australia and the United Kingdom sympathetic to Tamil defendants, and which also questioned the State violence, the Dutch ruling provides a basis with the force of customary international law to reject Sri Lankan justifications for war crimes and crimes against humanity that arise from domestic counter-terrorism instruments," TAG said of the Dutch Court decision.

Related Articles:
14.08.11   UK, Netherlands join fight against Koppe's EU Court filing


External Links:
BBC: Dutch court convicts five for Tamil Tiger fundraising
Guardian: 'You can't lump all terrorists together'
WP: Court convicts 5 Dutch Tamils of fundraising for Tamil Tigers but acquits them of terror links

சனி, 22 அக்டோபர், 2011

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா

தாயகக் கனவுடன் சாவினைத்
தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனைத் ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த கமுக்க உத்தரவு?

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.
குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:
அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர்.
இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது. இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன். குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார். பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.
உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது. பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன. அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது.
‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.
விடுதலை இராசேந்திரன்

திங்கள், 4 ஜூலை, 2011

மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தான் - இலங்கை அரசு

பொய்யும் புரட்டும் ஆட்சி செய்யும் நாட்டின் அரசு விரைவில்அழியும்!அழியும்! அந்தோ என்று அழியும்!அதனை அரவணைக்கும் அயலக அரசுகளும் சிதையும்! சிதையும்! பிறர் சிரிக்கச் சிதையும்! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தான் - இலங்கை அரசு

First Published : 04 Jul 2011 12:04:33 AM IST


கொழும்பு, ஜூலை 3: மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தான் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக விடுதலைப் புலிகள் கொடூரமாக செயல்பட்டதற்கான விடியோ படங்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவத்தினர் கைது செய்யப்பட்ட போர் குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற காட்சிகள் விடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விடியோ படங்களை இங்கிலாந்தின் சேனல் 4 எனும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. இந்த படம் வெளியானதும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் குற்றம் சாட்டியிருந்தார்.  இந்நிலையில் இந்த வீடியோ ஆதாரங்களை மறுத்துவந்த இலங்கை அரசு, இப்போது விடுதலைப் புலிகள் மனித உரிமைகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபாய மதவெலா தெரிவித்துள்ளதாவது: பிபிசி ஒளிபரப்பிய படங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தினரை விடுதலைப் புலிகள் கொடூரமாகக் கொலை செய்த காட்சிகளை தனியார் நிறுவனம் விடியோ படங்களாக எடுத்துள்ளது. இதை முற்றிலுமாக மாற்றி ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொன்றுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். உண்மையான படப் பதிவில் தமிழில் உரையாடல் இருப்பதையும் எதிர்ப்பாளர்கள் சிங்களத்தில் பேசியதையும் அறியலாம். ஆனால் பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்ட படங்களில் இலங்கை ராணுவத்தினர் மிகக் கொடூரமான முறையில் விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக உள்ளன. ஆனால் போரின்போது பல ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் வெகு சிலரை மட்டுமே சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்படாதவர்களில் பலரை வீடியோ படத்தில் தெரிவதைப் போல கொடூரமாகக் கொன்றுள்ளனர். இந்த விடியோ படப் பதிவுகள் ராணுவத்திடம் அளிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.  முன்னதாக பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட விடியோ பதிவுகள் போலியானவை என்றும், அது இலங்கையின் புகழை சீர்குலைப்பதற்காக ஒளிபரப்பானது என்றும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

திங்கள், 27 ஜூன், 2011

where is the money of L.T.T.E.? : விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் எங்கே?

கொல்லப்பட்டதை அடுத்து என்று எழுதுவதைவிடக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டதை அடுத்து எனக் குறிப்பிட்டால் தினமணியின் உணர்விற்கும் நடுவுநிலைமைக்கும் ஏற்றதாக அமையுமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் எங்கே?

First Published : 27 Jun 2011 01:10:06 AM IST


கொழும்பு, ஜூன் 26: விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணத்தை இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் "கேபி' என்ற குமரன் பத்மநாதன். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த பத்மநாதனை இலங்கை அரசு கைது செய்து சிறை வைத்துள்ளது.இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பணத்தை திரும்பப்பெறுவதென்பது கடினமான செயல் என்றும், இருப்பினும் ஈழத் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதை மீட்க தான் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் தான் தங்கியிருந்த போது தனி ஈழம் மலர்வதற்கு தீவிரமாகச் செயல்பட்டதாகக் கூறியுள்ள பத்மநாதன், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் இப்போதைய நிலையில் தமிழர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே சிறப்பு என்றும் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசு கைது செய்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை விடுவிக்க தான் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மந்தமான அரசு நிர்வாக நடைமுறையால் இதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் போரினால் சீர்குலைந்துள்ள பகுதிகளை சில மாதங்களுக்கு முன்பு பத்மநாதன் பார்வையிட்டார். அப்போது, ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வு, வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 ஜூன், 2011

Prapakaran's family members are alive : பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்: இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக அடுத்துச் சொல்லப்படம் நாள் எந்நாளோ? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்:
இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

First Published : 22 Jun 2011 12:36:39 PM IST

Last Updated : 22 Jun 2011 12:43:23 PM IST

கொழும்பு, ஜூன்.22: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சி எம்பியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இறுதிப் போரில் நந்திக் கடலில் நிகழ்ந்த மோதலின்போது பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பம் பாதுகாக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்பன போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் தேதி இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் வெளியிடவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்லஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பின்னர் கடைசி மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் செய்தி வெளியானது. அவரது உடலின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டதாக அஸ்வர் எம்பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்


அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன் உள்ளதாகவும் இதை அறிந்த இந்திய இலங்கை மற்றும் சர்வேதேச உளவு நிறுவனங்கள்அங்கு தமது தேடுதலை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது பொட்டம்மான் உயிரோடு உள்ளதாக் வந்த தகவலை அடுத்து தற்போதுஇந்த தலைவர் கதையும் பெரும் பரப்பகாக பேச படுகின்றது . இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் அவர்கள் தமது குரல் வழி காணொளி ஊடாக மக்கள் மத்தியில் முக்கிய வரலாற்று சிறப்பு மிகு உரை ஆற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது . இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எனக்கு இந்த தகவல் இது முக்கிய நாடு ஒன்றில் நிறுத்தி வைக்க பட்டிருந்த புலிகளின் பத்து விமானம்களும் மாயமாக மறைந்ததும் அதன் பின் புலத்தில் இவர்களது செயல்பாடு உள்ளதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி இந்த போராளி இடம் கேட்டோம் பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள் அதனால் அரசியல் தீர்வு
By Pallavaram.T.Sampath
6/22/2011 3:46:00 PM
என்னமோ நடந்து மறைக்க பட்டுள்ளது, இதில் சோனியா மற்றும் ராகுலின் பங்கு என்ன ? ராஜபக்யே மட்டும் தனியாக ஒன்றும் செய்து இருக்க முடியாது
By mirudan
6/22/2011 3:33:00 PM
அண்ணன் கண்டிப்பாக வருவார், நமக்கு தமிழீழம் கிடைக்கும் . விழ விழ எழுஒம் ......
By சிலம்பு
6/22/2011 3:13:00 PM
tamilinam meendum puthuyir pera varuvar nam tamil thalaivan pudu pollivodu.
By saravanakumar
6/22/2011 2:37:00 PM
Mr. Azwer told the Media based in Colombo, that he actually meant to say that the government was looking after the family of former JVP leader Rohana Wijeweera and had made a mistake by saying Prabhakaran's family was alive. “I will be making a statement in Parliament today to clarify my statement. In the rush I had made a mistake”, he said.- Lanka guardian today.
By அவசரக் குடுக்கை
6/22/2011 2:17:00 PM
very good news
By udhayakumar
6/22/2011 2:04:00 PM
"SRI LANKA'S KILLING FIELDS" by Channel 4 - "விடுதலைப் புலிகள் தோற்க்கடிப்பட்டார்கள்" என்றுதான் கூறுகிறதே தவிர, தமிழர்கள் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான கேள்வியான "பிரபாகரன் கொல்லப்பட்டாரா?" என்பது பற்றி எதுவுமே கூறவில்லை. எப்படியோ? புலி ஆதரவாளர்களுக்கு ஒரு புது தெம்பு (ஆறுதல்) கிடைத்து இருக்கிறது.
By Abdul Rahman - Dubai
6/22/2011 2:04:00 PM
கிரிமினல் ராஜபக்ஷே மக்களை திசை திருப்ப செய்யும் முயற்சி இது, இன படுகொலை தொடர்பான பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி . தமிழின தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது மட்டும் உண்மையே .
By அன்புக்குமரன் . இந்தோனேசியா
6/22/2011 1:51:00 PM
சரி இறந்தவருக்கு ஏன் இன்னும் மரண செர்டிபிகாடே கொடுக்கப்படவில்லை... ..ஹி .ஹி..ஹி ..ஹி இந்த செய்தி பலருக்கு பேதி போகசெயும் இல்லையா?
By KOOPU
6/22/2011 1:48:00 PM
இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எமக்கு தந்த தகவல் இது பிரபாகரன் மறைவு உண்மையா பொய்யா அவன் இன்னும் உயிருடன் வாழ்கிறாரா இல்லை மறைந்து விட்டாரா இனிமேல் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கதி என்ன ? என பல வினாக்கள் எழுகின்றன? ... இவ்வாறு செய்திகள் வரும் நிலையில் பிரபாகரன் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது ம...ேலும் தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! மேலும் தமிழ் ஈழ தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் முக்கிய நாடு ஒன்றுக்குள் நுழைந்திருப்பதாகவும் அங்கிருந்தே புலிகளின் முக்கிய சிறப்பு தளபதிகளின் வழிகாட்டலில் சர்வேதச புலிகளின் வலை அமைப்பு இயங்கிவருகின்றது அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன
By Pallavaram.T.Sampath
6/22/2011 1:40:00 PM
it seems, taking wrong decisions, prabakaran might have decided to give up his life.
By balakrishnan
6/22/2011 1:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *