வியாழன், 14 ஏப்ரல், 2011

Judgement against the winning of cheranmaadhevi M.L.A. : சேரன்மாதேவி ச.ம.உ.வின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு


மே ௧௩ அன்று தெரிவித்திருந்தால் இன்னும் பொருத்தமாக  இருந்திருக்குமோ! இனயேனும் தேர்தல் வழக்குகளைக் குறிப்பிட்ட குறைந்த அளவு கால வரயறைக்குள் முடிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



சேரன்மாதேவி எம்எல்ஏவின் வெற்றி செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு





சென்னை, ஏப்.13:  2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேல்துரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என இன்று தீர்ப்பளித்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பாண்டியன்,  வேல்துரை அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதாக 2006 தேர்தலில் மனுத் தாக்கலின்போதே தான் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.எனினும் தேர்தலுக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ததாகவும், அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வந்துள்ளது என்றார் அவர்.உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி எம்எல்ஏவாக வேல்துரை கடந்த 5 ஆண்டுகாலத்தில் பெற்ற ஊதியம், படிகள் அனைத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
கருத்துகள்

delayed justice denied justice.......Best example.
By sundara ram
4/13/2011 7:42:00 PM
இது எப்படி? தேர்தல் அதிகாரிகள் மனுவை தள்ளுபடி செய்கிறார்கள்!!, ஹைகோர்ட்டும் தள்ளுபடி செய்கிறது!!. ஆனால் சுப்ரீம் கோர்ட் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கிறது. தவறு யார் மீது? தேர்தல் அதிகாரிகளும், ஹைகோர்ட்டும் எதை வைத்து தள்ளுபடி செய்கிறார்கள்?? இம்மாதிரி போனால், நீதியில் நம்பிக்கை போய் விடும்..
By பெபெடோ-USA
4/13/2011 7:22:00 PM
already he enjoyed all mla benefits
By sankar
4/13/2011 7:08:00 PM
நாம் எவ்வளவு பலவீனமான சட்ட விதி முறைகளை வைத்திருக்கிறோம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் அரசியல்வாதிகள் துணிந்து தவறு செய்கிறார்கள்!!! அவமானமே!
By கோபால்
4/13/2011 6:41:00 PM
nalla velai intha theerppu jananaayagaththirkku ethiraaga kidaiththa savukkadiyaag naangal anaivarum paarkkirom..
By ramesh
4/13/2011 6:30:00 PM
is the court waited for this day...?what a judicial system...?why shouldn't the high court judge and election commission officials punished...?
By coutforall
4/13/2011 6:23:00 PM
What happen to Rathapuram constituticency at Tirunelvely District ,Because he is the one of Congress candidate to Rathapuram . If he win after 5 years the same judgement will come . Enna ulakam
By OS Miyakkhan
4/13/2011 6:19:00 PM
what to say? its all our fate......
By te
4/13/2011 5:50:00 PM
இது தானா உங்க டக்கு
By குமார்
4/13/2011 5:48:00 PM
இது போன்ற தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல ஒரு குறிப்பிட்ட கால வரையறை வகுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்து ஒரு ஆண்டுக்குள் தீர்ப்புச்சொல்லவேண்டும். ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்குகளுக்கு வாய்தா கொடுக்காமலும் தள்ளுபடி செய்யாமலும் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டும்.
By மு.நாட்ராயன்
4/13/2011 5:45:00 PM
நமது நீதி அமைப்பையும் ஜனநாயகத்தையும் கடவுள் காப்பாற்றட்டும்!
By சக்திவேல்
4/13/2011 5:33:00 PM
நமது நீதி அமைப்பையும் ஜனநாயகத்தையும் கடவுள் காப்பாற்றட்டும்!
By சக்திவேல்
4/13/2011 5:33:00 PM
APT REQUEST.
By swaminathan
4/13/2011 5:03:00 PM
The court has shown undue haste to declare this result just on the day of next election. What will be the effect of this judgement.We can wait for another 10 years. Let the lawyers earn money. Let the precious court time be wasted like this,.Long live our judicial system.Only those who wrote opur constitution must come and answer for this effective judgement.
By K.S.Nagarajan
4/13/2011 4:55:00 PM
Excellent judiciary system in India.Enjoy politicians in your 5 year terms. ahmed
By ahmed
4/13/2011 4:47:00 PM
LATE JUSTICE IS DENIED JUSTICE, ANOTHER EXAMPLE SERANMADEVI MLA DISQULIFIED, JUST 5 YRS, WAITING FOR JUSTICE, HIS PERIOD ALSO THE SAME PERIOD. IT IS NOT JUSTICE, IT IS SHAME FOR INDIANS. PASUTHAI GANESAN
By pasuthai ganesan
4/13/2011 4:43:00 PM
இப்போதாவது நீதி கிடைத்ததே !!!!தற்போது இவர் போட்டி இடுவது செல்லுமா ???தாமதமான தீர்ப்பு , நீதி கிடைப்பதில் மறுக்க பட்டதாகவே கருத வேண்டும் !!! ஆயினும் அண்ணா தி மு க விற்கு முதல் வெற்றி !!!
By எல் சி நாதன்
4/13/2011 4:43:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக