திங்கள், 11 ஏப்ரல், 2011

Kalaignar knows about the needs of the poor - kovan said : ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி: ஈ.வி.கி.ச.. இளங்கோவன்

கோவனுக்கு அல்லது கோவன் ஆதரவாளர்களுக்கு இடம் தராததால் வந்த  அறிவு எழுச்சி! (ஞானோதயம்!) தெளிந்த புத்தி தொடரட்டும்!  என்றாலும் தேர்தல் முடிந்ததும் மறுபடியும் முருங்கை மரம் ஏறவதற்கே வாய்ப்பு உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஆம்பூர், ஏப். 10: ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ. விஜய் இளஞ்செழியனை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி. அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.  திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.  கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார். 

1 கருத்து: