வியாழன், 21 ஏப்ரல், 2011

E.B. J.E. arrested for bribe: கையூட்டு வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது

இதில் ஒப்பந்தக்காரரைப்பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் இதற்கு முன்பும் கையூட்டு மூலம் பல ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பார்; இனியும் கொடுக்கத் தயங்க மாட்டார்.   பேரத்தில் சிக்கல் என்றதும் நல்லவர் ஆக மாறியுள்ளார். இவரை  விட ஊழல் செய்தவர்களைப்பற்றி ஆதாரத்துடன் விழிப்புப்பணித்துறைக்குத் தகவல் தெரிவித்தும் ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஊழல்வாதியிடமே பணம் பெற முறையீடு உதவியாக இருந்ததுதான் கொடுமை. அதுபோல் அரசிடம் ஊழல்புரியும் சிலர் பற்றி ஆதாரங்களுடன்
முறையாகத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, ஏதோ பாவம் இந்த இளநிலைப் பொறியாளர் மாட்டிக் கொண்டார். இவரை விடப் பெருச்சாளிகள் இவர் அலுவலகத்திலேயே இருந்திருப்பர். அவர்கள்  இவரைப் பலிகடா ஆக்கியிருப்பர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 







இலஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது


சீர்காழி, ஏப்ரல் 21: சீர்காழியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது செய்யப்பட்டார். சீர்காழியில் மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணி புரிபவர் ராமச்சந்திரன். இவர் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டுக்கு மேல் செல்லும் மின் இணைப்பு தொடர்பாக ஏற்கெனவே ரூ.10 ஆயிரம் பெற்றிருந்தாராம். மேலும் ரூ.15 ஆயிரம் கொடுத்தால்தான் விரைந்து பணி முடியும் என்று சொன்னாராம். அதன்படி, இன்று காலை அந்த தனியார் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தைப் பெற்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள்

என்ன ராமச்சந்திரா உன்னோட கடமையை செய்யறதுக்கு லஞ்சம் கேட்டிருக்கையே உனக்கு வெட்கமாய் இல்லையா? நீயெல்லாம் சோறுதானே திங்கற? வாசகர்களே நீங்களே இவருக்கு என்ன தண்டனை தரலாம்னு சொல்லுங்க! அந்த "தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு இந்தியர் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்!". ஊழல் செய்யறவங்களை "களை எடுத்தோமென்றால்" பிச்சை காரர்கள் இல்லாத வலிமையான இந்தியா நிச்சயம் உருவாகும்!!.. வாழ்க பாரதம்!
By tamiliniyan
4/21/2011 4:31:00 PM
Let him to stay in the prison for 25 years. Yes. Each Rs. 1000 he is has to be punished for one year..
By Nour Ibraguime
4/21/2011 1:36:00 PM
லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது# அப்படியே "ஷாக்"ஆகிட்டேன்
By umakrishh
4/21/2011 1:16:00 PM
I am really happy to hear this news. In recent times there are so many arrests for bribery. This will teach others some lesson. Do you know the common rates for bribery. 1. To get FIR in police station mininum Rs 500 2. To get Electricity Connection min Rs 8000 3. To get House Plan min Rs 10000 - Rs 20000 4. To get Water Connection min Rs 8000
By Kanchi Thalaivan
4/21/2011 1:03:00 PM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக