சனி, 17 அக்டோபர், 2009

இன்று அ.தி.மு.க. 38-வது ஆண்டு விழா



சென்னை, அக். 16: அ.தி.மு.க. தொடங்கப்பட்டதன் 38-வது ஆண்டு விழா சனிக்கிழமை (அக். 17) தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் ஜெயலலிதா, பின்னர் கட்சி கொடியேற்றுகிறார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 38-வது ஆண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 19, 20, 21 ஆகிய 3 தினங்கள் தமிழகமெங்கும் கட்சியின் 38-வது ஆண்டு விழா பொதுக்கூட்டங்களை நடத்தவும் அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கருத்துக்கள்

கொத்தடிமை நீங்கவும் தமிழ் ஈழத்திற்காகப் போராடி வெற்றிகாணவும் மக்கள் நலன் பேணவும் எதிரிக் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படவும் ஊழலைப் புறந்தள்ளவும் இக்கட்சியினர் உறுதி எடுப்பார்களாக! (கனவுதான் காணமுடியும். என்றாலும் ஊதுகின்ற சங்கை ஊதி வைப்போமே!)

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக