ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81484520130929010412.jpg

விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்!
பெண்ணாக இருந்தும், பயத்தை விட்டுவிட்டு, விடாமுயற்சியுடன் உழைத்ததால், அடுபணி(பேக்கரி) தொழிலில் வெற்றி பெற்ற, தனலட்சுமி: நான், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பாஸ்கர், நகை கடை வைத்திருக்கிறார். பொழுதுபோக்கிற்காக, அவ்வப்போது பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை, வீட்டிலேயே செய்து சாப்பிடுவதுடன், பக்கத்து வீடுகளுக்கும் தருவேன்.
கடைகளில் கிடைப்பதை விட சுவையாக இருப்பதாக, என் தயாரிப்பை பாராட்டுவர். காலம் செல்ல செல்ல, திண்டுக்கல்லின் மற்ற பெரிய நகை கடைகளுடன் போட்டியிட்டு, முன்பு போல் கணவரால் சம்பாதிக்க இயலவில்லை. அச்சமயத்தில், நமக்கு தான் பிஸ்கட், கேக் போன்றவை சுவையாக செய்ய தெரியுமே, நாம் ஏன் பேக்கரி கடை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ள பேக்கரி கடைகளுக்கு சென்று, சாதக, பாதகங்களை விசாரித்ததுடன், பயிற்சியும் பெற்றேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையில், கணவர் உதவியுடன், 15 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெ ற்று, ‘சூர்யா கேக்ஸ் அண்ட் பேக்கரி’யை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். போட்டியாளர்களை சமாளிக்க, நவீன இயந்திரங்கள், போட்டோ பிரின்டுடன், ‘பர்த் டே கேக்’ போன்ற வசதிகளை அமைத்தேன். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், இம்முறை பழையது என்றாலும், கிராமங்கள் சுற்றியுள்ள பகுதியில் இதெல்லாம் தேவைதானா என, அப்போது திட்டியவர்கள், இன்று என் வெற்றியை பாராட்டுகின்றனர். ஏனெனில், என் கடின உழைப்பால், பேக்கரி இரண்டு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிரீம் கேக்குகளில், சிறிது நேரம் காற்று பட்டாலும் சுவை மாறிவிடும். அதனால், தயாரிப்புடன், பராமரிப்பும் இத்தொழிலில் அவசியம். ஒரு பெண்ணாக தொழில் ஆரம்பிப்பது, மிகவும், ‘ரிஸ்க்’கான காரியம் தான். ஆனால், பயத்தை விட்டுவிட்டு, விடா முயற்சியுடன் உழைத்தால், நாம் நினைத்த தொழிலில் சாதித்து காட்டலாம்.  
தொடர்புக்கு: 97919 00521

சுய­தொ­ழி­லிலும் அதிகம் சம்­பா­திக்­கலாம்!
பெண்கள் விரும்பும் பேஷன் நகை­களை, சுட்ட களி­மண்ணில் அழ­காக செய்து, மாதம், 50 ஆயிரம் லாப­மீட்டும், தேன்­மொழி: நான், வேலுாரை சேர்ந்­தவள். திரு­ம­ண­மாகி சென்­னையில் வசிக்­கிறேன். எங்கள் வீட்டில் உள்ள அனை­வ­ருமே, சுய­தொழில் தான் செய்­கின்­றனர். அதனால், எனக்கும் சுய­தொழில் மீதே ஆர்வம். படிப்பு முடிந்­ததும், ‘கம்ப்­யூட்டர் எஜு­கேஷன் சென்­டரில்’ வேலை செய்தேன். அந்த அனு­ப­வத்தால், நானே, 2003ல் ஒரு கம்ப்­யூட்டர் சென்டர் ஆரம்­பித்தேன். அங்கு, ‘கம்ப்­யூட்டர் கிளாஸ்’ மட்­டு­மின்றி, ‘டியூஷன், ஸ்போக்கன் இங்­கிலீஷ்’ போன்­ற­வற்­றையும் சொல்லி தந்தேன். கலை நயத்­தோடு, வேறு ஏதேனும் கற்க, ‘பேஷன் ஜுவல்­லரி’ செய்யும் பயிற்­சிக்கு சென்றேன். பயிற்­சியில் கற்­றதை, நண்­பர்கள் மற்றும் படிக்க வரும் மாண­வர்­க­ளுக்கும் இல­வ­ச­மாக சொல்லி தந்தேன். இதனால், மற்­ற­வற்றை விட, ‘பேஷன் ஜுவல்­ல­ரி’யில் ஆர்வம் அதி­க­மா­னது. பெங்­களூரில், சுடு­மண்ணில் பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி தரு­வ­தாக அறிந்து, அங்கும் பயிற்சி பெற்றேன். பின், சென்னை, அரும்­பாக்­கத்தில், ‘நியூ டிரெண்ட்ஸ் அக­டமி‘ எனும், ஜுவல்­லரி மேக்கிங் பயிற்சி மையத்தை ஆரம்­பித்தேன். இப்­ப­யிற்சி வகுப்­பிற்கு, பெண்கள் மத்­தியில் நல்ல வர­வேற்பு கிடைத்­ததால், ‘ஓவிஸ் கிரி­யேஷன்’ என்ற வெப்சைட் ஆரம்­பித்தேன். இதன் மூலம், பல வெளியூர், ‘ஆர்­டர்’­களை எளி­தாக பிடிக்க முடிந்­தது. கிடைக்கும் ஆர்­டரில் கேட்­கப்­பட்ட நகை­களை, என்­னிடம் பயிற்சி பெற்று வரு­ப­வர்கள் மூலமே செய்­கிறேன். இதனால், குறைந்த நாட்­களில் அதிக ஆர்­டர்கள் எடுத்­தாலும், சரி­யான நேரத்தில், ‘டெலி­வரி’ செய்ய முடி­வ­துடன், பயிற்சி பெறு­ப­வர்­களும் செய்­மு­றை­யோடு எளிதில் கற்­கின்­றனர். ஏதேனும் ஒரு தனியார் நிறு­வ­னத்தில் வேலைக்கு போயி­ருந்தால், மாதம், 10 ஆயி­ரமோ, 15 ஆயிரமோ சம்­பா­தித்­து­இருப்பேன். ஆனால், சுடு­மண்ணால் ஆன, ‘பேஷன் ஜுவல்­லரி மேக்­கிங்’கில், மாதம், 50 ஆயிரம் சம்­பா­திக்­கிறேன். எனவே, சுய­தொ­ழி­லிலும் அதிகம் சம்­பா­திக்­கலாம். தொடர்­புக்கு: 98413 61192

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக