ஞாயிறு, 14 அக்டோபர், 2012

SL Supreme Court to decide on governor’s approval to Divineguma bill

SL Supreme Court to decide on governor’s approval to Divineguma bill

[TamilNet, Saturday, 13 October 2012, 19:02 GMT]
The writ application filed by a Jaffna District Tamil National Alliance parliamentarian pertaining to the powers of the Northern Provincial Governor referred to the Sri Lankan Supreme Court for interpretation and determination by the Court of Appeal will be mentioned before the Supreme Court on Monday, legal sources in Colombo said. The draft bill has paved way for the establishment of a Department of Divineguma Development incorporating the existing Samurdhi Authority, Southern Development Authority and the Udarata Development Authority into a single unit under Colombo governments Development Ministry, which is headed by SL presidential sibling Basil Rajapaksa.

Colonial Governor of the Northern Provincial Council Major General (retd) G.A.Chandrasiri has given his consent to the controversial Divineguma draft bill in the absence of an elected council.

The Divineguma draft bill was tabled in parliament by the SL President sibling and the Minister of Economic Development Minister Basil Rajapaksa after it was approved by eight elected Provincial Councils, South, Western, Sabragamuwa, Uva, North Western, North Central, Central and Eastern now placed before the SL Parliament for debate.

The SL Supreme Court earlier determined that the controversial Divineguma bill should get the approval of the elected provincial councils before tabling it for debate in parliament.

But the bill was not referred to the Northern Provincial Council as its stands dissolved since the demerger of the North and Eastern Provincial Council.

Instead the colonial governor of the NPC has given his approval in the absence of elected council.

Hence the Jaffna district TNA parliamentarian Maavai Senathirajah filed a writ challenging the Governor’s approval.

In this writ application, the petitioner, Maavai Senathirajah, has complained to the Court of Appeal that the governor of the North Central Province could not express views in place of the members of the Provincial Council, while the council stands dissolved. He has said that the Court of Appeal should restrain the SL Governor from expressing views on behalf of the dissolved council.

The Court of Appeal, subsequent to hearing the counsel for the petitioner, M. A. Sumanthiran, and the Deputy Solicitor General Janak de Silva, who appeared for the respondent Governor G. A. Chandrasiri, last week referred the petition to the Supreme Court for interpretation and determination on the constitutionality of the draft bill.

The reference will be mentioned on Monday before a Supreme Court bench comprising Chief Justice Dr. Shirani Bandaranaike, Justice K. Sripavan and Justice Chandra Ekanayake.

Chronology:

A right way and a wrong way to protest

A right way and a wrong way to protest

[TamilNet, Saturday, 13 October 2012, 13:42 GMT]
In May 2009, before the civil war in Sri Lanka came to a fiery end with Sri Lanka armed forces killing tens of thousands of unarmed Tamil civilians in what has been labelled as the "crime of the century," several thousand Canadian Tamils, in protest, blocked the busy Gardiner Expressway angering Canadian motorists, and drawing condemnation from politicians. Gillian Philipupillai, a second generation Canadian Tamil, in a research paper, explores the position of diasporic Tamils in the "white settler state" through a focus on colonialism, movement, violence and sovereignty, and concludes, "[b]y racializing Tamil protesters as an intrusive mob of illegal occupiers, the Canadian state normalized and further justified mass Tamil civilian deaths and casualties on their homelands in the state of Sri Lanka."

The Gardiner protest is used to "examine racialized boundaries of dissent and the implications of resistance through occupation on indigenous land," Gillian says in the abstract to her paper.

Tamil Protest
Tamil Protest
"A group of unwanted, marked, targeted and racialized bodies asserting sovereignty on colonized land is then a powerful act of resistance," she asserts, and then asks, "[b]ut what are the implications of Tamils petitioning the Canadian state to intervene against genocide and war crimes by the government of Sri Lanka while genocide and colonial occupation is ongoing in Canada against indigenous peoples and nations? Where do diasporic subjects locate themselves in relation to indigenous sovereignty and solidarity when occupying already occupied land or making political demands as citizens or potential citizens of a white settler state?"

In a classic demonstration of the increasing involvement of Tamil diaspora youths in Tamils struggle for justice by entering academic fields including political science, sociology and law, which the earlier Tamil generations shunned, Gillian, a sociology post-graduate, focuses on the responses by four public figures of the Canadian State.

"The statements indicate how the state of exception around the genocide of Tamils was justified and further legitimized in the face of Tamil resistance against it," she asserts.

Gillian, in her paper points out for analysis, the statements by (a) Dalton McGuinty (Premier of Ontario) “I understand the passions which are here. But having said that, there is a right way and a wrong way to protest," by (b) Mayor Miller, “Endangering public safety by occupying the Gardiner or other public highways is not the right way to make that statement," by (c) Police Chief Bill Blair, “I’m very concerned about the safety of children. I think it’s an extremely dangerous situation to put children on the front line of a protest in that way, I think it puts them at tremendous risk," and by (d) Councilor Rob Ford, "if I was mayor “they [Tamils] would have been immediately removed from the Gardiner…We can’t have this bleeding heart approach anymore because people’s and kid’s lives are in danger.”

Both McGuinty and Miller’s statements appeal to implicit and explicit norms of settler colonial logic. Namely that the landscape and infrastructure of settler colonialism are legitimate because they are inherently capitalistic and exist for the purpose of facilitating white mobility and settler domination, Gillian writes, and adds, "Miller, Blair and Ford directly employ the discourse of safety, which is ironic because the only probable and apparent threat to the protesters’ safety was from the armed police forces on the Gardiner, threatening to disperse tear gas."

"Ford bluntly engages with several themes in his statements, relying upon the criminalization of dissent, the notion that racialized peoples are unfit parents and endanger their children, and that Tamils do not qualify for subjecthood and citizenship because of their inherent “hoodlumism," Gillian further criticizes Ford.

In concluding, the author reminds the readers that "[f]or Tamils we resist by acknowledging complicity in white supremacy. By acknowledging that of course it is possible, and more importantly, it is particularly necessary, for Tamils to be complicit within capitalist hierarchies of domination and slaveability. We resist within white supremacy, by examining how as Tamils, even when fleeing and resisting genocide in the state of Sri Lanka, we are complicit within colonialism and genocide against indigenous peoples, communities, nations and ways of being on Turtle Island."

Related Articles:
11.05.09   Tamil Diaspora agitates as civilian death toll rises
07.04.09   British Tamils block Westminster Bridge, demand ceasefire


External Links:
Star: Mayor warns defiant Tamils
CBC: Tamils' highway closure was 'wrong way to protest': Ont. premier
CP24: Police tolerance of Tamil protests may lessen after highway storming: expert Read more: http://www.cp24.com/police-tolerance-of-tamil-protests-may-lessen-after-highway-storming-expert-1.397525#ixzz29BgCHttG
CityTV: Gardiner Expressway Reopens Following Massive Tamil Protest
Torontosun: Mayor slams Tamil protest
Torontoist: Tamils Take to the Gardiner
Gillian: Boundaries Gillian Philipupillai


சென்னை-திருவனந்தபுரம் குண்டுத் தொடரிப் (புல்லட் ரயில்) பாதைக்கு ஒப்புதல் - che-trvm bullet train,



சென்னை-திருவனந்தபுரம்  குண்டுத்  தொடரிப் (புல்லட் ரயில்) பாதைக்கு ஒப்புதல்


புதுடில்லி:சென்னை - திருவனந்தபுரம் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க சாதகமான வாய்ப்புகள் உள்ளது, என, ஆய்வு நடத்திய ஜப்பான் குழு ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை - திருவனந்தபுரம் இடையே, பெங்களூரு, கோவை, எர்ணாகுளம் வழியாக, 850 கி.மீ., தூரத்திற்கு, புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான, சாதக வாய்ப்புகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.இதன்படி, ஜப்பான் ரயில்வே தொழில்நுட்ப குழுவினர், தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, இக்குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், அளிக்கப்பட்ட தொழில்நுட்ப குறிப்புகள், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.ஜப்பான் குழு அடுத்த அளிக்கும் அறிக்கையில், திட்டத்திற்கு ஆகும் செலவு உட்பட நிதி விவரங்கள் அடங்கிய மதிப்பீடு இருக்கும்.

இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பாதைகளில் மட்டும் புல்லட் ரயில் இயக்கும் வகையில், அதிவேக ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர்






உரத்த சிந்தனை: ஊற்றெடுக்கும் ஊழல் நதி ஆர்.நடராசன்

உரத்த சிந்தனை: ஊற்றெடுக்கும் ஊழல் நதி ஆர்.நடராசன்
 தினமலர்

ராஜா வீட்டுக் கன்றுக் குட்டி, எவ்வளவு துள்ளினாலும் கண்டிக்கப் படுவதில்லை; ராணி வீட்டுக் கன்றுக் குட்டியும், எவ்வளவு அள்ளினாலும் தண்டிக்கப் படுவதில்லை. அதுதான், ராஜ குடும்பம் பெறும் சலுகை, மரியாதை.

ஜனநாயகம் என்று, சொல்லப்படும் சோனியா நாயகத்தில், இது கூட இல்லாவிட்டால் எப்படி? பங்குதாரராக உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, பெருந்தொகையை, பிணையற்ற கடனாகப் பெற்ற கருணாநிதியின் மகள் கனிமொழி, நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அதேபோன்று, பிணையற்ற கடன் பெற்றுள்ள, நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின், டி.எல்.எப்., - டில்லி, பங்குதாரராக இருக்கும் ஒருவர், வெளியே சுதந்திரமாக இருக்கிறார். நாட்டின் எந்த விமான நிலையத்திலும், அவருக்குப் பாதுகாப்பு சோதனைகள் இல்லை.இப்படி ஓசைப்படாமல், சொத்து சேர்த்து வரும், அந்த அதிகோடீஸ்வரர் யார்? வேறு யாருமில்லை; சோனியாவின் மருமகன், ராஜிவின் மகள் பிரியங்காவின் கணவர். அவர் தான் ராபர்ட் வதேரா. இந்த ராபர்ட் வதேராவுக்கு, சில வணிக நிறுவனங்கள், எந்த அடிப்படையில் சகாயம் செய்தன; அவற்றிற்கு, அவர் என்ன செய்தார் போன்ற விவரங்களை, இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷணும் வெளியிட்டு இருக்கின்றனர். இவரது அபார வளர்ச்சியைப் பார்ப்பதற்கு முன், இவரது குடும்பப் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்வோமா?

இவர், 1969ம் ஆண்டு பிறந்தவர். தந்தை ராஜேந்தர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்; தாயார், ஸ்காட்லாந்துப் பெண்மணி. முதலில், இவர் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களை வாங்கி விற்றவர். அந்தக் காயலான் கடை வியாபாரத்தில், பெரிய அளவு லாபம் இருக்க முடியாது.ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார், அரசியல் தொடர்பால். இவரது முதல் தொடர்பு, போபர்ஸ் பீரங்கி விற்பனைத் தரகரான குட்ரோச்சி. அவர் மூலம், பிரியங்காவின் நட்பு கிடைத்தது. அப்புறம் அபார வளர்ச்சி.இவர், பிரியங்காவைத் திருமணம் செய்து கொண்டது, 1997ல். பின், தொழிலில் ஏறுமுகம். அடுத்த சில ஆண்டுகளில், சந்தேகத்திற்கிடமான சூழலில், இவரது சகோதரர் உயிரிழந்தார். இவரது சகோதரி, ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்தார்; தந்தை தற்கொலை செய்து கொண்டார். எல்லாச் செய்திகளுமே, அடக்கி வாசிக்கப்பட்டன.

இந்தக் காலக்கட்டத்தில் தான், ராபர்ட் வதேரா, பிரம்மாண்டமாக வளர்ந்தார்.ராபர்ட் வதேராவுக்கு, டில்லியின் ஹில்டன் கார்டன் ஓட்டலில், பெருமளவு பங்கு உண்டு. பல உள்நாட்டு நிறுவனங்களிலும், கணிசமான பங்குகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களிலும், வணிகத் தொடர்புகள் உண்டு.குறிப்பாக, டில்லியில் உள்ள, டி.எல்.எப்., என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். இது, நாட்டின் மிகப்பெரிய, "ரியல் எஸ்டேட்' நிறுவனம். காமன்வெல்த் போட்டி தொடர்பான கட்டுமான ஒப்பந்தங்கள், இதற்குத்தான் தரப்பட்டன. அதனால் தான், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் என்று பரவலாகப் பேசப்பட்ட போதும், அப்போதைய ஒலிம்பிக்ஸ் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியை விசாரணை அமைப்புகள் நெருங்கவில்லை.அரசு சட்ட திட்டங்கள், இவருக்கு வளைந்து கொடுத்து, இவரது வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்திய விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், இவருக்குத் தனிச் சலுகை, எழுத்துப் பூர்வமாகத் தரப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் முதலிய, 33 அதி முக்கிய பிரமுகர்களுக்கு பதவி காரணமாக, விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை இல்லை. அவர்கள், நேரே விமானத்தில் சென்று அமரலாம். இந்தியத் தூதரகங்களிலும், இவர்களுக்குப் பாதுகாப்புச் சோதனைக்கு விதிவிலக்கு உண்டு. இதே சலுகை, ராபர்ட் வதேராவுக்கும் தரப்பட்டிருக்கிறது. இவரது உடமைகள், சோதனை செய்யப்படுவதில்லை.விமான நிலையங்களில், பாதுகாப்புச் சோதனைக்கு விலக்கானவர்கள் பற்றிய அறிவிப்புப் பலகையில், வதேராவின் பெயரை பார்க்கலாம். ராபர்ட் வதேரா, எந்த அரசு பொறுப்பிலும் இல்லை; கவுரவப் பதவியும் கிடையாது. ஏன் இந்தச் சிறப்பு சலுகை?

இதை எந்த இந்திய அரசியல்வாதியும், இதுவரை எதிர்த்ததாகத் தெரியவில்லை. இந்தச் சலுகை இருந்தால், இந்தியாவிலிருந்து எதையும் கடத்தி போக முடியும். இத்தாலியில் விலை மதிப்பற்ற இந்தியப் பழம்பெரும் பொருட்கள் கிடைக்கின்றன. இவர், இத்தாலியில் இப்படிப்பட்ட கடை வைத்திருக்கிறார்.ராபர்ட் வதேராவுக்கு, "யூனிடெக்' நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்கிறார் பெயரை வெளிக்காட்டாத, ஒரு அயல்நாட்டுச் செய்தியாளர். அதுமட்டுமல்ல, பல நிறுவனங்களில் பிணையற்ற கடன் பெருமளவுக்கு வாங்கியிருக்கிறார். ஓட்டல்கள் நடத்துகிறார்; சொந்த விமானங்கள் வைத்திருக்கிறார். அவற்றை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார். புகாரும் இல்லை; திகாரும் இல்லை. மகிழ்ச்சியுடன் வெளியே இருக்கிறார்.

சி.பி.ஐ.,யின் கரங்கள், இவரை நெருங்க முடியாது. சி.பி.ஐ.,யை இயக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை, அந்த பதவியில் நியமித்ததே, இவரது மாமியார் தானே. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர்கள், 100 கோடி இந்திய மக்கள்.எகிப்தில், டுனிஷியாவில் வெடித்தது போல், இந்தியாவிலும், மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இரண்டாவது சுதந்திரப் போராட்டம் பிறக்க வேண்டும். காந்தி போன்றவர்களால்... போலி காந்திகளால் அல்ல!

கெஜ்ரிவாலும், பூஷணும் கேள்விகள் எழுப்பிய பின், அரியானா முதல்வரைக் கூப்பிட்டு, சோனியா பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார்.இப்போதும், சோனியா நேரடியாக எதுவும் சொல்லவில்லை. மருமகனைச் சொல்லவிடவில்லை. எல்லாவற்றிலும், பயன் இவருக்கு; பழி மற்றவர்களுக்கு என்றிருக்கும் போது, மற்றவர்களே பதில் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றிருக்கிறார். என்ன நிர்வாகம், இந்த நிர்வாகம்?

தினந்தோறும் பயனுள்ள, பயனற்ற விவாதங்களை நாள் முழுவதும் நடத்தும் சேனல்காரர்கள், எத்தனையோ பெருந்தலைகளை அழைத்தும், கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனரே. விழிகளையும், விரல்களில் பென்சிலையும் உருட்டும் சேனல் கேள்வியாளர்கள், இதுவரை சோனியாவை விட்டு வைத்துள்ளதன் மர்மம் என்ன?மன்மோகன் சிங் வெறும் முகமூடி. சோனியாதான் சூத்ரதாரி என்பது, அத்வானி உட்பட, எல்லாருக்கும் தெரியுமே. அவர்கள் கூட, ஏன் சோனியா மீது பாயாமல், மன்மோகன் சிங்கையே மீண்டும் மீண்டும் நோண்டுகின்றனர்? எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஏன் வாய் திறக்கவில்லை? அவர்களில் பலர் அமைச்சர்களாக இருந்தவர்கள். மீண்டும், அமைச்சர்களாகப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுக் கொட்டில்களிலும் கன்றுக்குட்டிகள் இருக்கின்றன!
Email: hindunatarajan@hotmail. com

ஆர்.நடராஜன்,கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர் 


தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது த் திட்டம் - solar street lights

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது த் திட்டம்

 கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு விளக்குகள்பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச் செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த, சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், "ரிமோட் கன்ட்ரோல்' முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

இம்மண்டலங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில், 15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில், சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


- நமது சிறப்பு ச் செய்தியாளர், தினமலர் -

தொடரிப் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை ப்பூச்சி ஒழிப்பு : Fumigative chamber for eradicatiing rats in train coaches


தொடரிப் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டை ப்பூச்சி ஒழிப்பு : நவீன எந்திரம் அறிமுகம்

இரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க, நவீன எந்திரம், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "இதன் மூலம், ரயில் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டால், மூன்று மாத காலத்திற்கு மீண்டும் மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி இப்பெட்டிகளுக்கு வராது' என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள், முறையாக பராமரிக்கப் படாததால், ரயில்களில் எலி, மூட்டைபூச்சி, கரப்பான் பூச்சி தொல்லை இருப்பதாகவும், ஏ.சி., பெட்டிகளில் இவைகள் அதிகம் உள்ளதாகவும், பயணிகள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து ,புகார் விடுக்கப்பட்டு வந்தது. ரயில்வே யார்டுகளில், பெட்டிகள் சுத்தம் செய்யப்படும்போது, மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சிகளை கொல்வதற்கு விஷ மருந்து அடித்தும், எலிகளுக்கு விஷ மாத்திரைகளும் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன. தற்போது. பெட்டிகளில் சிறிய இடம்கூட, இடைவெளி விடாமல்,முழுவதிலும் விஷ வாயு செலுத்தப்பட்டு, எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகளை ஒரே நேரத்தில் ஒழிப்பதற்கு நவீன அமைப்பு, எந்திர வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, தெற்கு ரயில்வேயின், சென்னை பேசின் பாலம் அருகில் உள்ள ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகள், பராமரிப்பு மையத்தில் இப்புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில், 80 மீட்டர் நீளம்,12 அடி அகலம் மற்றும் 15 அடி உயரத்திற்கு கண்ணாடி தடுப்பு சுவருடன் கூடிய செவ்வக வடிவ கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவிற்குள், ஒரே நேரத்தில் மூன்று ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகிறது. உட்புற இருக்கைகள், கழிவறைகள் உட்பட அனைத்து இருக்கைகளின் அடிப்பகுதிகளும்,ஏ.சி., அமைப்புகளிலும் இடைவெளிகளிலும், வாயுவை அனுப்பும் சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன.
அதன் பிறகு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, இப்பெட்டிகளின் வெளிப்புறத்தில், பிரமாண்ட தார்ப்பாய் கொண்டு மூடப்படுகிறது. தார்ப்பாய், பெட்டிகளிலிருந்து விலகாமலிருக்கவும்,வெளியில் இருந்து காற்று ஏதும் உள்ளே சென்று விடாமலிருக்கவும், ஏதுவாக தரை பகுதியில் தார்ப்பாயின் மீதுமணல் மூட்டைகள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இதன் பிறகு, ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் மூலம், பெட்டிகளின் உட்பகுதியில்,"மெத்தேல் புரோமைடு' என்ற திரவ வடிவிலான வாயு செலுத்தப்படுகிறது. இந்த விஷ வாயு, பெட்டிகளின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. பெட்டிகளின் உள்ளே உள்ள மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் செத்து விடுகின்றன. பெட்டிகளில் விஷவாயு செலுத்தப்பட்டு, 24 மணி நேரம் கழித்து, கண்ணாடி கூண்டிலிருந்து மூன்று பெட்டிகளும் வெளியே காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அதன் பிறகு பெட்டிகள் மற்றும் கழிவறை கதவுகள் திறக்கப்படுகின்றன. பராமரிப்பு பிரிவு ஊழியர்கள். கவச உடைமற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு, பெட்டிகளில் ஏறி, இருக்கைகள் மற்றும் கழிவறைகளில் செத்து கிடக்கும், மூட்டை பூச்சி,எலி, கரப்பான் பூச்சிகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும், 24 மணி நேரம் வரை பெட்டிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. பெட்டிகள் முழுவதும், மீண்டும் ஒரு முறை சுத்தமாக சுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பயணிகள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. "இப்புதிய வசதியின் மூலம், தினசரி மூன்று, ஏ.சி., பெட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வசதி தெற்கு ரயில்வேயில் மட்டுமல்லாது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வேக்களிலும் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவகிறது' என, பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருணாநிதி தமிழகத்துக்கு என்ன திட்டத்தை க் கொண்டு வந்தார்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்துக்கு என்ன திட்டத்தை க் கொண்டு வந்தார்: ஓ.பன்னீர்செல்வம்

First Published : 13 October 2012 05:41 PM IST
13 ஆண்டுகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த திட்டத்தையும் கொண்டு வராத கருணாநிதிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதற்கு  வாக்களிக்க வேண்டும் என அதிமுக பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பைசல் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார். அரியலூர் மாவட்டச் செயலாளர் துரை.மணிவேல் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மா.ரவிச்சந்திரன், ஆ.இளவரசன் எம்பி, முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் ரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், தமிழக நிதிஅமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அவர் பேசியது: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 1977-க்கும் பிறகு அதிமுக போட்டியிடவில்லை என இங்கு கூறினார்கள். ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக போட்டியிடும். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதிமுகவை உருவாக்கிய போது 18 லட்சம் உறுப்பினர்கள். தற்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கால சந்ததியினரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 1 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. மின்வெட்டு பிரச்சனை. 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த திமுக அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை. தற்போது கூடுதலான மின்உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை. அவர் முதல்வராக இருந்தபோதுதான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி. அதனால் தற்போது மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா 3 முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக்க முடியும். எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கான அதிமுகவினர் உழைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கூட்டத்தில் மின்துறை அமைச்சர் ரா.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதிதுறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வரகூர் அ.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறினார்.

வன்முறை இல்லாமல் தமிழ் பேசுவோருக்கு வாணாள் மிகுதி


"வன்முறை இல்லாமல் தமிழ் பேசுவோருக்கு ஆயுள் அதிகம்'

அன்றாட நடைமுறையில் ஆங்கில மொழி கலப்பு இல்லாமல், தமிழில் உரையாடுவதை தமிழர்கள் அனுமதிப்பது இல்லை. பிறந்த குழந்தைக்கு "டாடி, மம்மி' என்று சொல்லிக் கொடுப்பது ஒருவித நாகரிகமாக மாறி வருகிறது. இன்னும் ஒரு படிமேல் சென்று ஆங்கிலம் கலந்து பேசுவோரை உலகத்தில் அனைத்தும் அறிந்தவராக கருதும் மனோபாவம்
தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சொற்களை மட்டும் பயன்படுத்தி ஒருவர் உரையாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். "தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்று, சந்திக்க வருபவரின் கையை பற்றிக்கொண்டு, இனிய முறுவலுடன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அனுபவப்படுத்துகிறார் பரசுராமன்.இவரை சந்திக்கும் நிகழ்வு அமைந்தால், பணிவாக கும்பிட்ட நிலையில் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவர் பேசும் பாணி, மனசில் நிழலாடிக் கொண்டே இருக்கும். அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களை பற்றி?
என் இல்லத்தரசி பானுமதி. பசுபதி, பவித்ரா, பபிதா என மூன்று செல்வங்கள். கடந்த 25 ஆண்டாக மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஆய்வாளர்களின் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

உங்கள் கல்வி குறித்து?
காஞ்சிபுரம் மாவட்டம் கீழாம்பூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தந்தை இறந்து விட்டதால், தாயை கவனிப்பதற்காக, 1969ல் சென்னை வந்துவிட்டேன்.

தமிழ் பேசும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
செங்கல்வராய சாஸ்திரி, அம்பலவாணன், கண்ணையா போன்ற தமிழ் ஆசிரியர்கள் ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியில் பாடம் நடத்தியவர்கள். அவர்களின் மொழி நடை, பாவனை, அன்பு கலந்த பேச்சு என்னை ஈர்த்தது. அதுவே என்னை தமிழ் பேச வைத்தது.என் திருமணத்தை நடத்தி வைத்தவரும் செங்கல்வராய சாஸ்திரி தான். தலைவர்களின் மேடை பேச்சு என்னை பேச்சாளராக்கி விட்டது. தமிழ் அறிஞர்களின் புத்தகத்தை தினமும் 20 நிமிடங்கள் படித்தபிறகுதான் தூங்கச் செல்கிறேன். இதுவே, தமிழ் ஆர்வம் மேலும் கூட வழிவகுத்தது. "படி, படித்து படி, படித்து படித்து படி' என்பது பாரதிதாசன் சொன்னது. இதுதான் என்னுடைய மந்திரகோல்.

மொழியை பற்றி?
தமிழ் மொழி ஒழுக்கம், மரியாதை, அன்பு போன்றவற்றை கற்றுக்கொடுக்கும். ஒரு நபரை முதல் சுற்றில் பார்க்கும்போது, "வணக்கம், தங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி', "வாங்க, உங்களுக்கு என்ன தேவை' என, கூறி பாருங்கள். பல ஆண்டு பழக்கப்பட்டவர் போன்ற உணர்ச்சியில் நனைந்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார். தமிழ் சொற்களில் அளவிட முடியாத மாண்புகள் அடங்கி உள்ளன.

திருமணங்களில் உபசரிப்பீர்களாமே?
திருமண நிகழ்ச்சியை நடத்துவோர், நிகழ்வுக்கு வருபவர்களை உபசரிப்பதற்கே நேரம் போதாதது போல் செயல்படுவர். இது போன்ற திருமண நிகழ்ச்சியில் நான் பங்கேற்றால், வாசல்படியில் நின்று, பாகுபாடில்லாமல் அனைவரையும் வணக்கம் கூறி உபசரித்து வரவேற்பேன். விருந்து நடக்கும் இடம் வரை அழைத்துச் சென்று, நாற்காலியில் அமர வைப்பேன். அதில் அவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி இருக்கிறதே, கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.

கோபப்பட மாட்டீர்களாமே?
தமிழை மட்டும் வழக்கு மொழியாக பேசிப்பாருங்கள். கோபமே வராது. எவ்வளவு இன்னல்கள், கேவலங்கள் என்னை நோக்கி வந்தாலும் கோபப்பட மாட்டேன். அது அவர்களுடைய "தரம்' என, ஒதுங்கி விடுவேன்.கோபம் ஒருவனை அழித்து விடும். ஒருவர் தாழ்ந்தவர் என்றோ, நாம் ஏன் அவரை மதிக்க வேண்டும் என்றோ நினைக்காமல், இரு கைகளையும் பற்றி, புன் சிரிப்பை மலரவிட்டு, "மகிழ்ச்சி' என, கூறி பாருங்கள். எவ்வளவு பெரிய எதிரியும் அந்த அன்பில் விழுந்து விடுவார்.

பொது இடங்களில்?
ஒரு முறை மாநகர பேருந்தில், பயணம் செய்த போது, அகண்டபாதைக்கு (பிராட்வே) ஒரு பயணசீட்டு தாருங்கள் என, கேட்டேன். "எங்க போனுமுன்னு கேட்டா, ரோட்டுக்கு போனுமுனு சொல்லுற' என, நடத்துனர் குறைபட்டு கொண்டார்.மற்றொரு நாள், நீதிமன்ற வளாகத்தில், ஒரு நீதிமன்ற வில்லை (கோர்ட் பீஸ் ஸ்டாம்ப்) தாருங்கள் என, கேட்டேன். பதிலாக, "ஏன் தமிழில கேட்க மாட்டியா?' என, விற்பனையாளர் திருப்பி கேட்டார். அமைதியாக புரிய வைத்தேன். அவர் ஏற்றுக்கொண்டார். கவுரவ பிரச்னை தான் நம்மை தமிழ் பேச விடுவதில்லை.

உரையாடல்கள் குறைந்து வருகிறனவே...
முகம் பார்த்து பேசினால் தொந்தரவு வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடம் உள்ளது. குடும்பத்தில் உள்ள சிரமங்களை சொல்லி தேவையில்லாத பிரச்னைகளில் மாட்டி விடுவார்கள் என்ற பயத்தில், முகத்தை கூட பார்க்காமல் பலர் கடந்து விடுகின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அணுகுமுறை இருந்தால் நட்பு அதிகரிக்கும். வன்முறை இல்லாத தமிழ் பேச்சுக்கு ஆயுள் அதிகம்.ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் பேசும்போது கிடைக்கும் பாராட்டுக்களை தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகிறேன். உயிர் மூச்சு உள்ளவரை தங்கு தடையின்றி தமிழில் பேச வேண்டும் என்பது தான் என் ஆசை.

பழங்கால இசைக்கருவிகளின் அணிவகுப்பு - எல்.முருகராசு

பழங்கால இசைக்கருவிகளின் அணிவகுப்பு - எல்.முருகராசு
  

கடந்த வாரம் சென்னையில் "கைவளம்' என்ற தலைப்பில் சர்வதேசச அளவிலான கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியின் ஒரு பகுதியாக பழங்கால இசைக்கருவிகள் பல இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியின் பொறுப்பாளராக இருந்த கோபால் அங்கு இருந்த இசைக்கருவிகள் பற்றி விவரித்துக்கூறியதுடன் இசைத்தும் காட்டிய போது பெரும் வியப்பு ஏற்பட்டது.

ராஜாக்கள் காலத்தில் வாசிக்கப்பட்ட சாகோட யாழ்,வேட்டையாட காட்டில் போகும்போது களைப்பு தீர்க்க வாசிக்கப்படும் வில்லும்,அம்பும் போன்ற வடிவில் இருக்கும் வில்யாழ்,வயலின் இசையை ஒரு குழல் மூலம் வெளிப்படுத்தும் ஐரோப்பியரின் போனோ வயலின்,ஒம் என்ற ஒலி எழுப்பும் பிரணவ காந்தா மணி,இரவு நேர சுவாமி உலாவின் போது வாசிக்கப்படும் சந்திர பிரபை மேளம்,மூன்று பக்கம் வாசிக்கக்கூடிய புஷ்கரம் எனப்படும் மிருதங்கம்,தண்ணீர் இறைக்கும் கிணறு வடிவத்தில் காணப்படும் ஜாமிதிக்கா இசைக்கருவி,மகர யாழ் என்று வித்தியாசமான இசைக்கருவிகளின் பட்டியல் நீள்கிறது.

ஆறடி உயரத்திற்கு சாத்திவைக்கப்பட்டு ஒரு தம்புராவை இசைக்கவேண்டாம்,சரியான ரிதத்தில் சுற்றி விட்டாலே அற்புதமான இசை வருகிறது.

நாகப்பாம்பு வடிவிலேயே செய்யப்பட்ட நாகஸ்வரத்தை பயப்படாமல் எப்படித்தான் வாசித்தார்களோ.

ஒரு காலத்தில் இது போன்ற பழங்கால இசைக்கருவிகளை தயார் செய்யவும்,விற்பனை செய்யவும் விரும்பி மத்திய அரசு சென்னையில் ஒரு மையத்தை துவக்கியது.காலப்போக்கில் வாங்குபவர் இல்லாததால் இசைக்கருவிகள் தயாரிப்பு நின்று போனது.இப்போது இருக்கின்ற இசைக்கருவிகளை அதன் தொன்மை குறையாமல் பாதுகாத்து நிரந்தர பொருட்காட்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தங்களது அரங்கில் வைத்துள்ளனர்.,விரும்பி கேட்கும் போது தங்களது இசைக்கருவிகளை கொண்டுவந்து பொதுமக்கள் முன் கண்காட்சியாக வைக்கின்றனர்.

இந்த இசைக்கருவிகளை பார்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய போன் எண்கள்:9962907248 ,044-28592485.

குறிப்பு: இங்கே இசைக்கருவிகளை பார்க்க விரும்புபவர்கள் சிவப்பு பட்டையினுள் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.

"யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்!'

"யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்!'
தினமலர்
கண்ணாடிச் சிற்பங்கள் மற்றும் நவீன மெழுகுவர்த்திகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்ஷா: என் சொந்த ஊர், குஜராத். "ஆர்க்கிடெக்சர்' டிப்ளமா முடித்தேன். வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தான், சென்னையில் பிசினஸ் செய்து கொண்டிருந்தவருடன், எனக்குத் திருமணம் நடந்தது. பின், ஒரு நடன நிறுவனத்தில், வரவேற்பாளராகப் பணியில் சேர்ந்தேன். குடும்பத்தை கவனிக்க நேரம் போதாததால், வேலையை விட்டுவிட்டேன். அடுத்த சில மாதங்களில், என் கணவருக்கு, பிசினசில், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது.
குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டக் கூட, கையேந்தி நிற்க வேண்டிய நிலை. அப்போது தான், ஒரு கண்காட்சி மூலம், கண்ணாடிச் சிற்பங்கள் செய்யும் தொழில், எனக்கு அறிமுகமானது. கண்காட்சியில், கண்ணாடிச் சிற்பங்களின் விற்பனையும், அதற்கு மக்களிடம் இருந்த வரவேற்பையும் கவனித்தேன். "இந்த தொழிலை, நாமே செய்யலாமே' என, யோசித்தேன்.கண்ணாடிச் சிற்ப தொழில் பயிற்சி எடுத்தேன். கடன் வாங்கி, மூலப் பொருட்கள் வாங்கினேன். வீட்டிலேயே விதவிதமான கண்ணாடிச் சிலைகள் செய்து, தெரிந்தவர் மூலம், தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்தேன். நேர்த்தியான வடிவமைப்பால், நல்ல வரவேற்பும், வருமானமும் கிடைத்தது.கண்ணாடிச் சிற்ப தொழிலுடன் கூடவே, மெழுகுவர்த்திகள் செய்யும் தொழிலிலும் இறங்கினேன். நட்சத்திர ஓட்டல்களில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகளை தயாரித்தால், வெற்றி நிச்சயம் என்பதால், அதற்கான பயிற்சிகளை எடுத்தேன்.சமையல் நேரம் போக, மீதி நேரங்களில் என் வீட்டு அடுப்படி, மெழுகுவர்த்தி தொழிற்சாலையாக மாறியது. கற்பனைத் திறனை பயன்படுத்தி, பூ, பட்டாம் பூச்சி என, பல வடிவங்களில் மெழுகுவர்த்திகள் செய்தேன். இதற்காக, "நம்பர் ஒன் குவாலிட்டி' மெழுகை மட்டுமே பயன்படுத்தினேன்.என் மகன், மகள் இருவரும், என் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக்காக, "வெப் சைட்' உருவாக்கித் தந்தனர். இதனால், என் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளிலும், வரவேற்பு கிடைக்கிறது. கொஞ்சம் பணம், கற்பனைத் திறன், மனதில் உறுதி இருந்தால், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.